கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Friday, December 30, 2005

இசைஞானி இளையராஜா

பதிவுக்கு பதிவு ராஜா, ராஜா என்கிறேன். இது வரைக்கும் ராஜா பாடிய பாடல் ஒன்று கூட போடவில்லை பாத்தீங்களா?. சரி இந்த பதிவில் இருந்து தொடங்கி விடலாம். தமிழ் இசையமைப்பாளர்களிலேயே மிகவும் அதிக பாடல்களை பாடியவரும் ராஜா தான். இசையமைப்பாளர்களிலேயே திறமையான பாடகரும் ராஜா தான். சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் பட்டியலிட்டால் குறைந்தது 100 பாடல்கள் கூறலாம். அவரது குரலின் பரிமாணங்களை பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவற்றில் சில இங்கே,

"காதல் கசக்குதையா" (ஆண் பாவம்) என்று நம்மை சிரிக்க வைத்ததும் அவர் குரல் தான். "சோல பசுங்கிளியே" (என் ராசாவின் மனசிலே) என்று நம்மை அழ வைத்ததும் அதே குரல் தான். "ஓரம் போ.. ஓரம் போ" (பொண்ணு ஊருக்கு புதுசு) என்று கிராமத்து கலக்கலும் உண்டு. "ராஜா! ராஜாதி ராஜன் இந்த ராஜா" (அக்னி நட்சத்திரம்) என்று மாடர்ன் கலக்கலும் உண்டு. "என் தாயெனும் கோவிலை" (அன்னக்கிளி) என்று தாய் பாசத்தையும் கொண்டு வரும், "விழியில் விழுந்து" (அலைகள் ஓய்வதில்லை) என்று காதலையும் கொண்டு வரும். "நான் தேடும் செவ்வந்தி பூவிது" (தர்ம பத்தினி) என்று ஜாலி பாட்டும் உண்டு. "ஜனனி ஜனனி" (தாய் மூகாம்பிகை) என்று பக்தி பாட்டும் உண்டு. இதெல்லாம் தவிர, "காட்டு வழி போற பொண்ணே, கவல படாதே" (மலையூர் மம்பட்டியான்) "அம்மன் கோவில் கெழக்காலே" (சகலகலா வல்லவன்) என்று எங்கள் கிராமத்தை கலக்கிய தலைப்பு பாடலும் உண்டு. இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றையும் பார்க்க ஒரு 50 பதிவு வேண்டும். ராஜாவை ஒரு தலை சிறந்த பாடகர் என்றே நான் சொல்வேன்.

1. பக்தி பாடல் போடாமல் பதிவு தொடங்கலாமா?. ராஜா என்றவுடன் "ஜனனி ஜனனி" நினைவுக்கு வராமல் இருக்குமா?. சமீபத்திய திருவாசக்தை தான் மறக்க முடியுமா?. கீதா எனக்கு முன்பே தாய் மூகாம்பிகை பாடலை வலை ஏற்றி விட்டார். அதனால் ராஜாவின் 'குரு ரமண கீதம்"-ல் இருந்து "என் ஊரு சிவபுரம்". இது ராஜாவுக்கே ரொம்ப பிடித்த பாடல் என்று நினைக்கிறேன். திருவாசகம் இசை வெளியீட்டு விழாவில், கூட்டத்தை பார்த்து "என்ன தலைவா! பாட்டு பாடணுமா?" என்று இதை பாடி காண்பிப்பார். CD விலை வெறும் 95 ரூபாய் தான். அனைத்து பாடல்களும் அருமை. கண்டிப்பாக வாங்கி கேளுங்கள்.

"என் ஊரு சிவபுரம் ! பரலோக பெரும்புரம் !
சொந்த ஊர விட்டுப்பிட்டு எப்படி இங்கே வந்தேனுன்னு தெரியலையே!
உலக வாழ்க்கை ஒருபுறம் தெரியவில்ல மறுபுறம் - என்ன பெத்த
அப்பன் சிவனிடம் எப்படி திரும்பி போவது என்று புரியலையே
"





2. இப்போ காதல். இந்த பாடலை போடாவிட்டால் துபாயில் (அமீரகம்) இருந்து ஒரு நண்பர் கல்ல விட்டு எறிவார் :-). போன பதிவில் ஜென்சி பாடல்கள் கேட்டோம். இது இன்னெரு ஜென்சி பாடல். ஒரு சகாப்த பாடல். "காதல் ஓவியம்" அலைகள் ஓய்வதில்லை-ல் இருந்து. இந்த பாட்ட போட்டா நான் அப்படியே என்னை மறந்து உட்கார்ந்திருப்பேன். பேஸ் கிட்டார இப்படியும் செய்ய முடியுமா?. பாட்டுக்கு பீட்டே பேஸ் கிட்டார் தாம்யா?. அத பாலோ பண்ணி பண்ணி, பாடுறத கேட்க முடியறதே இல்லை :-). கலக்கல் பாட்டு.






3. அமைதியா ஒரு காதல் பாட்டு கேட்டீங்க. அப்படியே ஜிவ்வுன்னு ஒரு பாட்டு. இந்த பாடலை ராஜா தொடங்குவதை நடிகர் பார்த்திபன் சமீபத்தில் சென்னையில் நடந்த ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கூறும் போது " நாம ரொம்ப சந்தோசமா இருக்கும் போது, நமக்கு செத்துடலாம்னு தோணும். இந்த பாட்டோட ஆரம்பத்தை கேட்டா எனக்கு அப்படி தோணும்" என்றார். "நான் தேடும் செவ்வந்தி பூவிது" தர்மபத்தினி படத்தில் இருந்து. வயலின் Backing ரொம்ப சூப்பரா இருக்கும். ஜிவ்வென்று பாட்டு இதோ.






4. எனக்கு பிடித்த ராஜா பாடல்களிலே (எல்லா பாட்டும் புடிக்கும் என்பது தான் உண்மை), முதல் இடம் இந்த பாட்டுக்கு தான். ஒரு வித்தியாசமான மனசை வருடும் ஒரு ஓட்டம். அன்பான வரிகள். ராஜா ரொம்ப அனுபவித்து பாடி இருப்பார். "அழகே அமுதே" பரதன் படத்தில் இருந்து.






5. அம்மான்னா சும்மா இல்லடா. அவ இல்லன்னா யாரும் இல்லடா. ராஜாவ அம்மா பாடலில் அடிக்க ஆள் உண்டா?. "பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா" என்ன பெத்த ராசா படத்தில் இருந்து.






6. சோக ராஜா. இந்த பதிவுல போடணுமான்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். ராஜாவில் குரலின் பரிணாமங்களை பார்க்கும் போது, இந்த பாடலை விட முடியலை. "சோல பசுங்கிளியே" என் ராசாவின் மனசிலே-யில் இருந்து. அழாதீங்கடே! கஷ்டமா இருந்தா அடுத்த பாட்டுக்கு ஓடி போய்ருங்க.






7. அழ வைக்கவும் முடியும். சிரிக்க வைக்க முடியும். "ஆண் பாவம்" ஒரு கிளாசிகல் காமெடி. பாண்டியராஜனா அப்படி எல்லாம் படம் பண்ணினார். நிறைய நேரம் நம்ப முடிவதில்லை. இந்த பாடலை பாண்டியராஜன் ரொம்ப நல்லா படம் பிடித்திருப்பார். அவரது உயரம், அதற்கேற்ற டான்ஸ் என்று சிரிக்காமல் இருக்க முடியாது. வரிக்கு வரி ராஜா கிச்சி கிச்சி மூட்டிக்கிட்டே இருப்பார் :-). "காதல் கசக்குதையா..வர வர காதல் கசக்குதையா". எனக்கில்லைங்க..பாட்டுங்க..






8. கத கேளு..கத கேளு...கரிமேட்டு கருவாயன் கத கேளு கத கேளுடியே.... கிராமத்தை ஒரு கலக்கு கலக்கிய பாடல் இது. காட்டு வழி போற பொண்ணே கவல பட்டதே...காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே. மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு..இது இன்னொரு கலக்கல். இப்போ கரிமேட்டு கருவாயன் கத கேட்கலாம். ராஜாவின் குரல் ரொம்ப வித்தியாசமாக, ரொம்பவே வீரமாக பாடி அலம்பி தள்ளியிருக்கிறார். கலக்குங்க தலைவா :-)






9. வாங்கடா! வந்தனம் பண்ணுங்கடா! வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா :-). "ஓரம் போ பாட்ட போடலன்னா" அது பதிவாகுமா?. ஊரே இந்த பாட்டுக்கு அல்லோலப்பட்டது என்று கேள்விபட்டிருக்கிறேன்.

"பாளையம் பண்ணபுரம் சின்ன தாயி பெத்த மகன்
பிச்சமுத்து ஏறியே வராண்டோய்..ஓரம் போ
" .. ஹாஹாஹா..:-)






10. பத்தோட முடிச்சிக்கலாம். என்ன?. 90-ல் ராஜா ஒரு பார்முலா வச்சிருந்தாரு. அது இந்த ஜோடி பாடல் பார்முலா தான். "வள்ளி வள்ளி என வந்தான்" (தெய்வவாக்கு - S.ஜானகி) "சொர்க்கமே என்றாலும்" (ஊரு விட்டு ஊரு வந்து - S.ஜானகி). அப்புறம் "நில் நில் நில்..பதில் சொல் சொல் சொல்" (பாட்டு பாடவா - உமா ரமணன்), "புன்னகையில் மின்சாரம்" (பரதன் - S.ஜானகி). செமயா பீட் செட் பண்ணி ஜம்முன்னு இருக்கும் இந்த பாடல்கள். எனக்கு பிடித்த 'பாட்டு பாடவா" பாடலோடு இந்த பதிவை முடிச்சிக்கலாம்.







நிறைய பேர் "யோவ்! அந்த பாட்ட போடாம, என்னய்யா பதிவு போடுற" என்று வருவீங்க :-) "பூமாலையே தோள் சேரவா" "மெட்டி ஒலி" "துள்ளி எழுந்தது காற்று" "ஒரு ஜீவன் அழைத்தது" அப்படியே லிஸ்ட் போட்டுட்டு போய்டுங்க. அடுத்த பதிவுல "இளையராஜா-2" வில் இதே போல இன்னொரு செட் பாடல்கள் கேட்கலாம்.

Wednesday, December 28, 2005

தெய்வீக ராகம். தெவிட்டாத பாடல் (ஜென்சி)

குழந்தை தனமான குரல். மலையாளம் கலந்த சுமாரான தமிழ் உச்சரிப்பு. இருந்தாலும் ஒரு பாடகியை உச்சத்திற்கு கொண்டு போக முடியும் என்று ஜென்சி மூலம் நிருபித்தவர் ராஜா. மொத்தமே 50-க்கும் குறைவான பாடல். அத்தனையும் ராஜாவின் டாப் 100-ல் தாராளமாக வைக்கலாம். "ஜானி" பாடல்களை யாராவது மறக்க முடியுமா?. அருமையான பாடல்கள். ஜென்சியும் எந்த பாடலிலும் நன்றாகவே பாடியிருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது குரல் நமக்கு பிடித்து போனதென்னவோ உண்மை. பாடலை தவிர்த்து, இசையை பார்த்தாலும், ராஜா ஜென்சி பாடல்களில் இசைக்கும் மிக மிக முக்கியம் கொடுத்திருப்பார். ஜென்சி பாடல்களில் இசை அவரது மற்ற பாடல்களை விட வித்தியாசமாக இருக்கும். அவரது பாடல்கள் சில,

"காதல் ஓவியம்" - அலைகள் ஓய்வதில்லை
"ஒரு இனிய மனது" - ஜானி
"என் வானிலே" - ஜானி
"மீன் கொடி தேரில்" - கரும்பு வில்
"மயிலே மயிலே" - கடவுள் அமைத்த மேடை
"இரு பறவைகள்" - நிறம் மாறாத பூக்கள்
"ஆயிரம் மலர்களே" - நிறம் மாறாத பூக்கள்
"என்னுயிர் நீதானே" - ப்ரியா
"தெய்வீக ராகம்" - உல்லாச பறவைகள்.

முதல் பாடல் "மயிலே மயிலே உன் தோகை எங்கே". நிறைய 80S பாடல்களை நினைவுக்கு கொண்டுவரும் இசை. S.P.B-ஜென்சி பாடியது. இந்த பாடலில் ரொம்பவே குழந்தை தனம் தெரிகிறது (முதல் பாடலா?). அதுவும் நன்றாக தான் இருக்கிறது.






இரண்டாவது, "மீன்கொடி தேரில்". ராஜாவின் இசை ராஜாங்கம் என்று சொல்லலாம். "அடிச்சி பட்டைய கெளப்புங்க" என்று ராஜா தன் ஆர்கெஸ்ட்ராவிடம் கூறியிருப்பார் போல. ஏன் சொல்கிறேன் என்றால், சரணம் முடிந்தவுடன் "மீன்கொடி தேரில் மன்மதராஜன்" என்று பல்லவி மறுபடி வரும் போது, ஒரு அடி வரும். பாடலின் ஓட்டத்தில் இருந்து சற்று வேறுபட்டு வரும். அது பொதுவாக ராஜாவின் இசையில் நான் பார்ப்பதில்லை. இந்த பாடல் ரொம்ப ஜாலியாக இசை அமைத்திருப்பார் போல. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் "கலக்கிட்டீங்க தலைவா".






எல்லா பாடலும் போட ஆசை தான். இருந்தாலும் மூன்றோடு நிறுத்திக் கொள்ளலாம். தெய்வீக ராகத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்ளலாம். "தெய்வீக ராகம். தெவிட்டாத பாடல். கேட்டாலும் போதும். இளநெஞ்சங்கள் வாடும்." உண்மை தான். பாடல் இதோ.




Tuesday, December 27, 2005

நாடு பார்த்ததுண்டா (காமராஜ்)

ரொம்ப நாளா இந்த பாட்ட போடணும் என்று நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ நம்ம நண்பர் டண்டணக்கா காமராஜ் பற்றி ஒரு தொடர் எழுதுகிறார். அத படிச்சிட்டு, சரி இது தான் சரியான நேரம் இந்த பாடலை போடுவதற்க்கு என்று பதிகிறேன்.

காமராஜர் பற்றி டண்டணக்கா நிறைய சொல்லியிருப்பதால் நேரா பாடலுக்கு போய்விடலாம். நேரம் இருந்தா அவரோட பதிவுகளை படிங்க. ரொம்ப நல்லா எழுதி இருக்கிறார்.

பாடலுக்கு போற முன்னாடி, ஒரு சின்ன விசயம். நான் பொறந்தது காமராஜர் பிறந்த நாளோட தான் :-). பொறந்து தான் ஒன்றும் பெரிசா பண்ணல, பொறந்ததாவது காமராஜர் பிறந்த நாளில் பிறந்தோமே என்று ஒரு சின்ன சந்தோசம் :-). நான் பிறந்தவுடன் ஊர்ல எல்லோரும் எனக்கு காமராஜ்னு பேர் வைக்க சொல்லிருக்காங்க. அம்மா தான், ஒரு நல்லவர் பெயரை கெடுக்க வேண்டாமேன்னு வைக்கலை. சரி சரி! ப்ளாஷ் பேக் போதும் என்றீங்களா.

போன மாதம் 'காமராஜ்' பட DVD எடுத்து பார்த்தேன். அருமையான பார்க்க வேண்டிய படம். இப்படியும் ஒரு தலைவர் இருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக தான் இருக்கிறது. முடிந்தால் படம் பாருங்கள்.

"நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை - நாடு பார்த்துண்டா ..

வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே
"

இசைஞானியின் இசையில் 'காமராஜ்' படப் பாடல் இதோ.




Saturday, December 24, 2005

காதல்..காதல்..காதல்

எஸ்.பி.பி-வாணிஜெயராம் பதிவு போடும் போதே, எஸ்.பி.பி-சுசிலா பாடல் போடுவதாக சொல்லியிருந்தேன். ரொம்ப நாளாச்சு. இன்று கேட்டு விடலாம். நேரே பாடலுக்கு போய்விடலாம்.

"ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
"
- என்ன தவம் செய்தேன்.






"கேட்டதெல்லாம் நான் தருவேன்! எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்! எனை நீ தடுக்காதே
"
- திக்கு தெரியாத காட்டில்





"கடவுள் மீது ஆணை, உன்னை கை விடமாட்டேன் - உயிர்
காதல் மீது ஆணை, வேறு கை தொடமாட்டேன்
"
- ராதா





"ஒரு காதல் தேவதை! இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ! ரதி தேவி அம்சமோ!
ஒரு காதல் நாயகன்! மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ் கவிதை பாடினான்
"
- சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு





"வாழ்வில் சௌபாக்கியம் வந்தது!
வந்தேன் என்றது! தேன் தந்தேன் என்றது
"
- தூண்டில் மீன்




Thursday, December 22, 2005

நேயர் விருப்பம் - 4

( சென்ற போட்டிக்கான விடை கீழே)

இந்த வார நேயர் விருப்பம். முதல் பாடல், முத்துக்குமரன் விருப்பத்தில் 'உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்" (பாட்டு இல்ல) படத்தில் இருந்து 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட". இது ஒரு கார்த்திக் படம். வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் போன படம். ஆனால் இந்த பாடல் மட்டும் ஓரளவுக்கு எல்லோர் மனதையும் கவர்ந்தது. S.P.B & சுவர்ணலதா பாடியது. ஒரு அருமையான மெலோடி. சுவர்ணலாதாவின் தொடக்க கம்மிங் அழகு. பாடலுக்கு இங்கே.





இதே போல, இன்னொரு சுவர்ணலதா பாடலையும் கேட்கலாம். இந்த படமும் ஊத்திக்கிட்டு. ஆனால் பாடல் ஹிட். "தாய் மொழி" படத்தில் இருந்து மனோ-சுவர்ணலதா குரலில் "சிங்கார மானே பூந்தேனே". சரத்குமார் நடித்த படம். இந்த பாடல் நம் மனதுக்குள் அப்படி ஒரு உற்சாகத்தை கொடுக்கும். அருமையான பீட். பாடலுக்கு இங்கே.





அடுத்து, போன பாடலுக்கு சம்மந்தம் இல்லாமல் ஒரு சோகப்பாடல். போன பதிவில் 'ஆத்மா' பாடலை கேட்டுவிட்டு கீதா எனக்கு இந்த இருமல் :-) பாட்டு ரொம்ப பிடிக்கும் என்றார்கள். அது "பயணங்கள் முடிவதில்லை" படத்தில் இருந்து 'மணியோசை கேட்டு எழுந்து". சூப்பர் டூப்பர் ஹிட் இந்த பட பாடல்கள். படமும் கூட. S.P.B யின் இன்னொரு திறமை இந்த இருமிக் கொண்டே பாடுவது. படத்தில் பாடும் போது மோகன் கலக்கி இருப்பார் :-). இனைந்து பாடுவது ஜானகி. கேட்டு மகிழுங்கள்.





இப்போ ரொம்ப வித்தியாசமான ஒரு நேயர் விருப்பம். தம்பி விஷ்ணு பின்னோட்டம் விட்டு ஒரு பாடல் கேட்டு இருந்தார். "Disco Dancer" என்ற ஹிந்தி படத்தை நடிகர் ஆனந்த்பாபு (முதல் படம்)வை வைத்து "பாடும் வானம் பாடி" என்று எடுத்தார்கள். பாட்டு எல்லாமே அப்படியே ஹிந்தி பாட்டு ரீ-மேக் தான் (பப்பி லஹரி இசை). அதில் வருகிற "அன்பே அன்பே அன்பே" பாட்டு இருக்குமான்னு கேட்டிருந்தார். இல்லன்னா அந்த ஹிந்தி பாடலையாவது போடுங்க என்று கேட்டிருந்தார். ஹிந்தியில் "ஜிம்மி..ஜிம்மி..ஜிம்மி" என்று வரும். என் அண்ணன் டில்லியில் இருந்த போது, நானும் ஹிந்தி பாடல் கேட்க ஆரம்பித்தேன். அதில் ஒன்று இந்த பாடல். இப்போது சுத்தமாக கேட்பது இல்லை :-). தம்பி விஷ்ணு விருப்ப பாடல் இங்கே.






இப்போது போட்டிக்கான விடை:

1. கொஞ்ச நாள் முன்பு ஒரு DVD வாங்கினேன். ஜானகி ஹிட்ஸ். காசு கொடுத்து வாங்கியதால் எல்லா பாடலையும் பார்த்துக் கொண்டிருந்தேன். 'நான் சிகப்பு மனிதன்" படத்தில் இருந்து ஒரு கவர்ச்சிப் பாடல். 'குங்குமத்து மேனி". தொலைக்காட்சியில் வந்தால் உடனே சேனல் மாற்றி விடுவோம். இல்லன்னா "என்னடா இவன்! அனுராதா டான்ஸ் பாத்திக்கிட்டு இருக்கிறான்" என்று வீட்டுல ஒரு மாதிரி பார்ப்பாங்க :-). பாடல் முழுவதும் பார்த்தவுடன் தான் தெரிந்தது எவ்வளவு கலக்கலான இசை என்று. டிரம்ஸ் என்ன, ட்ரம்பட் என்ன, கிடார் என்ன. அடடா! ராஜா கலக்கி இருப்பார். அதில் இருந்து தான் முதல் போட்டி Interlude போட்டேன். சரியான பதிலை கீதா சொல்லி, பரிசுப்பாடலை தட்டிக்கிட்டு போறாங்க. கீதா! உங்க விருப்ப பாடல் என்னவென்று சொல்லுங்க. இப்போ பாடல் இங்கே.





2. ராஜா இசை அமைத்த பிரபு படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது "மைடியர் மார்த்தாண்டன்". இந்த படத்தில், அவரது வழக்கமான தபேலா இல்லாமல், ஒரு வித்தியாசமான இசையை கொடுத்திருப்பார். அதில் இருந்து 'இளவட்டம் கை தட்டும்" பாடலிம் Interlude தான் இரண்டாவது போட்டி. எவரும் முயற்சி செய்யவில்லை. பாடல் குஷ்பு மேடையில் பாடுவதாக வரும், அப்புறம் அதை பார்த்துக் கொண்டிருக்கும் பிரபு அப்படியே பாடலை டூயட்டாக மாற்றிவிடுவார். இந்த போட்டியின் பரிசு எனக்கே :-).
இப்போ பாடல்.




Wednesday, December 21, 2005

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

'வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து' இப்படி ஒரு பாடல் கேளடி கண்மணி படத்தில் வரும். வந்தவுடன் ஓட்டி விடுவேன். இலக்கிய தமிழ் அலர்ஜி என்பதும், ஒன்றும் புடியாது என்பது வேற. நேற்று நம்ம குமரன்
'கோதை தமிழ்' வாசிக்கும் போது, பாடல் நன்றாக இருந்தது. இந்த பாடல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று. அடடா! நம்ம கேளடி கண்மணி பாட்டாச்சே. ராஜா எப்படி இசை அமைத்திருக்கிறார் என்று மீண்டும் கேட்டேன். இந்த குமரனின் பதிவை படித்து விட்டு பாடலை கேட்டு பாருங்கள். ராஜா மூன்று பாடல்கள் மட்டும் எடுத்து இசை அமைத்திருக்கிறார். இப்போது இந்த பாடல் எனது விருப்ப பாடலில் சேர்ந்து விட்டது. இளையராஜா இன்னும் நிறைய இப்படி பட்ட செய்யுள்களை பாடலாக இசை அமைத்தால் நன்றாக இருக்கும். நன்றி குமரன், உங்கள் பாடல் விளக்கத்திற்க்கு.

படம்: கேளடி கண்மணி
பாடல்: வாரணம் ஆயிரம்
பாடியவர்: S.ஜானகி
இசை: இளையராஜா







இதே பாடலை ஹேராம் படத்திலும் எடுத்திருக்கிறார்கள். தகவலுக்கு நன்றி குமரன். இந்த பாடல் தொடங்கியவுடன் ஓடி விடுவேன் :-), ஏதோ ஹிந்தி ஆலாபனை என்று. உள்ளே 'வாரணம் ஆயிரம்' பாடலும் வருவது இன்று தான் கேட்கிறேன். 'கேளடி கண்மணி' அளவுக்கு இல்லை :-). பாடாமல் வாசிப்பது போல போகிறது. ஆஷா போன்ஸ்லே குரல் வேறு. பாடல் இங்கே.

படம்: ஹேராம்
பாடல்: வாரணமாயிரம்
பாடியவர்: ஆஷா போன்ஸ்லே & குழுவினர்
இசை : இளையராஜா






Sunday, December 18, 2005

இசைக் கதம்பம் -2

இரண்டாவது இசைக்கதம்பத்தில் மீண்டும் சந்திக்கிறோம். முதல் இசைக்கதம்பம் எல்லோருக்கும் புடிச்சதுன்னு சொன்னீங்க. நன்றி. இப்போ தொடரலாம்.

ஹிட்டு பாட்டு:

"அன்புள்ள ரஜினிகாந்த்'. படம் இது வரைக்கும் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. எங்க ஊரு R.C கோவில்ல வருசா வருசம் திருவிழாவுக்கு இந்த படத்தை போடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன். 'ராஜினி அங்கிள், நான் இங்க இருக்கேன்' என்ற குட்டி மீனா குரலை மறக்க முடியுமா (முத்து மணி சுடரே வா). அப்புறம் 'கடவுள் இல்லமே..கருனை உள்ளமே'. சரி! அந்த படத்துல இப்படி ஒரு ஜோடி பாட்டு எப்படி? . படம் பார்த்தவங்க சொல்லுங்கப்பா. 'தேன் பூவே பூவே வா'. அக்மார்க் 80s பாட்டு. கிடார் ரொம்ப ரொம்ப அழகாக பாடல் முழுவதும் பயன்படுத்தி இருப்பார். அருமையான பீட். பாடினது S.P.B & ஜானகி.





அடுத்தாத்து ஆல்பட்:

இளையராஜாவை விட்டா வேற பாடல்கள் சில ஒரு காலத்தில் கேட்பதுண்டு. இப்போ சுத்தம் :-). அதில் சில பாடல்களை இந்த தலைப்பில் வாரம் ஒன்று பார்க்கலாம்.

வித்யாசாகர். இளையராஜாவுக்கு அப்புறம் ஒரு காலத்தில் நான் ரசித்த ஒரு இசை அமைப்பாளர். அவரோட மெலொடி எல்லாம் ஒரு காலத்தில் (ஆவர் ஹிட் ஆவதற்க்கு முன் ரொம்ப நல்லா இருக்கும்). நடிகர் அர்ஜுன்-வித்யா சாகர் காம்பினேசன் ரொம்ப கலக்கலாக இருக்கும். தமிழில் 'ஜெய்கிந்த்'ல் தான் அறிமுகமானார் என்று நினைக்கிறேன். 'சுபாஷ்' 'செங்கோட்டை' படப் பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கும். 'ரன்' வரைக்கும் எனக்கு அவரை பிடித்திருந்தது. அப்புறம் அவர் ஏனோ அவ்வளவாக ரசிப்பதில்லை. என் ரசனை மாறி விட்டது என்று நினைக்கிறேன். 'செங்கோட்டை" ( அர்ஜுன்-ரம்பா) படத்தில் இருந்து 'பூமியே! பூமியே" பாடல். எனக்கு எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல். மீண்டும் S.P.B & ஜானகி. இரண்டு பேருமே ரொம்ப ரொம்ப அழகாக பாடி இருப்பார்கள். S.P.B பேஸ் வாய்சில் பாடி அசத்தியிருப்பார். பாட்டு இங்கே.





அக்கம் பக்கம்:

தமிழ் பாடல்களை தவிர வேறு மொழிப்பாடல்கள் எத்தனை பேர் கேட்பீங்கன்னு தெரியலை. இசைக்கு மொழி ஏது. (ஒரு காலத்துல ஹிந்தி பாட்டு கேக்கலையா :-). இந்த தலைப்புல ராஜாவின் இசையில் சில மலையாளப் பாடல்கள் பதிகிறேன். கேட்க முயற்ச்சி பண்ணிப் பாருங்க.

"Poomukhappadyyil Ninneum Kaathu". இது ஒரு மோகன்லால் படம் என்று என் CD சொல்கிறது. 1986ல் வெளி வந்த படம். யேசுதாஸ் குரலை மலையாளத்தில் சொல்லவும் வேண்டுமா. இதுவும் ஜானகி தான். ஒரு தடவை பொறுமையாக கேட்டுப் பாருங்கள். அப்புறம் கேட்பதை நிறுத்த பாட்டீர்கள். என் பொண்ணுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு. இந்த பாட்டை போட்டால், 'கொஞ்சி கரையல்லே..கொஞ்சி கரையல்லே' அப்படின்னு பாடிக்கிட்டே இருப்பாள். கேட்டு வாங்கி போட்டு கேட்பாள். அவளுக்கு இப்போ 2 1/2 வயது ஆகிறது. உங்களுக்கும் பிடிக்கும். கேட்டு பாருங்கள்.






ஊத்திக்கிச்சி:

இந்த தலைப்பில் படம் ஊத்திக்கிட்டதால் ராஜாவின் காணாமல் போன பாடல்கள் பற்றி பார்க்கலாம். என்னோட ரசனையை போட இந்த தலைப்பு :-). 90ல் வந்த சில நல்ல பாடல்கள், மக்கள் ரசனை மாறிப் போனதால் காணாமல் போய் விட்டது.

'ராசாமகன்'. பிரசாந்த்-சிவரஞ்சனி நடித்து வெளிவந்த படம். 90s ல பிரசாந்த் படங்களில் ராஜாவின் இசை ரொம்ப நல்லா இருக்கும். 'ராசா மகனில் 'வைகாசி வெள்ளிக்கிழம' S.P.B பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த பாடல் சிலரே கேட்டிருப்பீங்க (கீதா! சூடத்தோட சுற்றுவதால், 'யாரும் கேட்டிருக்க மாட்டீங்கன்னு' சொல்லலை :-)). ஒரு தாய் பாடும் வித்தியாசமான ஒரு ஏக்க தாலாட்டு. சுனந்தாவின் குரல் நன்றாக உருக்கமாக இருக்கிறது. கவிதை வரிகள் அழகு. ராஜாவின் தபேலாவுக்காக ரொம்ப பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.






போட்டி எண்-4:

இப்போ நீங்க ஆவலுடன் இந்த வாரப் போட்டி. சென்ற போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. இந்த வாரம் இரண்டு Interludes. பாட்ட கண்டு பிடிங்க Please..போட்டியோட கடைசி தேதி புதன் கிழமை. அடுத்த நிமிடமே பதில் சொல்ல இங்கே நிறைய பேர் இருக்கீங்க :-). யாரும் கண்டு பிடிக்கவில்லை என்றால், வியாழக்கிழமை காலை (இந்தியாவில் வியாழன் மாலை) விடைய சொல்லிடலாம். என்ன சொல்றீங்க.

1.





2.




Friday, December 16, 2005

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..

ஒரு அழகான பாடல். அர்த்தமுள்ள பாடல். காணாமல் போன பாடல். 'சின்னக் கண்ணம்மா' படத்தில் இருந்து. உஷா அக்கா, போன போட்டிக்கு முந்தின போட்டியில் சரியான விடை சொல்லி இந்த பாடலை தட்டிக்கிட்டு போறாங்க :-). இது தான் நான் கூறிய ஸ்பெசல் பாட்டு :-) 'எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே..என் மகளே'. நாய், குரங்கு கூட எல்லாம் நடித்தது போக பேபி ஷாம்லி கொஞ்சம் உருப்படியாக நடித்த சில படங்களில் இந்த 'சின்னக் கண்ணம்மா'வும் ஒன்று. ஒரு நல்ல கதை அம்சத்தோடு வந்த படம்.

அலட்டாத சிம்பிளான இசை. மனோ நன்றாகவே பாடியிருப்பார் (உஷா அக்கா! இளையராஜா Version கிடையாது :-). பாடல் வரிகள் மிக அழகு. தொடக்க வீணை அழகு.




Thursday, December 15, 2005

நேயர் விருப்பம் - 3

( சென்ற போட்டிக்கான விடை கீழே)

மீண்டும் இந்த வார நேயர் விருப்பம் இதோ. நிறைய பேர் நல்ல நல்ல பாட்டெல்லாம் கேட்டிருந்தீங்க. சம்மியும், கீதாவும் ஒரு பெரிய பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவற்றில் சில இங்கே கேட்க்கலாம்.

முதலில் பாலாஸ்ரீ அவர்கள் விருப்பம். 'ஆயிரம் நிலவே வா' (பாட்டு இல்ல) படத்தில் இருந்து 'அந்தரங்கம் யாவுமே..சொல்வதென்றால் பாவமே'. ஒரெ சொல், இது S.P.B பாட்டு. அவரே பாடி, அவரே எதிர்பாட்டு பாட அவரால் மட்டுமே முடியும் (இன்னொன்று 'ஏய்! உன்னைத் தானே" - காதல் பரிசு). 'எப்படி..எப்படி' அழகோ அழகோ. இன்னொரு ராஜ(ஜா) இசை. நீங்க பாட்டு 'எப்படி' ன்னு சொல்லிருங்க.





ரெண்டாவது, சம்மியோட பெரிய பட்டியலில் இருந்து எனக்கு டக்குன்னு 'அடடா' அப்படின்னு தோன்றிய பாடல். "கட்டி வச்சிக்க எந்தன் அன்பு மனச". படம் 'என் ஜீவன் பாடுது'. ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன், இந்த படத்தில் எல்லாமே கிளாசிக் பாடல்கள் என்று. மேலும் ஒரு பாடலை இந்த பதிவில் கேட்கலாம். தடம் புரளாமல், பாடல் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை கொண்டு செல்லும் Beat, எல்லோரையும் மயக்கும். மலேசியாவும், ஜானகியும் ரொம்ப நல்லா பாடியிருப்பாங்க. தொடக்கத்தில் ஜானகி ஆரம்பிக்கும் 'தனியா தவமிருந்து இந்த ராசாத்தி' வித்தியாசமாக தோன்றியது எனக்கு. இது தான் அனுபல்லவியா?. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். கேட்டு மகிழ பாட்டு இங்கே.





இப்போ, தங்கம் அவர்களின் விருப்பத்தில் 'குணா' படத்தில் இருந்து 'உன்னை நான் அறிவேன்'. ஒரு வித்தியாசமான உணர்வை கொடுக்கும் பாட்டு. கண்டிப்பாக கேட்பவர் மனதை லேசாகவாவது இந்த பாடல் தொடும். Prelude-ல் வரும் பேஸ் கிடடாரும், புல்லங்குழலிசையும் என்னை கவர்ந்தவவை. ஜானகியின் சிறந்த பாடல்களில் இதையும் நிச்சயம் சொல்லலாம். நன்றி தங்கம், இந்தப் பாடலை கேட்டமைக்கு. கொஞ்சம் சிறிய பாடல். பாட்டிங்கே...





கீதாவிடம், 90S பாட்டே கேட்க மாட்டீங்களான்னு கேட்டதுக்கு, ஒரு பட்டியல் போட்டிருந்தார்கள். சில வழக்கமான பாடல்கள் தவிர, எனக்கு ஒரு பாடல் உடனே 'அடடா..ஒங்களுக்கும் புடிக்குமா' அப்படின்னு தோன்றியது. அது 'ஆத்மா' படத்தில் இருந்து 'வாராயோ..உனக்கே சரண் நாங்களே' . 'ஆத்மா', பிரதாப் போத்தன் (இயக்கம்) படம் என்று நினைக்கிறேன். கடவுள் உண்மையா என்று சொல்ல கொஞ்சம் உருப்படியாக முயற்சி செய்திருப்பார்கள். "விளக்கு வைப்போம்' 'கண்ணாலே..காதல் கடிதம்' இரண்டும் ஹிட். 'வாராயோ' நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லை (சூடம் எல்லாம் வேண்டாம் :-)). மனோவுக்கு கொஞ்சம் கஷ்டமான பாட்டு. நன்றாகவே பாடியிருப்பார். கடைசில முடிக்கும் போது 'புலிய பாத்து பூனை சூடு போட்ட கதை' (இந்த கதை தெரிஞ்சவங்க சொல்லிட்டு போங்க) மாதிரி S.P.Bய (மணியோசை கேட்டு & வந்தனம்) மாதிரி இருமற மாதிரி பாடியிருப்பார். வேறென்ன சொல்ல, என்னால சிரிப்ப அடக்க முடியல. ஏன் ராஜா? இப்படி மனோவ கொடும படுத்தறீங்க :-). நல்ல ஒரு பக்தி பாட்டு. கேளுங்க.





உஷா! உங்களுக்கு ஒரு ஸ்பெசல் பாட்டு ரெடியாகுது. அடுத்த பதிவில் கேட்கலாம். அதை தனிப்பதிவாக தான் போடுவேன். :-)

சென்ற போட்டிக்கான விடை:

நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் போட்டிக்கான விடை. உஷா, கீதா, ராதா, வீ.கே எல்லோரும் முயற்சி பண்ணிருக்காங்க. ரொம்ப சந்தோசம். பொதுவா உஷா மேல ஒரு புகார் இருக்கும். உடனே விடை சொல்லிடறாங்க அப்படின்னு :-). அதனால் ரொம்ப நல்லா தெரிஞ்ச பாட்டு, ஆனா பாடல் மெட்டு தெரியாத மாதிரி ஒரு Interlude எடுத்து போட்டேன். வேலை செஞ்சிடுச்சு. விடையை கேட்டுட்டு 'பூ..இதானா..அடடா..உள்ளுக்குள்ள தோணிச்சி..வெளியே வரமாட்டேன்னுட்டு' அப்படிம்பீங்க... விடை கீழே..( உங்கள் ஆதரவுக்கு நன்றி. அடுத்த போட்டி வரும் வார இறுதி இசைக் கதம்பத்தில்..




Wednesday, December 14, 2005

எனைத் தேடும் மேகம் - மீண்டும் S.P.B & வாணி ஜெயராம்

அடுத்த நேயர் விருப்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருங்கள். சோகப்பாடல்கள் பொதுவாகவே எல்லோருக்கும் பிடிக்கும். அதற்காக நாம் சோகமாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. அந்த பாடல்களில் ஒரு அமைதி இருக்கும். உருக்கம் இருக்கும். இப்பொதெல்லாம் வரும் படங்களில் அப்படி பாடல்கள் வருவதும் இல்லை, ஹிட் ஆவதும் இல்லை. நாட்டு மக்கள் எல்லோரும் ரொம்ப சந்தோசமா இருக்காங்க போல. நல்லது தானே. ஒரே குத்துப்பாட்டு தான்.

சரி! மறுபடியும் S.P.B & வாணி ஜெயராம் ஜோடியில் ஒரு பாட்டு. 'கண்ணோடு கண்' படத்தில் இருந்து 'எனை தேடும் மேகம்..சபை வந்து சேரும்'. உருக்கமோ உருக்கம். S.P.B யும் வாணியம்மாவும் போட்டி போட்டு குரலில் உருக்குவாங்க. கவிதை வரி கூடுதல் உருக்கம். இந்த படத்தையும் பாட்டையும் பற்றி தெரிஞ்சவங்க கூடுதல் விவரம் (இசையமைப்பாளர்/கவிஞர்) சொல்லுங்க. இப்போ பாட்டு.





Monday, December 12, 2005

குட்டி குட்டி பாட்டு & பாட்டுப்போட்டி

இந்த பதிவில் ராஜாவின் இசையில் சில குட்டி பாடல்கள் ( 1 நிமிட பாட்டு) சில கேட்கலாம். நிறைய குட்டி பாட்டு, ஒரு பெரிய பாடலின் சோக பாட்டாக வரும். அவற்றை தவிர்த்து, சில பாடல்கள் சின்ன பாடல்களாகவே கம்போசிங் செய்திருப்பார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற கட்டமைப்புக்குள் வராமல், இந்த பாடல்களை பண்ணியிருப்பார்கள். மின்னலென வந்து படத்தில் வரும் இந்த பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்ல பாடல்கள். அதில் சிலவற்றை இங்கே கேட்கலாம். இந்த தலைப்புக்கு ஐடியா கொடுத்த அல்வா சிட்டி சம்மிக்கு நன்றி.

1. இந்த பாட்டு, 'அதிரடிப்படை' அப்படின்னு நடிகை ரோஜாவை ஓட்டாண்டியாக்கிய படத்தில் இருந்து. இசை கம்மியாக, குரல் ஓங்கி ஒலிப்பதால், நம்ம குமரனுக்கு புடிக்கும்னு நெனைக்கிறேன். பாடியது சித்ரா.








2. ரெண்டாவது. ஒரு வளைகாப்பு பாட்டு. புது பாட்டு படத்தில் இருந்து. இதுவும் சித்ரா. ரொம்ப அருமையான பாட்டு. இங்கே








3. முதல் மரியாதை படத்துல நிறைய குட்டி பாடல்கள் வரும். அதில் 'ஏ குருவி' பாட்டு இங்கே.








4. 'ஏறாத மல மேல' . இந்த பாட்ட கிராமத்துல போடுவாங்க, நான் சின்ன பையனா இருக்கச்சுல..மலேசியா சும்மா கின்னுன்னு தொடங்குவார் பாருங்க. சூப்பர்.








5. இந்த பாட்டு எல்லோருக்கும் தெரிஞ்ச பாட்டு தான். 'வீரா' வில் அருண்மொழி பாடிய 'ஆத்துல அன்னக்கிளி'








6. சமீபத்தில் வெளியான 'விஷ்வ துளசி'-ல நிறைய குட்டி பாட்டு இருந்தது. அதில் இருந்து ஒரு பாட்டு.






பாட்டுப் போட்டி:

இந்த Interlude-அ கேளுங்க. என்ன பாட்டுன்னு சொல்லுங்க.







Sunday, December 11, 2005

இசைக் கதம்பம் -1

( ஒரு வித்தியாசமா, கலவையா ஒரு பாடல் பதிவு தொடங்குகிறேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க).

இந்த முதல் இசைக் கதம்பத்தில் ஹிட்டு பாட்டு, ஊத்திக்கிச்சி, பின்னணி இசை, அடுத்தாத்து ஆல்பட், அக்கம் பக்கம், பாட்டு போட்டி ஆகிய தலைப்புகளில் பாடல்களை கேட்கலாம்.

ஹிட்டு பாட்டு:

மொதல்ல எல்லோருக்கும் புடிச்ச மாதிரி பாடல்களை இதில் பார்க்கலாம் (இல்லன்னா, என்னடா இவன் பாட்டு போடறான்னு சொல்லிட்டு ஓடிடறீங்க).

இளமை காலங்கள். மோகன்-சசிகலா நடித்து வெளிவந்த படம். படத்தில் அத்தனை பாடல்களும் அருமை. இந்த படத்தை பார்த்து என் நண்பர்கள் எல்லோரும் சசிகலா விசிறியாகி போனோம். இந்த 'இசை மேடையில்' பாட்ட வீடியோவுல போட்டு போட்டு தேஞ்சி போச்சி. சரி இப்போ பாட்டு. ராஜாவோட அக்மார்க் 80s ஹிட்டு பாட்டு. S.P.B & ஜானகி பாடியது. பாட்டு இங்கே.






அடுத்தாத்து ஆல்பட்:

இளையராஜாவை விட்டா வேற பாட்டு போட மாட்டீங்களான்னு அல்வா சிட்டி சம்மி கேட்டாங்க. கொஞ்சம் கேட்பதுண்டு. அதில் சில பாடல்களை இந்த தலைப்பில் வாரம் ஒன்று பார்க்கலாம்.

இந்த வாரம். 'வானமே எல்லை" படத்தில் இருந்து "நீ ஆண்டவனா". K.பாலசந்தர் தெலுங்கில் இருந்து இறக்குமதி பண்ணிய ஒரு இசை அமைப்பாளர் "மரகதமணி". மனுசன் அவரு படத்துக்கு எல்லாம் நல்லாத்தான் பாட்டு போட்டிருப்பார். 'அழகன்' படத்துல "என் வீட்டில் இரவு..அங்கே இரவா..இல்ல பகலா" பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சது. "சங்கீத ஸ்வரங்கள்..ஏழே கணக்கா..இன்னும் இருக்கா" அப்படிங்கற பாட்டும் சூப்பர்.

இந்த 'நீ ஆண்டவனா" பாட்டுல ரசிக்க நெறைய விசயம் இருக்கு. பாட்டோட தாலாட்டுற மாதிரி அந்த Repeated Beat எவரையும் மயக்கும். அப்புறம் S.P.B-யோட குரல் ஏற்க்கனவே ரொம்ப குழைவு. இந்த பாடலில் ரொம்பவே Smooth. கூட சித்ரா வேற. இன்னொரு முக்கியமான ஆள். கவிஞர் (வைரமுத்தா?). மனுசன் கவிதையில கலக்கராருப்பா.

படம்: வானமே எல்லை.
பாடல்: நீ ஆண்டவனா
பாடியவர்கள்: S.P.B & சித்ரா.






அக்கம் பக்கம்:

தமிழ் பாடல்களை தவிர வேறு மொழிப்பாடல்கள் எத்தனை பேர் கேட்பீங்கன்னு தெரியலை. இசைக்கு மொழி ஏது. (ஒரு காலத்துல ஹிந்தி பாட்டு கேக்கலையா :-). இந்த தலைப்புல ராஜாவின் இசையில் சில மலையாளப் பாடல்கள் பதிகிறேன். கேட்க முயற்ச்சி பண்ணிப் பாருங்க.

முதல் பாடல். 'குரு' படத்தில் இருந்து 'தேவசங்கீதம் நீயல்லே". படத்தில் இசை இளையராஜாவின் வாழ்நாள் சாதனை என்றே நான் சொல்வேன். இந்த எல்லா பாடல்களும் ஹங்கேரியில் இசை அமைக்கப்பட்டது. 'குரு' படமும் ரொம்ப அழகான, தமிழில் பார்க்க முடியாத ஒரு கதை களத்தோடு அமைந்த படம். மோகன்லால்-சித்தாரா நடித்தப்படம். போன வருடம் தான் படம் பார்த்தேன். இந்த படத்தில் வரும் ஐந்து பாடல்களுமே அருமை. இன்று ஒரு பாடல் கேட்கலாம். இந்த தேவ சங்கீதத்தை பாடியவர்கள் யேசுதாஸ் & சித்ரா. பாடலில் பயன்படுத்தப் படிருக்கும் வாத்ய கருவிகளை கவனித்துப்பாருங்க. திரை இசையில் கேட்க முடியாத ஒரு வித்தியாசமான இசை இது.

படம்: குரு (மலையாளம்)
பாடல்: தேவசங்கீதம்..நீயல்லே.
பாடியவர்கள்: யேசுதாஸ் & சித்ரா





ஊத்திக்கிச்சி:

இந்த தலைப்பில் படம் ஊத்திக்கிட்டதால் ராஜாவின் காணாமல் போன பாடல்கள் பற்றி பார்க்கலாம். என்னோட ரசனையை போட இந்த தலைப்பு :-). 90ல் வந்த சில நல்ல பாடல்கள், மக்கள் ரசனை மாறிப் போனதால் காணாமல் போய் விட்டது.

அப்படி ஒரு பாட்டு. "கோலங்கள்" (1995) படத்தில் இருந்து "தெற்க்கே வீசும் தென்றல் வந்து" அப்படின்னு ஒரு பாட்டு. ஜெயராம்-குஷ்பு நடித்த படம்.யாரும் கேட்டிருக்க மாட்டீங்க அப்படின்னு சூடம் அனைத்து சத்தியம் செய்யலாம். ரெண்டு மூனு தடவை கேட்டு பாருங்க. அப்புறம் உங்க Play list-ல கண்டிப்பா இடம் பெறும். இந்த பாடல் ரொம்ப வித்தியாசமான முயற்சி என்றே சொல்லலாம். கிடார்..கிடார்..கிடார்..வேறொன்றும் இல்லை. தாள வாத்தியம் (Percussion instruments) இல்லாமல் பாடல் முழுவதும் (தொடக்கம் தவிர) வெறும் கம்பி கருவிகள் (String Instruments) வைத்து கொண்டு போயிருப்பார். கவனித்து கேட்டு மகிழுங்கள்.( அக்னி நட்சத்திரம் 'ராஜாதி ராஜா' பாட்டு வெறும் தாள வாத்திய கருவிகள் மட்டும் வைத்து செய்திருப்பர். No sting instrument). அருண் மொழி - லேகா குரல் கூடுதல் கவர்ச்சி.

படம் : கோலங்கள்
பாடல்: தெற்கே வீசும் தென்றல்.
பாடியவர்கள்: அருண்மொழி-லேகா





பிண்ணனி இசை:

இதுல யாருக்கும் விருப்பம் இல்லை போல. இளையராஜா பாடல்களில் எவ்வளவு சாதனை/முயற்சிகள் செய்தாரோ, அதே அளவு பின்னணி இசையிலும் செய்திருக்கிறார் (செய்து கொண்டிருக்கிறார்). அது அவ்வளவாக கவனிக்கப்படாமல் போனது துரதிஷ்ட்டம் தான். எல்லா இசைக் கதம்பத்திலும் ஒரு பின்னணி இசையை போடுகிறேன். புடிச்சா கேட்டுப் பாருங்க :-)

ராஜபார்வை படத்தில் இருந்து ஒரு Fusion இசையை இங்கே கேட்கலாம். ராஜாவிடம் இருந்து சரியாக இசையை வாங்க தெரிந்த ஒரே நடிகர் கமல் (அதுக்கு கொஞ்சம் ஞானம் வேணுங்கோ). ராஜபார்வை படத்தில் 'அந்தி மழை பொழிகிறது' பாடலை யாரும் மறக்க முடியாது. கமலுக்கு கண் தெரியாது என்று தெரியாமல் மாதவி அவரை அவமான படுத்த, கமல் கண் தெரியாதோர் பள்ளியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது தெரிந்து மாதவி அங்கு செல்வார். கமல் தனி வயலின் வாசிக்க, ஒவ்வொரு இசையாக இணைந்து செல்லும் இசை இது. தொடக்க வயலினை கேட்டவுடன் 'இழுக்கறாங்க'ன்னு கேட்காம போய்டாதீங்க. முழுசும் கேட்டுட்டு சொல்லுங்க. ( ஒலி தரம் கம்மி தான். அட்ஜஸ்ட் பண்ணுங்க :-)





பாட்டு போட்டி :

பாட்டோட Lude-s போட்டு பாட்ட கண்டுபுடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும். உங்களுக்கும் புடிச்சா முயற்சி பண்ணுங்க.




Friday, December 09, 2005

என் இனிய பொன் நிலாவே

( இன்று நேரம் கிடைக்காததால் சின்ன பதிவா போட்டாச்சு. அடுத்த பதிவில் நிறைய பாடல்களை பேசலாம். கேட்கலாம்).

இளையராஜா-பாலுமகேந்திரா கூட்டணி சாதித்தது நிறைய. பாலுமகேந்திராவுக்கும் இளையராஜாவுக்கும் அப்படி என்ன பொருத்தமோ. தெரியவில்லை. அதிலும் மூடுபனிக்கு என் விருப்ப படங்களில் முதலிடம் உண்டு. பாட்டென்ன, பின்னணி இசை என்ன, ராஜா அசத்தி இருப்பார். அது ஒரு கனாக்காலம். அப்படித்தானே?. இந்த பாடல் ஒரு அழியாத வரம் பெற்றப் பாடல் (உஷா அக்கா சொல்ற மாதிரி) என்றே சொல்லலாம். "என் இனிய பொன் நிலாவே". அருமையான கிடார் இசை. யேசுதாஸின் குரல் என்ன ஒரு கவர்ச்சி. முதல் Interlude-ல் வரும் ஹம்மிங்கோடு இணைந்த டிரம்ஸ், அதை தொடர்ந்து வரும் ஹம்மிங்கும் நல்லா இருக்கும்.

பாட்ட கேக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கிடார் பீஸ். மூடுபனி படத்தில் இருந்து. ரொம்ப Simple-லா ஒரு ஹம். உங்களை மயக்குவது நிச்சயம். கேட்டுப் பாருங்க. ( ஒலி தரம் அவ்வளவாக நல்லா இருக்காது. பொருத்துக் கொள்ளுங்கள்)






இப்போ பாட்டு,




Thursday, December 08, 2005

நேயர் விருப்பம் - 2

( அரும்பாகி மொட்டாகி / ஆதாமும் ஏவாளும் / வராது வந்த )

வணக்கம்! வணக்கம்! மீண்டும் ஒரு நேயர் விருப்பத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி ( FM ரேடியோ effect வருதா :-) சொல்லுங்க). இந்த பதிவுல மூன்று முத்தான பாட்டுக்களை கேக்கலாம். முதலாவதாக, எங்க ஊர் Ex. எம்.பி ராமராஜனுக்கு:-)) ராஜா போட்டு கொடுத்த அருமையான பாட்டு. 'எங்க ஊரு காவக்காரன்' படத்தில் இருந்து 'அரும்பாகி மொட்டாகி' . இந்த பாட்ட பாடுனது யாருன்னு ஒரே குழப்பம். கடைசில இந்த பாடலை பாடினது நம்ம அல்வா சிட்டி சம்மி (இல்ல) சொன்ன மாதிரி 'தீபன் சக்கரவர்த்தி' தான். கூட பாடுவது சுசிலா. இருந்தாலும் இந்த பாட்டு ராமராஜனுக்கு கொஞ்சம் ஓவர் தான். பாட்ட கேட்டுட்டு அப்படியே போய்டாதீங்கடே. நீங்க கேட்டீங்கன்னு எனக்கு தெரிய வேண்டாமா?. ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க.





அடுத்ததா, நம்ம தங்கம் அருண்மொழி பதிவுல 'ஆதாமும் ஏவாளும்' போடுங்க அப்படின்னு மொத மொத பாட்டு கேட்டுருக்கிறார். 'மருது பாண்டி' படத்துல இருந்து அருண்மொழி & ஜானகி பாடியது. பொதுவா எல்லா ஹிரோவுக்கும் வயசான கெட்டப்புல நடிக்க (நம்மை சோதிக்க) ஆசை இருக்கும். அப்படி அமுல் பேபி ராம்கிக்கு ஆசை வந்ததன் விளைவு தான் 'மருது பாண்டி' . இந்த பாடல் ராம்கி-நிரோஷா ப்ளஷ் பேக்கில் வரும். பாடலுக்கு இங்கே..





அப்புறம், நம்ம ப்ளாக்ல முதல் முதலாக வருகை தந்திருக்கும் பாலாஸ்ரீ அவர்களின் விருப்பப் பாடல் (பாட்டு போட்டு இப்படி தான் கவர் பண்ணனும். ப்ளாக் படிக்க ஆளுங்க வேணாமாடே!) 'தாலாட்டு பாடவா' படத்துல இருந்து 'வராது வந்த நாயகன்'. அருண்மொழி-ஜானகி பாடியது. இந்த படத்துல எல்லா பாடல்களுமே அருண்மொழி தான். இது அருண்மொழியோட மொத பாடலா என்று தெரியவில்லை. என்னோட தகவல் பொட்டி, சூரசம்ஹாரம் வந்தது 1988. தாலாட்டு பாடவா 1990 என்கிறது. சரியா தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. இப்போ பாட்டு...




Tuesday, December 06, 2005

ஒரே முறை உன் தரிசனம்

எனக்கு புடிச்ச ஜானகி பாட்டுல வரிசை படுத்தினா, இந்த பாட்டுக்கு தான் நான் மொதலிடம் கொடுப்பேன். ரொம்ப மென்மையா ஜானகி பாடுன பாட்டுகள்ல இதுவும் ஒன்னு. ராஜா வழக்கம் போல தபேலாவுல நம்மை மயக்கிட்டாரு. கூட வருகின்ற கிடாரும், புல்லாங்குழலும் கூடுதல் மயக்கங்கள். ரொம்ப கம்மியான வாத்தியங்கள் தான். அது தான் அப்படி ஒரு மென்மையை பாடல் முழுவதும் கொண்டு வருகிறது.

பாட்ட சொல்லுடேன்னு சொல்லறீங்களா. "என் ஜீவன் பாடுது" ன்னு ஒரு கார்த்திக் படம். படத்துல எல்லாமே அருமையான பாட்டுங்க. அதுல ஒன்னு "ஒரே முறை உன் தரிசனம்" பாட்டு. இறந்து போன கார்த்திக் ஆவியா அலைய, அதை (அவரை) லவ்ஸ் விடும் சரண்யா பாடுற மாதிரி இந்த பாட்டு. "உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா" என்று பாடுகிறார். கேட்டுட்டு பாட்டு எப்படின்னு சொல்லறீங்க.






நாளைக்கு சில நேயர் விருப்பங்கள் பாக்கலாம். என்ன சொல்லறீய?

Saturday, December 03, 2005

அருண்மொழி பாட்டு ரெண்டு

அருண்மொழி. எனக்கு S.P.B க்கு அடுத்து மிகவும் பிடித்த பாடகர். அலட்டாத, தெளிவான வசீகரிக்கும் குரல். தன் குழுவில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்த நெப்போலியனை, உன்னாலும் நல்லா பாடமுடியும்னு 'அருண்மொழி' என்று பெயரும் சூட்டி பாட வைத்தது இளையராஜா தான். கமலின் 'சூரசம்ஹாரம்' படத்தில் தான் முதன் முதலில் இரண்டு பாடல் பாடி இருப்பார் ( 'நீல குயிலே" "நான் என்பது நீ அல்லவோ" ) . அச்சு அசலாக நடிகர் பார்த்திபனுக்கு பொருந்தும் குரல். அவர் இளையராஜா இசையில் பாடிய பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் தான். போட்டா அத்தனையையும் போடலாம். இந்த பதிவில் எனக்கு புடிச்ச ரெண்டு பாட்டு பாக்கலாம். கேக்கலாம்.

1. "மல்லு வேட்டி மைனர்" சத்யராஜ்-சீதா-ஷோபனா நடித்து வெளி வந்த படம். ஊரில் மைனர் போல அலையும் சத்யராஜ், தெரியாமல் சீதாவை கல்யாணம் பண்ணும் ஒரு சூழ்நிலை வந்து, திருந்துவதாக கதை. இந்த பாட்டே கதை சொல்லும். ராஜாவின் வழக்கமாக தபேலா/புல்லங்குழல் அருமை. S.ஜானகி, அருண்மொழி குரல் எவ்வளவு அழகாக/அமைதியாக பாடலில் ஓங்கி ஒலிக்கிறது. கேட்டுப் பாருங்க.





2. ராஜ்கிரணில் மூன்று படங்களுக்குமே ராஜாவின் இசை மகுடம் என்றே சொல்லலாம். ராஜ்கிரண் படங்கள் பொதுவாக நல்ல கதை களம் கொண்டிருப்பதால், பாடல்களிலும் ராஜா கலக்கிவிடுவார். "அரண்மனை கிளி" படத்தில் இருந்து "ராத்திரியில் பாடும் பாட்டு" இந்த பதிவில். அருண்மொழி, மின்மினி, மலேசியா வாசுதேவன். இதுவும் ராஜாவில் தபேலா விருந்து தான். இரண்டாவது interlude-ல் புல்லாங்குழல் அழகு. இதோ பாடல்.




Thursday, December 01, 2005

நேயர் விருப்பம் - 1

இந்த பதிவுல மூனு பாட்டு கேட்போம். முதலில், புதிதாக நம்ம ப்ளாக்கு வருகை தந்திருக்கும் 'அல்வா சிட்டி' சம்மியை வரவேற்று அவர் விருப்பப் பாடல் ஒன்றை கேட்கலாம் ( எங்க ஊரு காரவியலா போய்டீயல்லா! அதான் மொத பாட்டா போட்டாச்சு :-) ). "மனிதரில் இத்தனை நிறங்களா" அப்படீங்கற படத்துல இருந்து ஒரு நல்ல S.P.B பாட்டு. டி.வி-ல அடிக்கடி பாக்கலாம். ஸ்ரீதேவிவை பார்த்து ஒரு முகம் தெரியாத ஹீரோ (தெலுங்கோ?) பாடிக்கிட்டு இருப்பாரு...இந்த பாட்டுக்கு இசை யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்கடே. இந்த பாட்டு கொடுத்து உதவி செய்த மரவண்டு கணேசுக்கு ரொம்ப நன்றி. இப்போ பாட்டு...






அப்புறம் ரெண்டாவதா அக்கா உஷா, போட்டி-2 ல் வெற்றி பெற்று பரிசாக :-) அவங்க விருப்ப பாடலை தட்டிக்கிட்டு போறாங்க. "நதியை தேடி வந்த கடல்" படத்துல இருந்து நம்ம இசைஞானி இசையில் S.P.B & சுசீலா பாடிய "எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்" பாடலை கேக்கலாம். இந்த பாட்டு கிட்டத்தட்ட "நானொரு பொன்னோவியம் கண்டேன்" போலவே Orchestration இருக்குது. கேட்டு மகிழுங்கடே. இந்த படத்துல இன்னொரு நல்ல பாட்டு "தவிக்குது தயங்குது ஒரு மனது". ஜெயச்சந்திரன் பாடிருப்பார். அதை அப்பறம் பாக்கலாம்.






நம்ம ப்ளாக்குக்கு ரசிகையாகி போன கீதா (அக்கா?) ஒரு பாட்டு கேட்டாங்க. "அம்மா" படத்துல இருந்து. கீதா! நான் அந்த பாட்டை கேட்டதில்லை. கிடைத்தால் உங்களுக்கு கண்டிப்பாக அனுப்புகிறேன். அதற்க்கு பதிலாக என்னோட தேர்வா ஒரு பாட்டு போடுகிறேன். புடிச்சா சொல்லுங்க. "பகல் நிலவு" படத்துல இருந்து "பூவிலே மேடை நான் போடவா" ஜெயச்சந்திரன், சுசிலா பாட்டு. இந்த படத்துல இருந்து "பூமாலையே தோள் சேரவா" பாட்டு பட்டையை கிளப்பியது எல்லோருக்கும் நினைவிருக்கும். சரி இப்போ பாட்டு..