இசைக் கதம்பம் - 3
இசைக்கதம்பம் போட்டு ரொம்ப நாளாச்சி. சரி இன்னைக்கு மறுபடி ஆரம்பிக்கிறேன். கேட்டு மகிழுங்கள் நண்பர்களே.
ஹிட்டு பாட்டு:
'கன்னி ராசி'. சூப்பர் காமெடி படம். கவுண்டமணிக்காகவே இந்த படத்தை பார்க்கலாங்க. அதுவும் சோத்துக்குள்ள இருந்து முட்டையை தோண்டி எடுப்பாரே, அந்த ஒரு காட்சி போதும் படம் பார்க்க. அதில் ஒரு எஸ்.பி.பி-வாணி ஜெயராம் பாட்டு 'ஆள அசத்தும் மல்லியே மல்லியே' . ராஜாவின் ரெகுலர் 80ஸ் கலக்கல். படத்தில் ரேவதி சின்ன பொண்ணா இருப்பாங்க. அவங்க குதித்து குதித்து இந்த பாட்டுக்கு ஆடும் அழகே தனிங்க. அருமையான டிரம்ஸ் இசை. கேட்டு ரசிங்க.
அடுத்தாத்து ஆல்பட்:
இசையமைப்பாளர் ஆதித்யன் வரும் போது எனக்கு ரொம்ப எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. 'அமரன்' படத்தில் 'வசந்தமே அருகில் வா' ரொம்ப அருமையான பாட்டு. அவரது சீவலப்பேரி பாண்டி பாட்டு எல்லாம் நல்லா ஹிட்டாச்சி. அவர் இசையமைத்த 'உதவும் கரங்கள்' 'தொட்டில் குழந்தை' எல்லாம் என்னோட விருப்ப பாடல்களில் இருந்தது. சுட்டு போட்டாரா, இல்லை சொந்த சரக்கா என்றெல்லாம் தெரியவில்லை. திடிரென்று சடை வளத்துக்கிட்டு ஜெயா டி.வில சட்டி கிண்ட போய்ட்டார். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அவர் இசையில் 'ரோஜா மலரே' படத்தில் இருந்து எனக்கு பிடித்த 'அழகோவியம் உயிரானது' . இது எஸ்.பி.பி பாட்டு. வேறேன்ன சொல்ல :-). எஸ்.பி.பி குரல் கலக்கலோ கலக்கல். பாட்டு இங்கே.
அக்கம் பக்கம்:
இன்று ராஜாவின் கன்னட பாட்டு ஒன்று கேட்கலாம். என்னிடம் சில கன்னட சி.டிக்கள் இருக்கிறது. ராஜாவின் மலையாள பாடல்கள் அனைத்தும் கேட்டிருக்கிறேன். எனக்கென்னமோ கன்னட பாடல்கள் ரொம்பவே நல்லா இருக்கு. மலையாளத்தில் ராஜாவுக்கு அந்த அளவு சுதந்திரம் இல்லையோ என்று தோன்றும். முதலில் பாடகர் தெரிவிலேயே யேசுதாஸை விட்டா யாரும் பாடினா மலையாளிகளுக்கு புடிக்காது போல. இல்லை ஸ்ரீகுமார் மாதிரி கொஞ்சம் மலையாள் வாடை உள்ள ஆட்கள் தான் பாட வேண்டும். எஸ்.பி.பியே சுத்தமாக ஆகாது. அவரே ராஜா இசையில் ஒன்றோ இரண்டோ தான் மலையாளத்தில் பாடி இருக்கிறார். மனோ, அருண்மொழி - வெட்டு தான். :-). பெண் குரலிலும் அப்படி தான். சித்ரா வரும் வரை வேறு வழியில்லாமல் ஜானகியை கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரே மாதிரி குரலால் எனக்கு எல்லா பாடல்களும் ஒரே மாதிரி ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இசை அமைப்பிலும் ராஜாவின் முத்திரை அவ்வளவாக எனக்கு தெரியவில்லை (குரு, சிறைசாலை தவிர) கன்னடத்தில் நிறைய வித்தியாசமான பாடல்களை பார்க்க முடிகிறது. இது என் அபிப்பிராயம் மட்டுமே.
இன்று 'குலாபி' படத்தில் இருந்து ஒரு பாட்டு. 'கேளிசதே ப்ரேம வேதா'. ராஜா-எஸ்.பி.பி-சித்ரா குரலில். ஒரு தடவை கேட்டு தான் பாருங்களேன். ராஜாவின் தொடக்க குரல் அறுவடை நாள் பாடலை நினைவு படுத்தும். அருமையான மெலோடி பாட்டு.
காணவில்லை:
'பாரு பாரு பட்டணம் பாரு' இப்படி ஒரு படம் வந்ததாங்க. தெரிந்தவர்கள் சொல்லுங்க. கல்லூரி படிக்கும் போது ஊரில் உள்ள கடையில் கேசட் பதிந்து அடுக்கி வைத்திருப்பேன். ஒவ்வொரு கேசட்டுக்கும் கலெக்சனுக்கு ஏத்த மாதிரி தலைப்பு எழுதி வைத்திருப்பேன். அப்படி ஒரு கலெக்சனுக்கு 'யார் தூரிகை தந்த ஓவியம் - இளையராஜா' அப்படின்னு இந்த பாடலின் தொடக்கத்தை எழுதி வைத்திருப்பேன். ராஜாவின் தூரிகை தந்த ஓவியங்கள் தானே எல்லா பாடல்களும். அதிலும் இந்த பாடல் ரொம்ப அருமையான ஓவியம். என்னோட Favorite உமா ரமணன்-ம் எஸ்.பி.பியும் சேர்ந்து பாடும் ஒரு அருமையான பாட்டு. உமா ரமணன் குரலில் எப்போதும் எனக்கு ஒரு கிறக்கம் உண்டு :-) ரொம்ப வித்தியானமான கம்போசிங். வித்தியாசமான கிடார் இசை. சின்ன வயசில் இருந்தே என்னோட Favorite இந்த பாட்டு. உங்களுக்கு எப்படி?