அண்ணன்-தங்கை பாசம்..
இந்த அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் காலகாலமாய் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு வந்த பாசமலரில் இருந்து நேத்து வந்த சிவகாசி வரை இந்த சென்டிமென்டுக்கு மவுசோ மவுசு. நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். பொதுவாகவே நமக்கு இளையவதாக கூட பிறந்தது யாராவது இருந்து விட்டால், நமக்கு பாசம் கொஞ்சம் அதிகமாகவே வந்து விடும். அதிலும் அக்கா-தம்பி என்றாலோ, அண்ணன்-தங்கை என்றாலோ, பாசமழை தான். தங்கைக்காக சேர்த்து வைக்கும் ஒரு ஆரஞ்சு மிட்டாயிலிருந்து, கல்யாணம் ஆகி தங்கைக்கும் ஒரு குழந்தை பிறந்து 'தாய் மாமன்' என்ற உரிமையில் அதை கொஞ்சும் வரை அண்ணன்-தங்கை பாசம் ஒரு தொடர்கதை தான்.
தங்கைக்கு குழந்தை பிறந்தவுடன் பறி போவது தாய் மாமனின் வேட்டி தான் (தாய் மாமனின் வேட்டி/கைலி- யில் தூங்கினால் தான் குழந்தைக்கு உடம்பு வலிக்காதாம்). இப்படி சின்ன சின்ன விசயத்திலும் அண்ணன்-தங்கை சென்டிமென்ட் நிறைய வைத்திருக்கிறார்கள், நம் பெரியவர்கள். அந்த குழந்தை வளர்ந்து அதன் கல்யாணத்திலும் 'தாய்மாமன் சடங்கு' என்று தாய்மாமனுக்கு முக்கியத்துவம் வைத்திருக்கிறோம். இப்படி நம் வழக்கத்தில் அண்ணன்-தங்கை பாசத்திற்க்கு , திருமணத்திற்கு அப்புறமும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்த பதிவில் எனக்கு பிடித்த அண்ணன்-தங்கை பாடல்கள் இரண்டு பார்க்கலாம். இரண்டுமே S.P.B யின் குரலில். இரண்டு பாடல்களிலுமே எளிமையான இசை, வளமையான குரல், செழுமையான வரிகள்....கேட்டு மகிழுங்கள்.
முதல் பாடல் வரிகள் தங்கை பாடுவதாகவே அமைந்தது. எனக்கு S.P.B பாடிய Version பிடிக்கும் என்பதால் அதையே போடுகிறேன். முதல் பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.
கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்க்கு..அண்ணன் மொழி கீதை அன்றோ...அதன் பேர் பாசமன்றோ.
படம்: அண்ணன் ஒரு கோவில்
பாடல்: அண்ணன் ஒரு கோவில் என்றால்...
படம் : ராஜராஜேஸ்வரி
பாடல்: என் கண்ணின் மணியே..