கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Saturday, October 22, 2005

முதல் பதிவு


பாட்டு கேக்கறது தான் என்னோட முதல் பொழுது போக்கு. பாட்டு இருந்தா வேற ஏதும் தேவை இல்லை எனக்கு. எனக்கு இளையராஜா பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். பொதுவாகவே நாம நல்லா ரசிச்ச ஒரு பாட்ட, கேட்க வாய்ப்பு இல்லாத போது அது மறந்து போயிடும். அப்புறம் எங்கேயாவது கேட்டால், நம்ம பழைய நினைவுகளை எல்லாம் அந்த பாடல் கொண்டு வரும். அந்த பாட்டு வந்த காலத்துல நாம எப்படி இருந்தோம், என்ன என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம் என்று பழைய நினைவுகளுக்கு இழுத்து சென்று விடும். அப்படி சில மறந்து போன, இப்போது கேட்ட வாய்ப்பில்லாத சில பாடல்களை இங்கே உங்களுக்காக பதியலாம் என்று இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. இதில் என் ரசனை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

1 Comments:

At 3:44 AM, Blogger குமரன் (Kumaran) said...

வெற்றிகரமான இரண்டாவது வலைப்பதிவு ஆரம்பிச்சாச்சா? வாழ்த்துகள்.

 

Post a Comment

<< Home