<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' version='2.0'><channel><atom:id>tag:blogger.com,1999:blog-18159005</atom:id><lastBuildDate>Sun, 27 Dec 2009 23:58:16 +0000</lastBuildDate><title>கீதம்...சங்கீதம்</title><description>எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக..
கேட்டுப் பாருங்கள்.</description><link>http://geethamsangeetham.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (சிவா)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>71</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-115007711381546423</guid><pubDate>Mon, 12 Jun 2006 01:14:00 +0000</pubDate><atom:updated>2006-08-07T03:21:17.093-07:00</atom:updated><title>விடை பெறுகிறேன்.</title><description>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நண்பர்களே! விடை பெறுகிறேன். என்னடா பதிவு தலைப்பு என்று நெனைச்சிறாதீங்க. கொஞ்ச நாள் இந்த ப்ளாக் உலகத்தில் இருந்து விடுப்பில் போய்ட்டு வரலாம் என்று தோன்றியது. அது தான் இந்த 'விடை பெறுகிறேன்'. காரணம் ஒன்றும் பெரிசு இல்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளைக்கு முன்னாடி என் குரு (அப்படி தான் சொல்வதுண்டு :-) CSR எங்கள் இளையராஜா யாஹு குழுமத்தில் இசை பற்றி சில பாடம் நடத்தினார். என் மண்டையில் ஒன்றும் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். ரொம்ப ஆர்வம் முத்தி போய் மட மடன்னு கடைக்கு ஓடிப்போய் ஒரு யமஹா கீ-போர்ட தூக்கிட்டு வந்து ( &lt;a href="http://music.yamaha.com/products/main.html?productId=31" target="_blank"&gt;Yamaha PSR-275&lt;/a&gt;) ஒரு மூனு மாசம் தட்டு தட்டுன்னு தட்டிக்கிட்டு இருந்தேன். (ஒன்னும் தேறலைன்னாலும் ஒரு ஆசை..ஒரு முயற்சி தானே :-)) இப்போ ஒரு வருடமா அந்த கீ-போர்ட் அப்படியே கெடக்குது. சரி அதை மறுபடி எடுத்து கொடுமை படுத்தலாம் என்று ஒரு ஆசை..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் CSR இப்போ மறுபடி ஒரு &lt;a href="http://csr-wcmlessons.blogspot.com/" target="_blank"&gt;ப்ளாக் &lt;/a&gt;ஆரம்பிச்சு Westen Classical Music பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டார். சரி! போன தடவை தேறாம போய்ட்டாலும் மறுபடி படிச்சு பார்க்கலாமே என்று இன்னொரு ஆசை...&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கும் சம்பந்தம் இல்லாம ஒன்னு. ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கலாம்னு தேடினப்போ இந்த கேமிரா கையில் மாட்டியது. &lt;a href="http://reviews.cnet.com/Sony_Cyber_Shot_DSC_H2/4505-6501_7-31703776.html" target="_blank"&gt;SONY DSC-H2&lt;/a&gt;. அப்படியே இனையத்தில் தேடிய போது இந்த கேமராவில் எடுக்கப் பட்ட &lt;a href="http://forums.dpreview.com/forums/readflat.asp?forum=1009&amp;amp;message=18790424" target="_blank"&gt;சில படங்கள்&lt;/a&gt; கிடைத்தது. மனசுக்குள் இன்னொரு ஆசை வந்துடுச்சு. நாமும் கொஞ்சம் Photography கத்துக்க முயற்சி பண்ணலாமா என்று. அதையும் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நிறைய பேராசைகள். இதுக்கெல்லாம் கொஞ்சம் நேரம் தேவை படுகிறது. அதான் கொஞ்ச நாள் இந்த ப்ளாக் வேலைகளில் இருந்து தள்ளி இருக்கலாம் என்று முடிவு செய்தேன்.( போடே..ரொம்ப தான் பில்ட் அப்பு...ஹி ஹி ஹி :-)).&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு முன்னாடி உங்களிடம் சில வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா என்றால் எனக்கு ரொம்பவே கிறுக்கு. அவர் போட்டோவை வெட்டி ஒட்டி சந்தோச படுவதில் இருந்து, தியேட்டரில் அவர் பெயர் போடும் போது விசில் அடித்து சந்தோச படும் அளவுக்கு ரசிக்கும் ஒரு சராசரி ரசிகன். பாட்டுன்னா ராஜா இசை அமைக்கிறார். ரெண்டு பேர் பாடறாங்க. இதுக்கு மேல இசை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. இப்படி சரக்கே இல்லாம, பாட்டு ப்ளாக் ஆரம்பிக்கும் ஆசை ஏன் வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே என் ராசியோ என்னவோ என் நட்பு வட்டத்துக்குள் இசையை பற்றியோ, ராஜாவை பற்றியோ, ஒரு சராசரி பாடலை பற்றி கூட ஆர்வத்துடன் பேச நண்பர்கள் கிடையாது. அப்போது கிடைத்தது தான் இந்த ப்ளாக். சரி என்று ஆர்வ கோளாறில் ஆரம்பிச்சு 8 மாசம் ஓட்டியாச்சு. எனக்கு மனசுல என்ன தோனிச்சோ, ராஜா பற்றி, இசை பற்றி பேச ஒரு நண்பன் கிடைத்தால் என்ன பேசுவேனோ, அத்தனையையும் உளறி கொட்டியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நண்பர்களாக, இது வரை அனைத்து பதிவையும் ஆர்வமுடன் கேட்டு என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் கோடி நன்றிகள். ரொம்பவே சந்தோசமா திருப்தியா என் ஆசையை நிறைவேற்றியது நீங்கள் தான். உங்களுக்கு நேரம் இருந்தால், ஏதாவது சொல்லணும்னா gsivaraja@gmail.com க்கு மடல் அனுப்புங்க. சந்தோசமா பதில் அனுப்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எத்தனை நண்பர்கள். தவறாமல் எனக்கு ஊக்கம் கொடுத்த நண்பர்கள் ஏராளம். நன்றி நண்பர்களே. நிறைய பேருக்கு கமெண்ட் கொடுக்க நேரம் இருப்பதில்லை. 'நான் உங்கள் ப்ளாக்கை தவறாம படிப்பேன். இப்போது தான் கமெண்ட் கொடுக்கிறேன்' என்று நிறைய நண்பர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கும், படித்து விட்டு, பாடலை கேட்டு விட்டு இது வரை கமெண்ட் கொடுக்க நேரம் இல்லாமல் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா திரும்பி வருவேன். அப்பாடான்னு சொல்லிட்டு போய்றாதிய..என்ன :-)&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்,&lt;br /&gt;சிவா.&lt;br /&gt;&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;br /&gt;CSR ( CSRamasami) எங்கள் யாஹு குழுமத்தில் ஒரு மூத்த உறுப்பினர். தன் நேரத்தை எல்லாம் செலவிட்டு எங்களுக்கு ஒரு மூன்று மாதம் இசை வகுப்புகள் எடுத்தார். இப்போது அந்த சேவையை ப்ளாக் மூலமாக செய்து வருகிறார். &lt;a href="http://csr-wcmlessons.blogspot.com/" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt; சென்று பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவுக்கு தனியாக கடிதம் போட்டு ஒவ்வொரு பாடலையும் பற்றி இசை விமர்சனம் கொடுத்து, ராஜாவும் மூன்று பக்கம் பதில் விளக்கம் கொடுத்து கடிதம் எழுதுவார். 'நான் இன்று டெல்லி செல்கிறேன். 3 நாளில் வந்து விடுவேன்' என்று கடிதத்தில் ராஜா கூறி செல்லும் அளவுக்கு அவரிடம் கடித தொடர்பில் இருந்த ஒரு ரசிகர் தான் CSR. ஆச்சரியமா இருக்கு இல்லையா. &lt;a href="http://isai-alias-raja.blogspot.com/" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt; போய் படிச்சி பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி..வரட்டாடே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-115007711381546423?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/06/blog-post.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>40</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114965054386317220</guid><pubDate>Wed, 07 Jun 2006 03:22:00 +0000</pubDate><atom:updated>2006-06-07T23:09:17.436-07:00</atom:updated><title>பாடாய் படுத்தும் காதல் (கட்டம்-4)</title><description>கட்டம் 4. காதலை சொல்லி அங்கேயும் கிரீன் சிக்னல் கெடைச்சா நேரே டூயட்டு தான். அந்த கட்டத்தை அப்படியே விட்டுடலாம் (நம்ம ஊருல டூயட்டுக்கா பஞ்சம். படத்துல 3 பாட்டு டூயட் தான்). 90 களில் இயக்குனர் வாசு, கேயார் எல்லாம் கொடிகட்டி பறந்த போது பாதி படங்களில் இடைவேளை விடும் காட்சி ஒரே மாதிரி தான் இருக்கும். பையனும் பொண்ணும் முதலில் அடிச்சிக்குங்க, அப்புறம் காதல் மலர்ந்து வரும் வேளையில் 'ஏ! எங்கய்யா நாட்டாம, உங்க ஐயா பகையாளியாச்சே' அப்படின்னு யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிச்சு போட்டு, அப்படியே ரெண்டு பேரும் பிரிகிற மாதிரி ஒரு காட்சி அமைத்து 'இடை வேளை' அப்படின்னு போட்டுடுவாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்  ஊருக்கு நடுவுல ஒரு கோட்டைய கட்டி ரெண்டு பக்கமும் அருவா கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கும். அப்புறம் இதுக ரெண்டும் சோகமா ரெண்டு பாட்டு பாடி, ரெண்டு கூட்டமும் மாத்தி மாத்தி வெட்டிக்கிட்டு, ரெண்டும் சேர்வதற்கும் நம்மள படுத்தி எடுத்திருவாங்க. அப்படி பிரிவு பாடல்கள் தான் இன்று. கட்டம்-4. பாடலுக்கு போகலாமா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. மணிரத்னம், பாரதிராஜா, பாசில் என்று ராஜாவின் கூட்டணியில் கலக்கிய நல்ல இயக்குனர்கள் தவிர சில மசாலா இயக்குனர்களும் ராஜாவை விட்டு விலகியதில்லை. அப்படி அருமையா கூட்டணி அமைந்த ஒன்று கேயார்-இளையராஜா. கல்லூரி காதல் கதைகள் பெரும்பாலும் வெற்றி படங்கள் தான். அதில் எங்க கிராமம் வரை வந்து கலக்கிய ஒரு படம் கேயாரின் இயக்கத்தில் 'ஈரமான ரோஜாவே'. கடைசியாக கேயாரின் இயக்கத்தில் ராஜாவின் இசையில் வந்த ஒரு அருமையான படம் (இசை மட்டும்) 'காதல் ரோஜாவே'. படம் ரொம்ப தாமதமாக வந்து நேரே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. 'இளவேனில் இது வைகாசி மாதம்' அழகான பாடல். காலேஜ் படிக்கும் போது கேசட் வாங்கி வைத்திருந்தேன். இப்போ காணாம போய்விட்டது :-(. சரி. இப்போ பாட்டுக்கு வர்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;  'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு'. யேசுதாஸ்-ஜானகி குரலில், ராஜாவின் கலக்கல் இசை. யேசுதாஸ் பாடலை தொடங்கும் போது 'என் ஜீவன் பாடுது' பாடலோ என்று லேசாக சந்தேகம் வந்து செல்லும். பாடல் இங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/ThentralKarttre.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;2. இப்போ எஸ்.பி.பி. சில படங்களுக்கு ராஜா ஏன் இந்த மாதிரி இசையை கொடுத்தார். அப்படி அந்த படத்தில் என்ன தான் இருந்தது? அப்புறம் படம் ஏன் காத்து மாதிரி வந்ததும் தெரியாம போனதும் தெரியாம போச்சு? இப்படி நிறைய கேள்விகளை எழுப்பும் ஒரு படம் 'இன்னிசை மழை' (பேரு சூப்பரா வச்சிருக்காங்க. நிஜமாகவே அத்தனையும் இன்னிசை மழை தான்). 'மங்கை நீ மாங்கனி' என்று ராஜாவின் அழகான பாடல் ஒன்று உண்டு. இங்கே கொடுக்கப் போவது 'வா வா கண்மணி..வாசல் தேடிவா'. ராஜாவின் ட்ரம்ஸ் பாடல்களில் இதுவும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். அதுவும் பாடலின் முதல் ஒரு நிமிடம். அப்பாடா...இப்படி நமக்கு வாசிக்க தெரிஞ்சா எப்படி இருக்கும். போட்டு பின்னு பின்னுன்னு பின்னறாங்கப்பா. மீண்டும் ஜானகி. S.P.B -யும் ஜானகியும் பாடுவது நம் கண் முன்னாடியே அப்படியே காட்சி வந்து நிற்கும். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/VaaVaaMannavaa.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;3. யேசுதாஸ், எஸ்.பி.பி...அடுத்தது..அதே..மனோ. மனோ என்றால் கூட பாடுவது சித்ராவாக தான் இருக்க வேண்டும் (எஸ்.பி.பி-ஜானகி கூட்டணி மாதிரியே ஒரு கூட்டணி கொண்டுவர நினைத்த ராஜா, மனோவுக்கு பெயர் வைக்கும் போது மனோச்சித்ரா என்றால் நன்றாக இருக்கிறது என்று மனோ என்று பெயர் சூட்டியதாக சொல்வார்கள்). 'பாண்டி துரை'. பிரபு-குஷ்பு ஜோடியில் வந்த படம். வழக்கமான ஒரே அச்சில் வார்த்த கொலுக்கட்டை. 'கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா' 'மல்லியே சின்ன முல்லையே' என்று இரு கலக்கல் பாடல்கள் உண்டு. நம்ம தலைப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு அருமையான பாடல் 'என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே'. சித்ராவின் non-metalic குரல் கேட்கவே எவ்வளவு இதமாக இருக்கிறது. இதமான தபேலா. அழகான வரிகள். எனக்கு புடிக்கும். உங்களுக்கு.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EnnaMarantha.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;4. மீண்டும் யேசுதாஸ். கூட பாடும் சுவர்ணலதா குரலை கேட்கும் போது பாடுகிறாரா, இல்லை ஏதாவது வாத்தியம் வாசிக்கிறாரா என்று தோன்றும். அப்படி ஒரு வித்தியாசமான குரல். நடு ராத்திரி இந்த மாதிரி பாடலா போட்டுவிட்டு கேட்டுக்கிட்டு இருந்தா அந்த சொகமே தனி. 'இது நம்ம பூமி' படத்தில் இருந்து 'ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா'. பல்லவியில் ஒரு வேகத்தில் (மெதுவாக) செல்லும் பாடல் சரணத்தில் ஜிவ்வென்று ஒரு கட்டத்திற்கு தாவும் (ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ..விரல் ஆணையால்..ஹோ')..கேட்க ரொம்ப நல்லா இருக்கும். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/AaradiSuvaru.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;5. மீண்டும் கேயார். இந்த பதிவில் கிட்டத்தட்ட எல்லாமே தபேலா பாடல்கள் தான். ஆனால் இந்த பாடல் ரொம்ப வித்தியாசமான கம்போசிங். ரொம்ப குறைவான இசை. ஓங்கி ஒலிக்கும் ஹம்மிங். நம்மை எங்கோ அழைத்து செல்வது நிச்சயம். சுவர்ணலதாவோடு இணைவது எஸ்.பி.பி. 'வனஜா கிரிஜா' படத்தில் இருந்து 'உன்னை எதிர்ப் பார்த்தேன்'. பாடல் முழுவதும் வரும் கோரஸ்  அழகோ அழகு. எஸ்.பி.பி பேஸ் வாய்சில் பாடியிருப்பதையும் ரசிக்கலாம். எல்லாத்துக்கும் மேல ராஜாவின் இசையை ரசிக்க மறந்திடாதிங்க..பாட்ட கேட்கலாமா.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/UnnaiYethir.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;6. மனோ-சித்ரா ஜோடி மறுபடியும். 'ராசையா' படத்தில் இருந்து 'ஒன்ன நெனைச்சி உருகும் வண்ணக் கிளி'. இந்த பாடல் படத்தில் இல்லை என்று நினைக்கிறேன். தொடக்கம் முதல் முடியும் வரை ஒரே சீராக செல்லும் தபேலா நன்றாக இருக்கும். மனோ-சித்ரா பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. பாடல் இதோ.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/UnnaNenaichi.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;7. இறுதியா யேசுதாஸ்-ஜானகி கூட்டணியோடு முடிச்சிக்கலாம். 'பெரியவீட்டுப் பண்ணக்காரன்' கார்த்திக்-கனகா நடித்த படம். சோக பாடல்களுக்கே உரிய உருக்கம் நம்மை பாடலுக்குள் இழுத்து செல்வது உண்மை. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/MuthuMuthu.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவில் எல்லா பாடல்களுமே ஒரே மாதிரி தோன்றும். சட்டுன்னு அவசரகதியில் கேட்காக, நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்னா ஓட விட்டு அமைதியா கேட்டு பாருங்க. ராஜா நம் மனசுக்குள் மயிலிறகை வைத்து லேசாக வருடி செல்வது நிஜம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114965054386317220?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/06/4_06.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114904426603068998</guid><pubDate>Wed, 31 May 2006 02:57:00 +0000</pubDate><atom:updated>2006-06-09T03:03:46.983-07:00</atom:updated><title>பாசில் - இளையராஜா</title><description>நண்பர்களே! போன வாரம் கமல்-ராஜா கூட்டணியில் சில பாடல்களை கேட்டோம். பதிவில் பின்னூட்டங்களை பார்க்கும் போது, பதிவு அந்த கூட்டணி மாதிரியே சூப்பர் ஹிட் ஆகி விட்டது. நண்பர் சாணக்கியனுக்கு தான் நன்றி சொல்லணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் ஒரு இயக்குனர்-ராஜா கூட்டணியை எடுத்து பாடல் போடலாம் என்று நினைத்தேன். இயக்குனர் என்றால் ஒரு பெரிய பட்டியல் வரும். பாரதிராஜாவில் தொடங்கி, மணிரத்னம், ஆர்.வி.உதயகுமார் என்று நிறைய இருக்கிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே தொடக்கம் முதல் இன்று வரை ஒரு படம் விடாமல் ராஜாவின் இசையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முதல் இடம் இயக்குனர் பாசிலுக்கு தான். பூவே பூச்சூடவா- வில் ஆரம்பித்து 'ஒரு நாள் ஒரு கனவு' வரை இந்த கூட்டணி சிதறாமல் தொடர்கிறது. நான் இங்கு எடுத்துக் கொள்வது தமிழ் படங்கள் மட்டும் தான். பாசில் மலையாளத்தில் ரொம்ப அரிதாகவே ராஜாவை பயன்படுத்தி இருக்கிறார் (மலையாளம் 'காதலுக்கு மரியாதை' (Aniyathi Pravu) யே ராஜா கிடையாது). ஆனால் தமிழில் ராஜா இல்லாமல் பாசில் படம் இயக்கியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாசிலிடம் எனக்கு பிடிக்காத ஒன்று. யேசுதாஸ். விஜய் ஹீரோவாக இருந்தாலும் சரி, வடிவேலு ஹீரோவாக இருந்தாலும் சரி. கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் யேசுதாஸ் தான் பாட வேண்டும். போனால் போகட்டும் என்று மற்ற பாடகர்களுக்கு சில சமயம் வாய்ப்பு கிடைக்கும் (எஸ்.பி.பி-க்கே சான்ஸ் அரிது தான்). இது எனக்கு பாசில் படப்பாடல்கள் எல்லாமே ஒரே அச்சில் வார்த்த கொழுக்கட்டை மாதிரி ஒரே மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசில் படங்கள் எல்லாவற்றிலும் ஒரு பாடலை இந்த பதிவில் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;1. பூவே பூச்சூடவா (1985)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாசிலின் முதல் தமிழ் படம். இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த ரெண்டு நதியாவும், சின்னக் குயில் சித்ராவும். 'சின்னக் குயில் பாடும் பாட்டு' எப்போதும் எனக்கு பிடித்தப் பாடல். பத்மினி பாட்டியும் நதியா பேத்தியும் பாசமழை பொழிந்த படம். இடையில் வரும் எஸ்.வி.சேகர் வில்லத்தனம் ரசிக்கும் படி இருக்கும். சித்ராவுக்கு விருது கிடைத்த படம் என்று நினைக்கிறேன். சித்ராவின் இளம் குரலில் 'பூவே பூச்சூடவா' பாடல்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/PoovePoochudavaa.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;2. பூவிழி வாசழிலே (1987)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாசில் படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்தபடம் இது தான். முதல் படத்தில் செண்டிமெண்ட் கொடுத்தாலும், அடுத்த படத்திலேயே ஒரு த்ரில்லரை, அதுவும் கொஞ்சம் கூட பிசகாமல் பக்காவாக கொடுத்திருப்பார் பாசில். முதல் காட்சியில் அந்த குழந்தை ஒரு கொலையை பார்க்க, அதன் அம்மா கொல்லப்படும் காட்சியில் இருந்தே படம் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும். ரகுவரன் &amp;amp; கோ அந்த குழந்தையை சத்தியராஜிடம் இருந்து கடத்த முயலும் ஒவ்வொரு காட்சியும் அக்மார்க் த்ரில்லர். பாடலாகட்டும் பின்னணி இசை ஆகட்டும் ராஜா கலக்கி இருப்பார். வழக்கம் போல இரண்டு யேசுதாஸ் பாடல். ராஜா கலக்கி இருந்த மலேசியா வாசுவின் 'பாட்டிங்கே' (க்ளப் பாடல்) அவ்வளவாக எடுபடாததில் எனக்கு வருத்தமே. அதுக்கு என்ன! நம்ம ப்ளாக். அந்த பாடலை போட்டுட்டா போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாடலை இப்போது அப்படியே வாசிக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். இந்த ராஜா எங்கே போனார்? இந்த மாதிரி இசை கருவிகளை ஏன் இப்போது பயன் படுத்த முடிவதில்லை? எல்லாமே சில கீ-போர்டுக்குள் அடங்கி விட்டதா? இந்த பாடலை கேட்கும் போது இப்படி 100 கேள்விகள் என் மனதில் எழும்பும். ஒவ்வொரு இசை கருவிகளையும் அணு அணுவாக ரசிக்கலாம். ட்ரம்ஸ், பேஸ் கிடார், ஹம்மிங் என்று ஒரு இசை கலக்கல். மலேசியாவும் சைலஜாவும் அருமையாக பாடி இருப்பார்கள். பாடல் இதோ.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Paddinge.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;3. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சத்யராஜை வைத்து, ஆனால் ரொம்பவே மலையாள வாடையோடு ஒரு அம்மா செண்டிமெண்ட் வைத்து வந்த படம் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு'. சுமாரான ஒரு படம். ரொம்ப சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. 'குயிலே குயிலே குயிலக்கா' சித்ரா-யேசுதாஸ் குரலில் இந்த பாடல்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/kuyilekuyile.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;4. வருஷம் 16 (1989)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டித்தொட்டி எல்லாம் கலக்கிய ஒரு படம். அப்போது எங்கு பார்த்தாலும் வருஷம்-16 தான். 'தர்மத்தின் தலைவன்' படத்தில் முதலில் வந்திருந்தாலும், குஷ்புவுக்கு கேவில் கட்ட அஸ்திவாரம் போட்ட ஒரு படம். கண்ணன்-ராதிகா-ராஜாமணி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்போதும் நம் மனசுக்குள் நிற்கும். குடும்பம்-செண்டிமெண்ட்-காதல்-காமெடி என்று அம்சமாக கொடுத்திருப்பார் பாசில். ராஜாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுக்கும். 'பழமுதிர் சோலை எனக்காக தான்'..ம்ம்ம்ம்..இந்த பாடலையாவது எஸ்.பி.பி கிட்ட கொடுத்திருக்லாம்ல..ம்ம்ம்ம்...சரி சரி..யாரு பாடினா என்னா..பாட்டு நல்லா இருந்தா சரி..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Pazhamuthir.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;5. அரங்கேற்ற வேளை (1990).&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பாசில் முதல் முதலாக செண்டிமெண்ட்-அ ரொம்ப குறைத்து, முழுவதும் நகைச்சுவையாக கொடுத்த படம். கொஞ்சம் நாடகத்தனமா இருக்கும் (படமே நாடக கொட்டாய்ல நடக்கிற மாதிரி தானே). துறுதுறு ரேவதி, பிரபு. இவர்களுக்கு இடையே வி.கே.ராமசாமி படும் பாடு என்று நம்மை நல்லாவே சிரிக்க வைக்கும் நிறைய காட்சிகள் உண்டு. என்னோட பேவரைட் உமா ரமணனோட 'ஆகாய வெண்ணிலாவே' கலக்கல் பாடல். மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான். எல்லோருக்கும் பிடித்த 'ஆகாய வெண்ணிலாவே' பாடல்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/AagayaVennilave.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;6. கற்பூர முல்லை (1991)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'என்டே சூர்யபுத்திரிக்கு' மலையாளத்தில் பாசில் எடுத்த படத்தின் தமிழ் வடிவம் 'கற்பூர முல்லை'. டப்பிங்கா, இல்லை இரண்டையும் ஒரே சமயத்தில் எடுத்தாரா என்று தெரியவில்லை. நான் படமும் இன்னும் பார்க்கவில்லை. பாடலை கேட்டவரைக்கும், அமலா ஸ்ரீவித்யாவின் மகளாக வருவார், ஆனால் ஸ்ரீவித்யா அதை காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பார் என்று நினைக்கிறேன். மறுபடியும் யேசுதாஸ் :-). ஒரு அருமையான பாடல். யேசுதாஸ்-சுசிலா-சித்ரா பாடியது. 'பூங்காவியம் பேசும் ஓவியம்'.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/poongaaviyam.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;7. கிளி பேச்சு கேட்கவா ( 1993)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மலையாள மம்முட்டியோடு பாசில் களம் இறங்கிய படம். நகைச்சுவையாக எடுக்கவா, த்ரில்லராக எடுக்கவா, கிராமத்து கதை மாதிரி எடுக்கவா என்று ரொம்பவே குழம்பி நம்மையும் குழப்பி இருப்பார். மம்முட்டி கிராமத்து வாத்தியாராக வரும் ஆரம்ப காட்சிகள், பேய் பங்களாவுக்கு சார்லியை கூட்டிக்கொண்டு கூத்தடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். மற்றபடி இரண்டு பாடலில் ராஜா படத்திற்கு கொஞ்சம் வெளிச்சத்தை கொடுத்தார். 'அன்பே வா அருகிலே' யேசுதாஸின் க்ளாசிகல் கலக்கல். அடடா! நம்ம எஸ்.பி.பி சிவகாமி நெனைப்பினிலே பாட்டு பாடறார். ( போங்கடே! இந்த பாட்டெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகாதுன்னு யேசுதாஸ் சொல்லிட்டார் போல :-). நான் டி.வில ரொம்பவே ரசித்த பாடல் இந்த சிவகாமி நெனைப்பினிலே. ஆடதெரியாமல் மம்முட்டி ஆடுவதையும், அந்த பெரியவர் ஒரு குடையை பிடித்துக்கொண்டு இரண்டு பேரையும் விரட்டி கொண்டு போவதையும் நிறையவே ரசிக்கலாம். ராஜாவின் ஒரு சில தபேலா ஆட்டம் பாடல்களில் இது ஒரு முத்து.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Sivakaami.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;8. காதலுக்கு மரியாதை (1997)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'என்னப்பா பாட்டு போடறீங்க. நான் போடறேன் பாருங்க பாட்டு' அப்படின்னு ராஜா சொல்லி பாடல்களை கொடுத்தது மாதிரி இருந்தது 'காதலுக்கு மரியாதை' பாடல் வந்த பொழுது. அப்படி ஒரு படம் தயாராவது கூட அவ்வளவாக விளம்பரப்படுத்த படவில்லை. கேசட் வெளியான பொழுது தான், 'என்னடா இது, தலைவர் இசையா இருக்கே..அடடா. பாசில் படமா' அப்படின்னு நெனைச்சிக்கிட்டே வாங்கி கேட்டேன். அப்புறம் தான் படம் வெளி வந்து செம கலக்கு கலக்கிக்கிட்டு இருந்தது. குரோம்பேட்டை வெற்றில ஆடு மாடு பூட்டுற மாதிரி வர்றவங்கள எல்லாம் உள்ள விட்டுக்கிட்டே இருப்பான். ஹவுஸ் புல் போர்ட் எல்லாம் கெடையாது. டிக்கெட்ட வாங்கி உள்ள போனப்புறம் தான் உள்ள நிக்கவே எடம் கெடையாது என்று தெரிந்தது. முட்டங்காலில் நின்னுக்கிட்டே பார்த்த ஒரே படம். ராஜா-பாசில் கூட்டணிக்கு சிகரம் வைத்த ஒரு படம். ராஜாவின் பின்னணி இசை ராஜாங்கம் படம் முழுவதும் பரவி இருக்கும் (முக்கியமா அந்த க்ளைமாக்ஸ் காட்சி, விஜய்-சாலினி பிரியும் காட்சி..நம்ம கண்ணுல டக்குன்னு கண்ணீர் எட்டிப்பார்க்கும்.ம்ம்ம்ம்)..&lt;br /&gt;&lt;br /&gt;பாடலை பற்றி எல்லோருக்குமே தெரிந்த விசயம் தான். என்னை தாலாட்ட வருவாளோ ஏற்கனவே பதிவில் பார்த்து விட்டோம். அதனால் 'இது சங்கீத திருநாளோ' கேட்கலாம்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/IthuSangeetha.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;9. கண்ணுக்குள் நிலவு (2000)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படம் பிச்சிக்கிட்டு ஓடிட்டுன்னா, அப்படியே அந்த கூட்டணிய அப்படியே புடிச்சுப் போட்டு காசு பாக்கலாம்ணு கைய சுட்டுக்கொள்வது ரொம்ப சகஜம். 'கிழக்கு சீமையிலே' ஓடினவுடன், நெப்போலியன்-ராதிகா-விஜயகுமார அப்படியே புடிச்சிப் போட்டு 'புதுப்பட்டி பொன்னுத்தாயி' என்று ஒரு குப்பை வந்தது. அது போலவே 'காதலுக்கு மரியாதை'க்கு மக்கள் கொடுத்த மரியாதையை பார்த்து விஜய்-ஷாலினி கூட்டணியில் பாசிலே இயக்கி வந்த படம் 'கண்ணுக்குள் நிலவு'. இந்த படத்தில் விஜயின் நடிப்பை ஆகா ஓஹோ என்று ஆள் ஆளுக்கு பாராட்டும் போதே வெளங்காது என்று தோன்றியது. இந்த படத்தோடு, விஜயும் இனி நடிப்பது முயற்சிப்பது இல்லை என்று முடிவுக்கு வந்து விட்டார். நான் இன்னும் படமும் பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப் போனா, எனக்கு 'காதலுக்கு மரியாதை' பாடல்களை விட 'கண்ணுக்குள் நிலவு' பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ராஜா-பாசில் கூட்டணியில் வந்த பாடல்களில் என் மனதில் முதல் இடம் கண்ணுக்குள் நிலவுக்கு தான். 'காதலுக்கு மரியாதை' கமர்ஷியல். 'கண்ணுக்குள் நிலவு' க்ளாசிகல். ஹரிஹரன் பாடிய 'நிலவு பாட்டு நிலவு பாட்டு' ரொம்பவே வித்தியாசமான கம்போசிங்க். நான் ரொம்பவே ரசிக்கும் ஒரு பாடல். யேசுதாஸின் 'இரவு பகலை தேட' அழகான கவிதை. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான இசை. சரணத்தில் வரும் பேஸ், யேசுதாஸ் குரலோடு சேர்ந்து இதமான ஒரு வருடலை கொடுக்கும். 'ரோஜா பூந்தோட்டம்' மனசுக்குள் இதமான ஒரு ஆட்டம் போடும். எவ்வளவு அழகான ரிதம். உன்னி கிருஷ்ணன்-அனுராதா ஸ்ரீராமின் நீரோடை மாதிரி குரல். பாசில் இந்த பாடலை ரொம்ப அழகாக படமாக்கி இருப்பார். விஜய்-ஷாலினியின் ஆட்டமும், முகபாவனைகளும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். சித்ராவின் 'சின்னஞ்சிறு கிளியே' அருமையான தாலாட்டுப் பாடல். அப்புறம் யேசுதாஸ்-அனுராதா ஸ்ரீராமின் 'ஒரு நாள் ஒரு கனவு' பாடல். இப்படி 'கண்ணுக்குள் நிலவு' ஒரு முழுமையான ராஜாவின் ராஜாங்கம். இன்று 'ரோஜா பூந்தோட்டம்' பாடலை கேட்கலாம்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Rojapoonthoddam.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;10. ஒரு நாள் ஒரு கனவு (2005)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எல்லாமே அழகா இருந்தா திருஷ்டி பொட்டு வைப்பாங்க இல்லையா. அப்படி தான் 'ஒரு நாள் ஒரு கனவு' படத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியது. படம் வெளிவரும் முன்னமே பாசில் 'இந்த படம் தான் நானும் ராஜாவும் இனைந்து செய்த படங்களிலேயே ஒரு இசை காவியம்' என்று சொன்ன போதே நான் டவுட் ஆனேன். இவரு ராஜா கூட செய்த பாடங்கள் எல்லாமே இசை காவியம் தானே. இப்படி ஓவரா பில்ட்-அப் கொடுக்கறாரே என்று. இந்த படத்துக்கு இயக்கம் 'இராமநாராயணன்' என்று சொன்னால் கூட நம்புவது கஷ்டம் தான். அவ்வளவு சுமாரான திரைக்கதை, இயக்கம். 'காற்றில் வரும் கீதமே' தவிர எல்லாமே சுமார் தான். கொஞ்சம் நல்லா இருந்த 'கஜுரகோ' பாட்டையும் படத்தில் கொடுமை படுத்தி இருப்பார் (இவ்வளவு கேவலமா ஒரு பாடலை நான் பார்த்தது இல்லை). என்னத்த சொல்ல, கடைசியா 'காற்றில் வரும் கீதேமே' கேட்டுட்டு முடிச்சிக்கலாம். நண்பர் சாணக்கியன் விருப்பமாக இந்த பாடலை கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/KatrinilVarum.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்.&lt;br /&gt;சிவா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114904426603068998?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/05/blog-post_30.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>45</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114834894820780871</guid><pubDate>Tue, 23 May 2006 01:48:00 +0000</pubDate><atom:updated>2006-05-25T08:29:20.390-07:00</atom:updated><title>கமலஹாசன் - இளையராஜா</title><description>நம்ம ப்ளாக் நண்பர் &lt;a href="http://vurathasindanai.blogspot.com/" target="_blank"&gt;சாணக்கியன்&lt;/a&gt; (சாய்) கமல் பாடிய பாடல்கள் வச்சி ஒரு பதிவு போடுங்கன்னு கேட்டுக்கிட்டார். நேயர் விருப்பமா பாடல் போட்டு, இப்போ பதிவு போட ஆரம்பிச்சாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;கமலை பற்றி நம்ம &lt;a href="http://myspb.blogspot.com/" target="_blank"&gt;எஸ்.பி.பி சுந்தர்&lt;/a&gt; அடிக்கடி அழகா, சில சமயம் கோவமா அவர் பதிவில் சொல்லிக்கிட்டே இருப்பார். இரண்டு படம் ஓடியதும் ஏதோ தமிழகமே தன் பின்னால் இருப்பது போல கேமராவை பார்த்து பேசிக்கொண்டு, துதி பாடல் வைத்துக்கொண்டு நாற்காலி கனவு கண்டு கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில், ஒரு நடிகனாக நடிப்பில் ஏதாவது வித்தியாசமா செய்யணும் என்று துடிப்போடு இருக்கும் மிக சில நடிகர்களில் கமலுக்கு எப்பவுமே முதலிடம் உண்டு. நானும் ஒரு கமல் ரசிகன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹேராம் பாடல் ஒலிப்பதிவை படம் வெளியாகும் போது அடிக்கடி காட்டுவார்கள். 'ரெண்டு குத்து பாட்டு, ஒரு துதி பாட்டு, ரெண்டு டூயட்' என்று மெனு கார்டை இசை அமைப்பாளர்களிடம் கொடுத்து விட்டு, ஹிட் ஆனா போதும் என்னும் இன்றைய நிலையில், இசையில் கூட கமல் ராஜாவிடம் உட்கார்ந்து கேட்டு ரசித்து பாடல் வாங்குவது போல சில க்ளிப் (ஹேராம்) பார்க்கும் போது இசையில் கமலின் ஈடுபாடு தெரியும். எங்கே வித்தியாசமான முயற்சிகள் இருக்கிறதோ, அங்கே சில தோல்விகளும் சகஜம் தான். கமல் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கும் பாடலுக்கும் கொடுத்த பில்ட்-அப் அப்படி தான் ஆனது. 'மும்பை எக்ஸ்பிரஸ்' பாடல்களை முதலில் கேட்கும் போது, இசை ஓட்டம் பிடி படாமல் ('ஏலே நீ எட்டிப்போ') எனக்கு தலைசுற்றியது உண்மை தான். JAZZ இசையாம், அது இப்படி தான் ஒரு கட்டமைப்பு இல்லாமல் ஓடுமாம். பொதுஜனத்திற்கு எந்த பாடலையும் கேட்டவுடன் ஒரு அழகான ஓட்டத்துடன் இருந்தால் தான் மனதில் ஒட்டும். அந்த வகையில் 'மும்பை எக்ஸ்பிரஸ்' பாடல்களும் சரி, படமும் சரி பத்தோடு ஒன்றாக போய்விட்டது. அதிலும் டக்கென்று பிடிக்கும் 'பூ பூத்தது' பாடலை படத்தில் கொத்து பரோட்டாவில் மாட்டின முட்டை மாதிரி கொத்தி இருப்பார் கமல். கொடுமையடா சாமி! உண்மையில் 'மும்பை எக்ஸ்பிரஸ்' இசையில் ராஜா இசையில் இன்னொரு சிகரம் தொட்டிருப்பார். அதற்கு கமலும் ஒரு காரணம். ஆனால் எல்லாம் வேஸ்டா போச்சு. இப்படி கமலின் முயற்சிகளை 100 பதிவு போட்டு எழுதிகிட்டே இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய நடிகர்களில் நன்றாக பாடக்கூடிய ஒரே நடிகரும் கமல் தான் ( விஜயும் ஓ.கே. அதுக்காக 'இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்' என்று எல்லா எஸ்.ஏ.சி படத்தில் எல்லாம் டைட்டில் போடுவது கொஞ்சம் ஓவர் :-)). பார்த்தா, பாடாத நடிகர்களே இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் கேசட்டில் பாடகர் பட்டியலில் தன் பெயரை பார்க்க ஆசை தான். பாடுவார்களா, படிப்பார்களா என்பது கேட்பவருக்கே வெளிச்சம். ஆனால் கமலை எடுத்துக் கொண்டால் வெறுமனே எளிதான பாடல்களாக பாடாமல், கிட்டத்தட்ட ஒரு professional பாடகர் அளவுக்கு நிறைய பண்ணியிருப்பார். டூயட் (நினைவோ ஒரு பறவை), தனி பாடல் (பொன் மானை தேடுதே), சோகம் (தென்பாண்டி சீமையிலெ, மாடவிளக்கே), ஹை பிட்ச் (விக்ரம், போட்டு வைத்த காதல் திட்டம்) என்று நிறைய வித்தியாசமான பாடல்களை முயற்சி செய்திருப்பார். அவற்றில் சில இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் பாடல் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இருந்து 'நினைவோ ஒரு பறவை'. அருமையான ஒரு டூயட் பாடல். இன்னொரு பாடலும் உடனே நினைவுக்கு வருகிறது. 'ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தால்'. இது கமல் தானே? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். மெல்லிசை மன்னர் இசையா? என்ன படம்?&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Ninaivo.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;அடுத்து, 'அவள் அப்படித்தான்' படத்தில் இருந்து 'பன்னீர் புஷ்பங்களே'. இளம் கமலின் குரல். இந்த பாடலை கேட்கும் போது கமலை பேசாமல் நடிகர் பட்டியலில் இருந்து பாடகர் பட்டியலில் சேர்த்து விடலாம் என்று தோன்றும். ஏனோ இந்த பாடலில் எனக்கு கமலின் குரல் ரொம்ப பிடிக்கும்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/paneerpush.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;'ஓ! மானே மானே' மோகன்-ஊர்வசி நடித்த படம் ( டி.வியில் அடிக்கடி 'ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது' பாடல் பார்க்கலாம்). ஆனால் அதில் கமல் பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. இது கமல் மோகனுக்கு பாடியதா? இல்லை கமலும் அந்த படத்தில் நடித்திருக்கிறாரா? தெரிந்தவர்கள் கூறுங்கள். ராஜாவின் இசையில் 'ஓ! மானே மானே' படத்தில் இருந்து 'பொன் மானை தேடுதே'.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/ponmanetheduthu.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;சத்யா படத்தில் இருந்து ஒரு வித்தியாசமான பாடல். 'போட்டா படியுது படியுது'. எல்லா பாடகர்களாலும் இந்த பாடலை பாடமுடியாது. கமலின் குரல் இயற்கையாகவே இந்த மாதிரி பாடல்களுக்கு பொருந்தி வரும். ( சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் 'புதுப்பேட்டை'ல இந்த மாதிரி ஒரு பாடல் கமல் பாடி இருக்கிறார்). ராஜாவின் கலக்கல் இசைக்காகவும் கமலின் குரலுக்காகவும் இந்த பாடல் எனக்கு புடிக்கும். உங்களுக்கு?&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/pottaalpadiyuthu.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;2000-க்கு அப்புறம் ராஜா இசையில் நான் ரசித்து வந்த சில விசயங்கள் குறைந்து போனது போல எனக்கு தோன்றும். எல்லாம் பீட்டும், கணிணி இசையுமா போனதின் தாக்கம் ராஜாவின் இசையிலும் கொஞ்சம் வர ஆரம்பித்தது. அழகாக ஒரு குரூப் வயலின் வந்து, அப்படியே ஒரு கோரஸ் சேர்த்து, Manual ட்ரம்ஸ் 'தும் தும்' என்று ஒரு உற்சாம் கொடுத்து..இப்படி அவரது ஒவ்வொரு பாடலிலும் ரசிக்க 1000 விசயங்கள் இருக்கும். அது 2000 க்கு அப்புறம் கொஞ்சம் மிஸ்ஸிங்.ம்ம்ம்ம்..நமக்கு வயசாகி போச்சு. இளவட்டங்கள் எப்படி விருப்புதோ அப்படி தானே (Current Trend) கொடுக்கமுடியும். தபேலா இசையை கேட்டாலே பத்திரிகைகளில் '80ஸ் மாதிரி இருக்கு. பழைய பாட்டு மாதிரி இருக்கு' என்று முத்திரை குத்தப் பட்ட ராஜாவின் இசை ஏராளம். இசை கருவிகளுக்கும் காலகட்டம் கொடுத்த நம்ம அறிவாளிங்கள என்ன சொல்ல. அப்போது தான் 'விருமாண்டி' வந்தது. அந்த படத்தில் ராஜா எவ்வளவு fresh-a வந்தார். அடடா! கமலுக்கு தான் அதில் பாதி பெருமை சேர வேண்டும். எல்லா பாடல்களையும் கமல் பாடினாலும், கேட்க ரொம்பவே நன்றாக இருந்தது. அதில் 'ஒன்ன விட இந்த ஒலகத்தில் ஒசந்தது' பாடலை படத்தில் பார்க்கும் போது, அந்த இருட்டும், நிலா வெளிச்சமும் அதை இசையில் ராஜா கொண்டு வரும் போது நாமே ஏதோ நிலவொளியில் இருப்பது போல தோன்றும். ஸ்ரேயா கோஷல் தன்னுடைய Limited உச்சரிப்பில் அழகாவே பாடி இருப்பார்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/UnnaVida.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா, வித்யாசாகர் இசையில் 'அன்பே சிவம்' பாடல். தலைப்பு பாடல். 'அன்பே சிவம்' படத்தை பற்றி நம்ம தமிழ்மணத்தில் ஒரு 50 பதிவு வந்திருக்கும். வித்யாசாகர், அர்ஜுன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கும் போதில் இருந்தே எனக்கு பிடிக்கும். இந்த பாடலை கேட்ட சாணக்கியனிடமே பின்னூட்டத்தில் ஏதாவது சொல்வார் என்று விட்டுவிட்டு பாடலை போடுகிறேன்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Yaarsivam.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114834894820780871?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/05/blog-post_22.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>49</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114760897771029980</guid><pubDate>Sun, 14 May 2006 12:16:00 +0000</pubDate><atom:updated>2006-10-27T01:33:14.543-07:00</atom:updated><title>பாடாய் படுத்தும் காதல் (கட்டம்-3)</title><description>காதலை சொல்லியாச்சு. தேறுமா? தேறாதா?. நாளைக்கு 'என்னடா மாப்ள! லெட்டர் குடுத்தியா? என்ன சொன்னா?' அப்படின்னு கேட்கப் போகும் மக்காவுக்கு என்ன பதில் சொல்றது? நாம ஹீரோவா..காமெடியனா? இப்படி ஏகப்பட்ட வினாக்களுக்கு விடை அந்த புள்ள சொல்லப் போற பதிலில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பதில் 'நீ இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கல' அப்படின்னு பதில் வந்தா, நம்ம பசங்க உலகமே கவுந்திட்ட மாதிரி சோகமாகி, ரோட்டோடமா இருக்கிற ஒரு ரெக்கார்டிங் கடைல ஒரே சோகப்பாட்டா பதிந்து, அதை ரிவைண்ட் பண்ணி ரிவைண்ட் பண்ணி கேட்டு..அந்த செட்டு ஒடைஞ்சி போயி..ம்ம்ம்...சில பேர் கவலையே இல்லாம, மறுபடி கஜினி முகம்மது மாதிரி படை எடுத்துக்கிட்டே இருப்பாங்க. சில பேர் 'நம்ம வாழ்க்கையே முடிஞ்சி போச்சு' என்று தாடி எல்லாம் வளர்த்து அப்படியாவது O.K ஆகுமா என்று பார்ப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் இதுக்கு பேர் போனவர் நம்ம முரளி. 'இதயமே..இதயமே..உன் மௌனம் என்னை கொல்லுதே' என்று நம்ம முரளி சோகமா பாட ஆரம்பிச்சாலே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுதுங்க. இதுக்கெல்லாம் இப்படி மழை பெய்ய ஆரம்பிச்சா, ஊர்ல எத்தனை பயலுவ இப்படி சுத்திக்கிட்டு இருக்காணுவ. ஒரு பேய் மழைக்கே சென்னை அல்லோலப் பட்டுப் போச்சு. எல்லாருக்கும் இப்படி மழை பெய்ய ஆரம்பிச்சா, சென்னை தாங்குமா. ஊர்ல எத்தனை பேருக்கு நீச்சல் தெரியும். இதை எல்லாம் கொஞ்சம் யோசிச்சி பீலிங் வுடுங்க முரளி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவில் பாட்டுக்கு பஞ்சமே இல்லீங்க. இந்த பதிவு கிட்டத்தட்ட எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் மாதிரி தான். முதலில் மூன்று பாடல் (எஸ்.பி.பி/மனோ/யேசுதாஸ்). அப்புறம் மற்ற எஸ்.பி.பி பாடல்களை என்னால் கழிக்க முடியவில்லை. கொஞ்சம் பெரிய பதிவு தான். நேரம் இருக்கும் போது ஒவ்வொரு பாடலாய் கேட்டுப்பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஹீரோவுக்கு ஹீரோயின் மேலே காதல் (பெரிய கண்டுபிடிப்பு..கதைய சொல்லுடே). வழக்கம் போல ஹீரோயினுக்கு புடிக்காம போய்டும். அப்புறம் ஹீரோயினுக்கு வேறு இடத்தில் நிச்சயம் ஆகி, அவரும் அங்கேயே வந்து தங்க, நம்ம ஹீரோ ஹீரோயின் மேல இருக்கிற பாசத்துல அவருக்கு பணிவிடை செஞ்சிக்கிட்டு கிடப்பார் (அதே தாங்க..'டார்லிங் டார்லிங் டார்லிங்'). ஹீரோவ மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டி 'ஓ'ன்னு அழாத குறையா பாடிக்கிட்டு இருப்பார். தியேட்டர்ல நாமலே அழுற மாதிரி உக்காந்து பாத்துக்கிட்டு இருப்போம். ஆனா அந்த பாட்டு கேட்கிற (படத்தில்) தோழிங்க எல்லோரும் ஒரு உணர்ச்சியே இல்லாம சிரிச்சிக்கிட்டே தலையாட்டி (படத்துல பாட்ட ரசிக்கிற மாதிரி செயற்கையயா தலையாட்டறத பாக்கிற கொடுமை மாதிரி வேற கொடுமையே கெடையாதுங்க) பாட்ட கேட்பாங்க. பாட்டு முடிஞ்சதும் 'ரொம்ப நல்லா பாடுனீங்க' அப்படின்னு எல்லோரும் கை கொடுக்க, ஓரமா போய் கண்ணுல முட்டிக்கிட்டு நிக்கிற கண்ணீர தட்டிவிட்டு தியாகியா சிரிப்பார். நாமும் பக்கத்துல இருக்கிறவன் பாககறதுக்குள்ள கண்ண தொடச்சிக்கிட்டு அடுத்த கூத்தை பார்க்க ஆரம்பிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி பாடல்களில் முதல் பங்கு கவிஞர்களுக்கு. ஒவ்வொரு வரிய கேட்கும் போதும் 'அண்ணன் தியாகி வாழ்க!!' அப்படின்னு நாம சீட்ட விட்டு எழுந்தது கத்தணும் போல இருக்கும். அடுத்து பாடகர். சோகமாகவும் தெரியணும், ஆனா அதை மறைச்சிக்கிட்டு சிரிக்கிற மாதிரியும் தெரியணும். எஸ்.பி.பி-க்கு இதை எல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா என்ன. ஐந்து நிமிடத்தில் தான் குரலில் எத்தனை ஏற்றம் இறக்கம், என்ன சோகம், ஒரு பரிதவிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;போதும்டே பேசினது..பாட்ட எங்க...இதோ வருது.&lt;br /&gt;&lt;br /&gt;'உள்ளக் கதவை நீ மெல்ல திறந்தால்&lt;br /&gt;அந்நாளே பொன் நாளாய் என் ஜென்மம் விடியும்&lt;br /&gt;எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்&lt;br /&gt;கொத்தான முல்லை பித்தான என்னை&lt;br /&gt;எப்போது முத்தாடுவாள்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்:&lt;/strong&gt; டார்லிங் டார்லிங் டார்லிங்&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்:&lt;/strong&gt; ஓ! நெஞ்சே&lt;br /&gt;&lt;strong&gt;பாடகர்:&lt;/strong&gt; எஸ்.பி.பி&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/OhNenjae.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;2. இது இன்னொரு வகை. காதலில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு சின்ன எல்.கே.ஜி படிக்கிற புள்ளைய புடிச்சி, நம்ம ஹீரோ 'ஓ'ன்னு அழுதுக்கிட்டே பாடிக்கிட்டு இருப்பார். அந்த சின்னப்புள்ளை புரியாம முழிச்சிக்கிட்டு இருக்க, நம்ம ஹீரோ உருகி உருகி பாடுவார்.&lt;br /&gt;போன பாடல் எஸ்.பி.பி. இது யேசுதாஸ். அதே தாங்க..'ஈராமான ரோஜாவே..என்னை பார்த்து மூடாதே'. 'இளமைக் காலங்கள்' படத்த்தில் பாடல்கள் அத்தனையும் ஒரு ரேஞ்சில் ராஜா கொடுத்திருப்பார் ('வாடா என் வீரா' தவிர). அதில் இந்த பாடலின் தாளம் நம்மை ரொம்பவே சோகமாக்கி விடும். மழையில் நனைந்து கொண்டே மோகன் பரிதாபமா பாடுவார் (முரளி, மோகன விட்டா யாருமே இந்த மாதிரி எல்லாம் நடிக்க முடியாது..யப்பா..உங்களால தாம்பா நாட்டுல/சினிமாவுல மழையே பெய்யுது). இசையிலும் சோகப்பாட்டு தானே என்று ஒப்பேத்தாமல் அழகாக கொடுத்திருப்பார் ராஜா. யேசுதாஸின் குரலின் உருக்கத்தை பற்றி தனியா சொல்ல வேண்டியது இல்லை. உருக ஒரு பாடல். இதோ..&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பார்த்து ஒரு மேகம்&lt;br /&gt;ஜன்னல் சாத்தி விட்டுப் போகும்.&lt;br /&gt;உன் வாசலில் என்னை கோலம் இடு&lt;br /&gt;இல்லை என்றால் ஒரு சாபம் இடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்:&lt;/strong&gt; இளமை காலங்கள்&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்:&lt;/strong&gt; ஈரமான ரோஜாவே&lt;br /&gt;&lt;strong&gt;பாடகர்:&lt;/strong&gt; யேசுதாஸ்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EramaanaRojavE.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;3. எஸ்.பி.பி, யேசுதாஸ் போட்டாச்சு. அடுத்ததா, மனோ பாடல் ஒன்று போட்டுடலாம். சரி தானே. இந்த பாடலில் முதலில் இளையராஜாவை சொல்லலாம். அந்த தொடக்க இசை (Prelude), கிடாரும் புல்லாங்குழலும் சேர்ந்து ஆரம்பிக்குமே, அந்த சில விநாடி இசையில் தான் எத்தனை சோகம். சே! பாட்ட சொல்லாம ஆரம்பிச்சுட்டேன். 'மைடியர் மார்த்தாண்டன்' படத்தில் இருந்து 'ஓ! அழகு நிலவு சிரிக்க மறந்ததே'. பாடலில் மனோ அழகா 'ஓ' போடுவார் :-). மனதை வருடிச் செல்லும் பாடலின் அழகான ஓட்டம், மனோவின் குரல், அழகான வரிகள் என்று இந்த பாடலும் சோகத்திலும் ஒரு சுகம் கொடுக்கும் பாடல். இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;நீர் மேல் அழகிய கோலம்&lt;br /&gt;போட்டேன் தினம் தினம் நானும்&lt;br /&gt;நினைத்தால் இனிமை தான்&lt;br /&gt;நடந்தால் அருமை தான்&lt;br /&gt;நினைவே நினைவிலே விழியிலே எழுதடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்:&lt;/strong&gt; மைடியர் மார்த்தாண்டன்&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்:&lt;/strong&gt; ஓ! அழகு நிலவு சிரிக்க மறந்ததே&lt;br /&gt;&lt;strong&gt;பாடகர்:&lt;/strong&gt; மனோ&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/OhAzhaguNilavu.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இனி நம்ம எஸ்.பி.பி தனி ஆவர்த்தனத்தை ஆரம்பிக்கலாம். பழசு, புதுசு என்று கலந்து கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. இதுவும் 'இளமை காலங்கள்' யேசுதாஸ் பாட்டு மாதிரி தான். பிரபு ஒரு சின்ன பையனை தூக்கி வச்சிக்கிட்டு சோகமா பாடிக்கிட்டு இருப்பார் (மழை எல்லாம் பெய்யாது). ராஜாவின் தபேலா சுகமாய் தாலாட்டும். தபேலாவில் ராஜா நிறைய பாடல்கள் கொடுத்திருந்தாலும் இந்த பாடல் எனக்கென்னமோ ரொம்ப rich-ஆ தெரியும். 'உறுதி மொழி' படத்தில் இருந்து 'அன்புக் கதை..வம்புக் கதை..எந்தன் கதை..காதல் கதையே' இப்படி கதை கதையா எஸ்.பி.பி பாடுகிறார். அவரது குரலில் இந்த பாடல் இன்னும் அழக்காக தெரியும். அனுபவித்து பாடி இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்:&lt;/strong&gt; உறுதி மொழி&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்:&lt;/strong&gt; அன்புக் கதை..வம்புக் கதை&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Anbukkathai.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;2. எனக்கு எப்பவுமே எஸ்.பி.பி யோட 70ஸ்-80ஸ் பாடல்கள் என்றால் கிறக்கம் உண்டு. அது ராஜா இசையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இந்த பாடல்கள் எல்லாம் கேட்கும் போது, அடடா! இப்படி எல்லாம் ஒரு ஆரோக்கியமான இசை திரை இசையில் இசை அமைப்பாளர் வித்தியாசம் இல்லாமல் இருந்திருக்கிறதே என்று தோன்றும். 'அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை' படத்தில் இருந்து 'எதிர்ப்பார்த்தேன் இளங்கிளிய காணலையே'. இந்த பாடல்களின் இசை அமைப்பாளர் பற்றி தெரியாது. ஒவ்வொரு வார்த்தையையும் எஸ்.பி.பி பாடுவதை ரசித்துக் கொண்டே இருக்கலாம். 5 நிமிடம் நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். ம்ம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்:&lt;/strong&gt; அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்:&lt;/strong&gt; எதிர்ப்பார்த்தேன் இளங்கிளிய..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EthirpathEn.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;3. 'தென்றலோ தீயோ! தீண்டியது நானோ'. இதில் வரும் பாடல்களை எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் என்று சொல்லியாச்சு. மறுபடி என்ன சொல்ல?. இளையராஜாவின் இசையில் 'ராகங்கள் மாறுவதில்லை' படப் பாடல். சில பாடல்கள் எத்தனை தடவை, எத்தனை வருடம் கேட்டாலும் அலுப்பதில்லை. இங்கே நான் கொடுக்கும் அத்தனை எஸ்.பி.பி பாடல்களும் அதில் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனம் உன்னை என்றும்&lt;br /&gt;பொன் மலர் பூஜை செய்யும்&lt;br /&gt;கரைகள் காணா அலைகள் ஆனேன்&lt;br /&gt;தனிமையே! தனல் மலர் ஆனேன் நானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்&lt;/strong&gt;: ராகங்கள் மாறுவதில்லை&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்&lt;/strong&gt; : தென்றலோ தீயோ&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/ThenraloTheeyo.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;4. 'மலரே என்னன்ன கோலம்..எதனால் என் மீது கோபம்'. 'ஆட்டோ ராஜா' படப்பாடல். இந்த படத்தில் 'சங்கத்தில் பாடாத கவிதை' பாடல் மட்டும் தான் ராஜாவின் இசை என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் raaja.com -ல் இந்த பாடலும் ராஜாவின் இசை தான் என்று போட்டிருக்கிறார்கள். சரியாக தெரியவில்லை. ரொம்ப குறிப்பிட்டு சொல்லணும்னா இந்த பாடலின் வரிகள் அவ்வளவு அருமையா இருக்கும். வழக்கம் போல எஸ்.பி.பி :-).&lt;br /&gt;அந்த ஒரு வரி 'மலரே! நலமா ' அப்படின்னு சோகத்தோட சிரிச்சிக்கிட்டே பாடுவாரே. அடடா..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்:&lt;/strong&gt; ஆட்டோ ராஜா&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்:&lt;/strong&gt; மலரே என்னன்ன கோலம்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தம் உன்னோடு சொந்தம்&lt;br /&gt;உனக்கேன் என்னோடு பந்தம்&lt;br /&gt;ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கே பூவேது காயேது&lt;br /&gt;நினைத்தால் எட்டாத தூரம்.&lt;br /&gt;எனக்கேன் உன் மீது மோகம்&lt;br /&gt;திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே..நீ எங்கே! நான் எங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/MalareEnnana.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இநத பாடலை பற்றி நம்ம புராணம் ஒன்று சிவபுராணத்தில் எழுதி இருக்கிறேன். நேரம் இருந்தா &lt;a href="http://sivapuraanam.blogspot.com/2005/09/blog-post_26.html" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt; படிச்சி பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;5. கடைசியா ராஜா இசையோடு பதிவை முடிச்சிக்கலாம். இந்த பாடல் எந்த அளவுக்கு இந்த தலைப்பில் ஒத்து வரும் என்று தெரியவில்லை. ஆனால் 'எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம்' போல வரிசையா போட்டுக்கிட்டு இருப்பதால் இதையும் கொடுக்கிறேன். இந்த பாடலில் 'அம்மாடி' அப்படின்னு ஹை பிட்சில ஜிவ்வுன்னு போவார். யப்பா! இதில் எஸ்.பி.பிய அடிக்கிறதுக்கு எவரும் கிடையாது. சோகம் எவ்வளவு சுகம் (பாடலில் மட்டும்) என்று இந்த பாடல் கேட்டால் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்:&lt;/strong&gt; கிராமத்து அத்தியாயம்.&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்&lt;/strong&gt;: வாடாத ரோசாப்பூ நா ஒன்னு பார்த்தேன்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/VaadaathaRosaaPoo.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;ரொம்ப பெரிய பதிவு தான். 8 பாடல் போட்டிருக்கிறேன். அத்தனையும் என்னை பொருத்தவரை முத்துக்கள். நேரம் கிடைக்கும் போது பொறுமையா கேட்டு சந்தோசமா (சோகமாயிடாதீங்க) இருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அடுத்தக் கட்டத்தில் சந்திப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114760897771029980?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/05/3_14.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>23</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114722891669924492</guid><pubDate>Wed, 10 May 2006 02:41:00 +0000</pubDate><atom:updated>2006-05-22T18:46:57.096-07:00</atom:updated><title>அக்கம் பக்கம்</title><description>ரொம்ப நாளா இந்த பதிவு போடணும்னு யோசித்துக்கிட்டே இருந்தேன். இன்று தான் ஒரு செட் சி.டி வந்தது. சரின்னு ஆரம்பிச்சாச்சி. ராஜாவின் இசையில் மற்ற மொழி பாடல்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் நிறைய பேர் ஹிந்தி தெரியாமலே ஹிந்தி பாட்டு கேட்டிருப்பீங்க. கைல தார் டின்னோட அலைஞ்சாலும் அலைவோமே தவிர ஹிந்தி மட்டும் கத்துக்க மாட்டோம். தமில் வலக்கறோம்..தமில் வலக்கறோம்னு சில எருமைங்க வயிறு வளர்த்தது தான் மிச்சம். புண்ணியத்துக்கு சென்னைலயே வாழ்க்கைய ஓட்டுறதால பொழைசசேன். பெங்களூர் போனோம்னா வீரப்பன் ராஜ்குமார கடத்தாம இருக்கணும் (இப்போ அந்த பிரச்சனை இல்லை), இல்லன்னா நாட்டுல நல்லா மழை பெய்யணும். இல்லன்னா பிரச்சனை தான். அதுக்கு வடக்க போனா சொல்லவே வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி! சரி! அந்த பிரச்சனை எல்லாம் எதுக்கு..பாட்ட போடுடே அப்படின்னு யாரோ திட்டற மாதிரி இருக்கு..பதிவுக்கு போய்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜா ரசிகர் மன்றத்தில் (யாகூ குழுமம்) சேர்கிற வரைக்கும் எனக்கும் ராஜாவின் மற்ற மொழி பாடல்கள் பரிட்சயம் கிடையாது. அதில் சேர்ந்த பின் தான் ராஜாவின் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் பாடல்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே மற்ற மொழி உச்சரிப்பு கேட்டால் நமக்கு கொஞ்சம் இடிக்கும். சில இடங்களில் என்னடா பாடுறானுங்க என்று சிரிப்பு வரும். (அவனுங்க நம்ம 'இ'ய பாத்து, என்னடே இடியாப்பம் மாதிரி இருக்குன்னு சொல்வானுங்க..நாம என்னடா முட்ட முட்டையா போடறீங்க..எப்போடா எழுதுவீங்க அப்படின்னு திருப்பி சொல்லிக்க வேண்டியது தான்). ஆனால் ராஜாவின் இசைக்காக நான் எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்தேன். இப்போ தெலுங்கு, கன்னட உச்சரிப்புகள் பழகிப் போய்விட்டது. உங்களுக்கு கேட்டு பழக்கம் இல்லன்னா, ஒரு தடவையாவது கேட்டு பாருங்க..ராஜாவுக்காகா.. எஸ்.பி.பி-க்காக..ஜானகிக்காக..அப்புறம் கண்டிப்பா புடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தெலுங்கு தேசத்துக்கு செல்வோம். தமிழுக்கு அப்புறம் ராஜா ரொம்ப சிறப்பாக செய்தது தெலுங்கில் தான். அதில் நிறைய டப் ஆகி, நமக்கே இது டப் படமா என்று தெரியாமல் கலக்கிய பாடல்கள் ஏராளம் (இதயத்தை திருடாதே, சிவா, சலங்கையில் ஒரு சங்கீதம், பாடும் பறவைகள்). இதில் Aalapana (சலங்கையில் ஒரு சங்கீதம்), Abhinandana, Anweshna (பாடும் பறவைகள்) மூன்றையும் கேட்கும் போது ராஜா என் மனசில் எங்கேயோ போய்டுவார். (இந்த மூன்றுமே என்னிடம் இல்லை. ஆர்டர் பண்ணி இல்லன்னுட்டானுவ &lt;br /&gt;:-((. இன்று ஒரு 5 சி.டி வந்தது. சரி அதில் இருந்து ஒரு பாடலை கொடுக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜாவின் 80ஸ் முத்திரை. எஸ்.பி.பி-ஜானகி ஜோடி. சில பாடல்கள் கேட்கும் போது அதில் மனசு மாட்டிக்கும். தினமும் 10 தடவை கேட்டாலும் அப்படியே வாரக் கணக்கா சலிக்காம கேட்டுக்கிட்டே இருப்போம். அப்படித் தான் இந்த பாடலிலும் மனசு மாட்டி ஒரு மாசம் ஆச்சு. இன்னும் மீண்ட பாடில்லை. மறுபடியும் சொல்றேன். பாட்டு தெலுங்கு பாட்டு. கொஞ்சம் பொறுமை தேவை. பொறுமையா கேட்டுட்டு புடிச்சா சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;படம்: மஹரிஷி&lt;br /&gt;இயக்கம்: வம்சி (வம்சி படம்னாலே ராஜா பொளந்து கட்டுவார்)&lt;br /&gt;பாடல் : சுமம் ப்ரதி சுமம் சுமம்&lt;br /&gt;பாடியவர்கள்: எஸ்.பி.பி &amp; ஜானகி.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Sumam.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இப்போ கன்னடம். தெலுங்குக்கு அடுத்த படியா ராஜா கன்னடத்தில் சிறப்பாக செய்தது மாதிரி தோன்றும். நான் இது வரை ஒரு 4 படம் பாடல் கேட்டிருக்கிறேன். அத்தனையும் அவ்வளவு ப்ரஸ்ஸா, கலக்கலா இருக்கு. டிப்டூருக்கு (கர்னாடகா) சித்தி வீட்டுக்கு போகும் போது சில கன்னட படம் பார்த்து, பாட்டெல்லாம் கேட்டு 'டேய்! நீங்கெல்லாம் இந்தியாவுல தான் இருக்கீங்களா' அப்படின்னு கேட்டுட்டு வந்திருக்கேன். அப்போ ராஜாவெல்லாம் ரசிக்க ஆரம்பிக்கலை. இந்த ராஜாவின் பாடல் எல்லாம் கேட்டா, 'ஓ! நீங்க கூட இப்படி எல்லாம் கேப்பீங்களா' அப்படின்னு ஆச்சரிய பட்டுப் போனேன். 1995ல 'கண்களின் வார்த்தைகள்' என்று ஒரு டப்பிங் படம் வந்தது. ராஜாவின் இசையில் பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கும். 'நம்மூர மந்தார ஹூவே' என்ற கன்னட படத்தின் டப்பிங் தான் அது. அதில் 'அல்லி..சுந்தரவள்ளி..லாலி' என்று அருண்மொழி பாடிய பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதன் ஒரிஜினலை எஸ்.பி.பி பாடி இருப்பார். கூடுதல் இனிமை. நல்ல ஒரு வித்தியாசமான கம்போசிங்க். கேட்டு பாருங்க.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Halli.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இதே பாடல். அருண்மொழி குரலில். தமிழில்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Alli.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;கடைசியா மலையாளப் பாடல் ஒன்று. ராஜா மலையாளத்தில் கணிசமான அளவுக்கு இசை அமைத்திருக்கார். ஆனாலும் எனக்கென்னமோ எல்லாமே ஒரே அச்சில் வார்த்த கொழுக்கட்டை மாதிரி தான் இருக்கு. அதே யேசுதாஸ், ஸ்ரீகுமார் எல்லா பாடல்களுக்கும். அப்புறம் படங்களும் பாடல்களுக்கு ஒரு வித்தியாசமான களம் கொடுக்காது. ராஜாவும் ரொம்ப வித்தியாசம் காட்டாமல் தன் வழக்கமான ஸ்டைலாகவே கொடுத்த மாதிரி ஒரு தோற்ற்ம். அதனால் எல்லா மொழி பாடல்களையும் எடுத்தால், மலையாளம் கடைசில தான் வருது. ஆனால் ராஜாவுக்கு முழு தீனி போட்ட இரண்டு படங்களும் மலையாளத்தில் தான் உண்டு. ஒன்று குரு. இரண்டாவது சிறைச்சாலை. குருவை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். ஏதோ ஒரு உலகத்தில் அனைவருக்கும் கண் தெரியாது. அங்கு செல்லும் மோகன்லால் ஒரு கனியின் சாறினை உண்டால் கண்பார்வை கிடைக்கும் என்று தெரிந்து அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி அதை கொடுப்பார். கண்பார்வை கிடைத்து, முதன் முதலாக உலகத்தின் அழகை பார்க்கும் ஒவ்வொரின் சந்தோசத்தையும் இந்த பாடலில் இசையால் சொல்வார் ராஜா. அணு அணுவாக ரசிக்கலாம் இந்த பாடலின் இசையை. படத்தின் இசை முழுவதும் ஹங்கேரியில் ரெக்கார்டிங் செய்தார்கள். இந்த படத்தை இன்னும் பாக்கலன்னா சீக்கிரம் பாருங்க. ராஜாவின் இசைக்காக. இதோ பாடல்.(மம்முட்டியின் தொடக்க குரலோடு பாடல் ஆரம்பிக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;படம்: குரு&lt;br /&gt;பாடியவர்: யேசுதாஸ் &amp; குழுவினர்&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Arunakirana.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114722891669924492?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/05/blog-post_09.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>19</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114645310191934469</guid><pubDate>Mon, 01 May 2006 03:11:00 +0000</pubDate><atom:updated>2006-05-22T05:37:41.656-07:00</atom:updated><title>மழை வருது..மழை வருது..</title><description>அவன் அவன் கத்திரி வெயிலில் காய்ந்து கெடக்கறான்..எங்கடா மழை வருதுன்னு பாக்கறீங்களா..நம்ம ஊர்ல மழை வருதுன்னு வானிலை அறிவிப்பு கொடுத்தாலே, வருண பகவான் திரும்பி பாக்காம ஓடிருவார். நாஞ்சொல்லியா வரப்போறார். இது மழை பாடல் பற்றிய இசை மழை. &lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நாளா வெளியே எங்கேயும் போக முடியலீங்க. விடாது அடிக்கும் அடை மழை இங்கே..(அமெரிக்காவில்). அப்படியே சரி நாமும் ரெண்டு மழை பாட்டு போடலாம்னு தான் ஆரம்பிச்சாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;மழை என்றாலே என்ன ஒரு உற்சாகம். மழை வரப்போவதற்கு முன் வரும் அந்த மண் வாசனை. மழையில் நனைவது தான் என்ன ஒரு ஆனந்தம். எனக்கு மழையில் நனைவதுன்னா உயிர். நல்லா சொட்ட சொட்ட நனைஞ்சிட்டு வீட்டுக்கு போனவுடன், வாசலிலேயே டவலோடு காத்துக்கிட்டு இருக்கிற அம்மாக்கிட்ட ஒரு திட்டு கெடைக்குமே (இப்போ பொண்டாட்டிக்கிட்டட :-)). அதுவும் சுகம் தான். அதிலும் சைக்கிளில் போகும் போது மழையில் மாட்டிக்கிட்டா ஜாலி தான். ஏன்னா குடை பிடிக்க முடியாது. அந்த சாக்கில நல்லா நனையலாம். தலையெல்லாம் நனைஞ்சி மூஞ்செல்லாம் தண்ணி தெரிக்க, அப்படியே துடைச்சிக்கிட்டு, ஓடுற மழை நீரில் சைக்கிள் ஓட்டும் சுகம் கோடி கொடுத்தாலும் கிடைக்குமா.ம்ம்ம்..&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் தெரியாத சில பயலுவ, சின்னதா ஒரு நாலு துளி விழுறதுக்கு முன்னாடியே குடையை புடிச்சி வரப்போற மழையையும் வெரட்டி விட்டுடுவானுங்க. இங்கே பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது சின்ன சின்ன தூறல் விழ குடை புடிக்காமல் அப்படியே அன்னாந்து பார்த்துக்கிட்டே நிற்பேன் (இடி விழாம இருக்கக் கடவது). சுகமோ சுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முடிக்கும் வரை நெனைச்சா (வருண பகவான் மனசு வச்சா) சொட்ட சொட்ட நனைச்சுக்கிறது. வேலைக்கு சேர்ந்தவுடம் கைல நாலு காசு வந்தது. பர்ஸ் என்று ஒன்று பைக்குள் தொற்றிக்கொண்டது. அதற்கும் லைசன்ஸ், கிரெட் கார்டு என்று சில சமாசாரங்கள். கனத்த மழை என்றால் நனைய முடிவதில்லை. ஐயோ நனைஞ்சிருமேன்னு ஓட வேண்டிய இருக்கு :-)) வாழ்க்கை வசதி பெருக பெருக நல்ல நல்ல சந்தோசங்களை காவு கொடுக்க வேண்டியதா போகுது..ம்ம்..சரி சரி! பாட்டுக்கு போகலாம்&lt;br /&gt;&lt;br /&gt;மழையில் பாடுற பாட்டு நிறைய இருக்கு. நம்ம சினிமாவுல ஹீரோயின மழைல நனைய விடுறதே பாதி டைரக்டர்களுக்கு வேலை. அதில் உருப்படியா ஒரு மூன்று பாடல்களை கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் 'புன்னகை மன்னன்' படத்தில் இருந்து 'வான் மேகம்..பூப்பூவாய் தூவும்'. ராஜாவே இந்த அளவுக்கு ரொம்ப அழகாக ட்ரம்ஸ்-ஐ பயன் படுத்தி இருப்பது சில பாடல்களுக்கு தான். இந்த பதில் வரும் மூன்று பாடல்களுக்கும் இது பொருந்தும். பாடல் நமக்கும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும். சித்ராவின் அழகான குரலில் பாடல் இதோ.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/VaanMegam.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, மீண்டும் ரேவதி பாடல் தான் (திரையில் டீசண்டா மழையில் நனைந்த ஒரே நடிகை இவங்களா தான் இருக்கும்). மௌனராகத்தில் இருந்து 'ஓஹோ..மேகம் வந்ததோ'. இந்த பாடலுக்கு ட்ரம்ஸ் வாசித்தவர் என்னமா Enjoy பண்ணி வாசித்திருப்பார் (குறிப்பா 'பூக்கள் மேல் நீர் துளிகள் வெண்பாக்கள் பாடாதோ' முடிக்கும் போது). இதுவும் ராஜாவும் அனைத்து வித்தைகளையும் ரசித்துக்கேட்க கூடிய பாடல். இந்த முறை ரேவதிக்கு பாடுவது எஸ்.ஜானகி.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/OhOhMegam.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;அது என்ன..பொண்ணுங்க மட்டும் தான் மழையில் நனைஞ்சிக்கிட்டே பாடுவாங்களா?. இப்போ நம்ம ஹீரோ பாடும் ஒரு கலக்கல் பாடல். என்ன பாட்டு சொல்லுங்க..அதே தான்..'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு'. மழை சத்தத்தில் ஆரம்பிக்கும் Prelude..அப்படியே இடி சத்தம் வந்து அப்படியே ஒரு ட்ரம்ஸ்க்கு தாவும். அருமை. பல்லவியில் எஸ்.பி.பி கூடவே பாடி வரும் கிடாரின் அழகை பற்றி நான் சொல்லாம போனா அடுக்குமா. கமலின் ஆட்டமும், எஸ்.பி.பியின் உற்சாகமும் நாமும் மேடையில் ஆடுவதை போல ஒரு உணர்வை கொடுக்கும். ராஜாவின் 100% அக்மார்க் இசை மழை இதோ..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Megam.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114645310191934469?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/04/blog-post_114645310191934469.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>28</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114596488897270637</guid><pubDate>Tue, 25 Apr 2006 11:34:00 +0000</pubDate><atom:updated>2006-05-12T05:55:00.730-07:00</atom:updated><title>பாடாய் படுத்தும் காதல் (கட்டம்-2)</title><description>'என்னை தாலாட்ட வருவாளா' என்று பாடியாச்சு. அவள் வருவாளா? வர மாட்டாளான்னு தெரியணும்லா. அது தாங்க அடுத்த கட்டம். லவ்வ சொல்றது. இது தாங்க ரொம்ப சோதனையான கட்டம். இத தாண்டுறதுக்கே சில பயப்புள்ளைங்களுக்கு ரெண்டு மூனு வருசம் ஆயிரும். சிலதுங்களுக்கு இந்த கட்டமே கண்டமா போய் இறுதி கட்டமா போய்டும். &lt;br /&gt;&lt;br /&gt;காதலை 'அலைபாயுதே' மாதவன் மாதிரி 'நீ ரொம்ப அழகா இருக்க. லவ் பண்ணிடுவோமோன்னு பயமா இருக்கு' அப்படின்னு வழிஞ்சிக்கிட்டே சொல்லலாம். ஆனா இதுக்கு உலக மகா தைரியமும், எருமையை மாதிரி ரொம்ப கொஞ்சமா சொரணை மட்டும் இருக்கணும். இல்லன்னா வேலைக்காகாது.&lt;br /&gt;&lt;br /&gt;Love proposal-க்கு நம்ம முரளிய விட்டா வேற ஆளு யாரு இருக்கா. டைட்டில் போட ஆரம்பிக்கும் போது ஒரு லெட்டர எழுதி சட்டை பைக்குள்ள வைப்பார். க்ளைமாக்ஸ் வரைக்கும் அத பைக்குள்ளயே வச்சு, நம்ம பொறுமையை எல்லாம் சோதித்து, அப்புறம் க்ளைமாக்ஸ்ல லெட்டர கொடுக்க போகும் போது அது ஆடி மாசம் காத்துல அடிச்சிக்கிட்டு போய்டும்..ம்ம்ம்..நிஜத்திலும் இப்படி நிறைய பேர பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு எளிதான வழி, நம்மக்கிட்ட நல்லா பேசுற பொண்ணுன்னா, பேசிக்கிட்டே இருக்கும் போது, சைடுல பிட்ட போடுறது. நம்ம 'குஷி' விஜய் மாதிரி. 'உங்களுக்கு என்னல்லாம் புடிக்கும்னு' கேட்டுட்டு பதில் என்னன்னு பாக்குறது. 'எனக்கா! எனக்கு கானா உலகநாதன், P.வாசு...' இப்படி பட்டியல் போகும். 'இல்ல..அதுக்கு மேல' அப்படின்னு வளர்த்துக்கிட்டே போகலாம். ஏதாவது ஒரு கட்டத்தில் பலன் கிடைக்கலாம். பொண்ணு ரொம்ப உஷார் பார்ட்டின்னா, 'மவனே! நீ எதுக்கு கேக்கறன்னு தெரியும். அவ்வளவு ஈ.சியா நான் சொல்லிருவேனா' அப்படின்னு நமக்கு முரளி படம் க்ளைமாக்ஸ் ஒன்னு ரெடி பண்ணலாம். அது அவன் அவன் நேரத்தையும், கேள்வி கேட்கும் திறமையையும் பொருத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன அதுக்குமே வழி இல்லன்னா, இருக்கவே இருக்கு நண்பர்கள் பட்டாளம். ஒருத்தன வெளங்காம ஆக்குறதுன்னா ஓடி வருவாங்க (ஜாலியா தான் :-). தூது அனுப்பலாம். லெட்டர் கொடுத்து அனுப்பலாம். ஆனா பையன் எவ்வளவு நம்ப தகுந்தவன் என்று பாத்துக்கணும் :-) . அப்படித்தான் நான் கல்லூரி படிக்கும் போது கூட்டாளி குமாருக்கு ஒரு புள்ள மேல காதல் வந்திடுச்சி. எங்களுக்கும் வகுப்பில் ஒரு நல்ல கதை கெடச்சிது. ஆனா பையன் கட்டம்-1 ஐயே தாண்ட மாட்டேங்கறான். ஒரு நா, பையன நாங்க எல்லோரும் தள்ளிக்கிட்டு போய் லெட்டர் எழுத பயிற்சி கொடுத்தோம் (நான் இல்லீங்க..நான் கூட இருந்தேன்..அம்புட்டு தான் :-). அவனும் ஒரு 10 லெட்டர் எழுதி வழக்கம் போல கிழிச்சி கிழிச்சி போட்டான். அவனுக்கு ஒன்னும் திருப்தியா வரலையாம். 'சரி விடுல. நானே எழுதி தர்றேன்' என்று நம்ம ப்ரண்டு கோபி கடிதம் எழுத, கடிதம் ரெடியானது. கொடுக்கப் போகும் போது பையன் சொதப்ப, கோபி கடுப்பாகி 'போடா! பயந்தாங்கொள்ளி. நானாவது போய் கொடுக்கறேன்' (ஒரு உதவி தான்:-)என்று பைக்கை எடுத்துக்கிட்டு புள்ளைங்க நிக்கிற பஸ் ஸ்டாண்டுக்கு போய் கடிதத்தை நீட்டி இருக்கிறான். 100 புள்ளைங்க நிக்கிற எடத்துல இப்படி பண்ணினா அந்த புள்ள என்ன பண்ணும். வாங்கல. அடுத்த நாள் என்னிடம் என்னோட வகுப்பு தோழி கேட்டா 'நம்ம கோபி லவ் பண்ணறானாமே. நேத்து கடிதம் கொடுத்தனாமே' அப்படின்னு. வகுப்பு புல்லா ஒரே பேச்சு. 'அடப்பாவி நான் கொடுத்ததுன்னு சொல்லலையா' அப்படின்னு குமாரு கத்த 'பயத்துல சொல்ல மறந்துட்டேன்ல. மன்னிச்சிருல' அப்படின்னு கோபி கதையையே மாத்திட்டான். இப்படி பட்ட பயலுவ கிட்ட சாக்கிரதையா இருக்கணும். இல்லன்னா ஒரு நிமிசத்தில கதையே மாறி போய்டும் :-)).&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி..கதை சொல்லிக்கிட்டு இருக்கறேன். பதிவுக்கு போகலாம். இந்த பதிவுக்கு பாடல் தேர்வு செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நம்ம சதீஷும், தங்கமும் பெரிய பெரிய பட்டியலாக மடல் அனுப்பி ரொம்ப உதவி செய்தார்கள். ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி. பாடல்னா, 'அழகன்'ல மதுபாலா பாடுவாங்களே 'தத்தித்தோம்...' அப்படின்னு, 'என் கண்ணனே..உன் மீராவை நீ இங்கு பாராயோ' அப்படின்னு சொன்னதும் 'பொளேர்'ன்னு ஒன்னு விழும். இந்த மாதிரி பாட்டு (Love Proposal) தேடி தேடி அலுத்துப் போச்சு. அதுவும் ராஜா இசையில்..ம்ம்ம்ம்..சும்மா பாட்டுல 'I Love You' இருக்கிற மாதிரி 100 பாட்டு தேறும். ஆனா எல்லாம் சும்மா டூயட் பாட்டு மாதிரி தான் இருக்கு. சரி ஒரு ரெண்டு மூனு பாட்டோட திருப்தியா நிறுத்திக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாடல் மெல்லிசை மன்னர் M.S.V - ன் இசையில் (சரி தானே?) ஒரு அக்மார்க் Proposal பாடல். 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் இருந்து 'சிப்பி இருக்குது..முத்தும் இருக்குது..திறந்து பார்க்க நேரம் இல்லடி ராசாத்தி'. யப்பா! என்ன ஒரு பாடல். ஸ்ரீதேவி சந்தம் சொல்லிக்கொண்டே போக, கமல் அதை வார்த்தை போட்டு பாட, என்ன ஒரு அழகான பாடல். பார்க்கவும் ரசிக்கவும். முடிக்கும் போது 'கொடுத்த சந்தங்களில் என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்' என்று கமல் முடிக்க, இதை எதிர்ப்பார்க்காத ஸ்ரீதேவி ஒரு சின்ன அதிர்ச்சி காட்டி இருப்பார். அழகு. அப்புறம் எஸ்.பி.பி-ஐயும் ஜானகியையும் பற்றி சொல்லவும் வேண்டுமா. குரலிலேயே நடிக்க இந்த ரெண்டு பேரால் மட்டுமே முடியும். இதோ பாடல். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Sippi.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இரண்டாவதா, கடிதம் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது. 'குணா' படத்தில் இருந்து 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே'. காதலியை வச்சே கடிதம் எழுத சொல்வது ஒரு வகை. குணா படத்தையோ, கமலையோ பற்றி கேக்கணும்னா நம்ம MySPB ப்ளாக் சுந்தர்கிட்ட பேச சொல்லலாம். மனுசன் கலக்கலா சொல்வார். அதனால் நான் நிறைய சொல்லலை. கமல்-இளையராஜா கூட்டணி பற்றி சொல்லணும்னா நிறைய சொல்லலாம். தற்போதைய திரை உலகத்தில் இசை ஞானம் உள்ள ஒரே கலைஞர் கமல் (இல்ல..விஜய்க்கு ஆஜித்துக்கும் நிறைய குத்துப்பாட்டு ஞானம் உண்டு என்றெல்லாம் என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது..ஆமாம்..சொல்லிப்புட்டேன். :-). இந்த பாடலை பற்றி..'மனிதர் உணர்ந்து கொள்ள..இது மனிதர் காதல் அல்ல' (ஆனா! படம் பாக்கறவன் மனுசன் தானே..இப்படி சொன்ன எப்படி :-)) இந்த வசனம்..அப்புறம் கமல் வசனமாக சொல்லிக்கிட்டே போக, அதை பாடலாக பாடும் விதம் (பாட்டாவே படிச்சிட்டியா..நடு நடுவுல மானே தேனே போட்டுக்க')..ஜானகியின் குரல், தலைவரோட "கமல் ஸ்பெஷல்" இசை..இப்படி நிறைய..சரி சரி..பாட்டுக்கு போகலாம்..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Kanmani.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இறுதியாக, மௌனராகம் கார்த்திக் அந்த காலத்துல ரொம்ப பேமஸ். 'மிஸ்டர் சந்திரமௌலி..மிஸ்டர் சந்திரமௌலி' என்று அவர் மௌனராகத்தில் வந்தது என்றும் நினைவில் நிற்கும். அதையே அப்படி 'கோபுர வாசலிலே' படத்தில் ப்ரியதர்ஸன் பயன்"படுத்தி" இருப்பார். அந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் கார்த்திக் புகுந்து விளையாடுவார். இந்த பாடலை கிட்டத்தட்ட அலைபாயுதே மாதவன் ஸ்டைல் Proposal- என்று வச்சிக்கலாம். 'கேளடி பெண் பாவையே'. இளையராஜா-ப்ரியதர்ஸன் என்றால் விசேஷம் தான். எஸ்.பி.பி-யின் கலக்கல் பாடல் இங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Keladi.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ப்ளாக் சதீஷும், தங்கமும் நிறைய பாடல் சொல்லி கொடுத்தார்கள். சதீஷ் கூறிய 'புத்தம் புது மலரே' (அமராவதி), தங்கம் கூறிய 'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு' (சேரன் பாண்டியன்) பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த பாடல்கள் என்னிடம் இல்லாததால், கிடைத்தவுடன் இங்கே கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிரம் அடுத்த கட்டத்தில் சந்திக்கலாம்..வரட்டா..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114596488897270637?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/04/2_25.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114561985586281773</guid><pubDate>Fri, 21 Apr 2006 11:42:00 +0000</pubDate><atom:updated>2006-06-05T00:08:48.463-07:00</atom:updated><title>தாளம் மாறிப் போச்சு.</title><description>நமக்கு ஒரே மாதிரி சாப்பாட சாப்பிட்டுக்கிட்டு இருந்தா அலுத்து போயிடும் அல்லவா. முதல் ரவுண்ட சாம்பார் ஊத்தி கட்டிட்டு, அப்புறம் ரசத்தையும் ஒரு புடி புடிப்போம்லா. இருங்க! இருங்க! இது கீதம் ப்ளாக் தான். ஏதோ பாதை மாறி வந்துட்டோமோன்னு நெனைக்காதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாடல் என்றால் பல்லவி + (அனுபல்லவி) + சரணம் + பல்லவி + மீண்டும் அதே தாளத்தில் சரணம் + பல்லவி....இப்படி தான் எல்லா பாடலும் இருக்கிறது. பல்லவியும் சரணமும் கிட்ட தட்ட ஒரே இசை தாளத்தில் தான் அமையும் (சில ராஜா பாடல்கள் செமையா, அழகா ஒரு ட்ரம்ஸ்ல ஆரம்பிப்பார். சரணத்தில் டொபுக்குன்னு தபேலாவுக்கு போய்ருவார். நான் மனசுக்குள்ள 'என்னா தல, இப்படி ஜிவ்வுன்னு பாட்ட தொடங்கிட்டு இப்படி டொப்புன்னு விழ வச்சிட்டீங்களே' அப்படின்னு பொலம்பிக்குவேன். ஆனா அவருக்கு புடிச்ச ஒரு இசை கருவி தபேலா.ஒன்னுஞ்சொல்ல முடியாதுல்லா :-).&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே, பாடலின் இரண்டு சரணங்களும் 99% ஒரே தாள அமைப்பில், ஒரே இசை அமைப்பில் தான் அமைக்கிறார்கள். ஆனால் ராஜா ஒரு சில பாடல்களில் இரண்டாவது பல்லவியில் ஒரு shift கொடுத்து சுத்தமாக வேறு ஒரு தாள அமைப்பில் அமைத்திருப்பார். திடீர்னு 'பாட்ட மாத்து' அப்படின்னு ஜாலியா இசை அமைச்ச மாதிரி தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மாற்றுவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அந்த காட்சிக்கு அது தேவைப்படும். இரண்டாவது, சும்மானாட்டுக்கும் (சாம்பார், ரசம் மாதிரி) மாத்தி நமக்கு ஒரு வித்தியாசம் காட்டுவது. முதல் சரணத்தையும் இரண்டாவது சரணத்தையும் பாடகர் ஒரே ஓட்டத்தில் தான் பாடுவார். ஆனால், இசை கருவிகளை வேறு படித்தும் போது அந்த பாடல் இன்னும் ஒரு தளத்திற்கு செல்வது போல தோன்றும். ராஜாவிடம் எனக்கு பிடித்த ஒரு ஸ்டைல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், காட்சிக்கு ஏற்ற மாற்றங்களை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாடல், 'நாடோடி தென்றல்' படத்தில் ஒரு அருமையான பாடல். 'ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ'. ராஜாவும், ஜானகியும் பாடினாலே அந்த பாடல் அழகு தான். தலைவனை பிரிந்த தலைவி பிரிவுத் துயரால் பாடுகிறாள். ஜானகி பாடலை ஆரம்பிக்கிறார். பாடல் ரொம்பவே மெதுவாக போகும். டோலக்கை வைத்து ஒரு மெட்டில் மெதுவாக தட்டிக்கொண்டிருப்பார்கள். அது ஆமை மாதிரி ஒரு வேகத்தை பாடலுக்கு கொடுக்கும். இப்போது தலைவன் வருகிறான். இப்போது பிரிவு இல்லை. பாடல் வேகம் பிடிக்க வேண்டும் இல்லையா. ஜானகி எப்படி பாடினாரோ அதே வேகத்தில் தான் ராஜாவும் பாடுவார். ஆனால் 'வானமும் பூந்தென்றலும்' என்று ராஜா ஆரம்பிக்கும் போதில் இருந்து பாடலை தபேலாவுக்கு மாற்றுவார். இப்போது பாடல் வேகமாக செல்வது போல் ஒரு உணர்வை கொடுக்கும். இசை கருவிகளில் situation வித்தியாசம் காட்டுவது ரொம்ப அழகு. நீங்களும் கவனித்து ரசித்து மகிழுங்கள்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/OruKanam.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இரண்டாவது, மாவீரன் படத்தில் இருந்து 'நீ/நான் கொடுத்தத திருப்பி கொடுப்பேன்' பாடலை எடுத்துக் கொள்ளலாம். ஹீரோயின் வழக்கம் போல ராஜா மகள். திமிர் பிடித்தவள். மோதல் ஆரம்பிக்கிறது. ஹீரோ சவால் விட்டு பாடுகிறான் 'நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்..எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி'. ராஜா ட்ரம்ஸில் பாடலை கொண்டுபோகிறார். இங்கு ஹீரோவின் வீரம், கோவம் தெரியணும். இதை ராஜா ஒரு உறுதியான ட்ரம்ஸ் வைத்து காட்டி இருப்பார். பின் தமிழ் சினிமா வழக்கம் படி ஹீரோயின் காதலில் விழுகிறாள். இப்போது 'நான் கொடுத்தத திருப்பி கொடுத்தா, முத்தமா கொடு...அத மொத்தமா கொடு' என்று ஹீரோயின் ஆரம்பிக்கிறாள். இப்போது இங்கே காதல், மென்மை தெரிய வேண்டும். இங்கேயும் ட்ரம்ஸ் தான். ஆனால் இப்போது ராஜா அப்படியே இசையை அப்படியே கொஞ்சம் அமுக்கி இருப்பார். என்ன ஒரு அழகு. ஆஹா. இன்பம்..இன்பம்..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Neekoduthetha.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;முதல் வகையில் இறுதியாக, மீண்டும் நாடோடி தென்றலில் இருந்து 'ஏல மல காட்டுக்குள்ள' பாடலை எடுத்துக்கொள்ளலாம். இது பாண்டியன் தன் முறைப்பெண் ரஞ்சிதா தனக்கு கிடைக்காமல் கார்த்திக்கை விரும்புவது தெரிந்து பாடுவது. சபையில் எல்லோர் முன்னாலும் பாடுவது போல வரும். முதல் சரணம், ஒரு அழகான ரிபீட்டா ஒரு பீட்டில் செல்லும் 'முஞ்சடக்கி கடலுக்குள்ள முங்கி முங்கி முத்து எடுத்தேன்'...இப்படி போகும். அருமையான தெளிவான ஓட்டம். முதல் சரணம் முடிகிறது. படத்தில் க்ளைமாக்ஸ் நெருங்குகிறது. ராஜா பாடலை டாப் கியரில் ஜிவ்வுன்னு ஏத்துவார். அதே மெட்டு தன். மலேசியா முதல் பல்லவி மாதிரியே தான் பாடுவார். ஆனால், தாளத்தை மாற்றுவார். பாடலும் வேகம் பிடிக்கும். .இது இன்னொரு வித்தை. கேட்டு மகிழுங்கள்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Yelamala.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி..காட்சிக்கு தேவை இல்லை..அனாலும் சும்மானாட்டுக்கும் மாத்தி கலக்குறதும் நல்லா தானே இருக்கு. அப்படி ஒரு மூனு பாட்டு இங்கே கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சட்டென்று நினைவுக்கு வருவது 'மன்னன்' படத்தில் இருந்து எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு 'ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்'. ரஜினி-குஷ்புக்கு வரும் பாடல். ரொம்பவே அழகான பாட்டு. எஸ்.பி.பி- சுவர்ணலதாவின் குரலில் இன்னும் அழகு. பாடல் தொடக்கத்தில் இருந்து ஒரு Repeated Beat-ல டடக் டடக்னு ஓடிக்கிட்டு இருக்கும். திடீர்னு ரெண்டாவது சரணத்தில் டமக்கு டமக்குன்னு ஒரு தபேலாவுக்கு தாவுவார். செம ஆட்டம் போட ஒரு இசை. அருமை. கேட்டு மகிழுங்க மக்கா :-)&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/RajathiRaja.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;ரெண்டாவதா, இந்த பாடல் ரொம்ப புடிக்கும். ஆனா அவ்வளவா ஹிட் ஆகலை.ம்ம்ம்..'பாடு நிலாவே' ல இருந்து ஒரு teasing பாட்டு. 'குத்தம்மா நெல்லு குத்து'. என்ன அருமையானன Manual drums..அது அங்கே அங்கே வந்து 'தும்..தும்' ஒரு தட்டு தட்டிக்கிட்டு போறத கேக்கறது என்னா இதமா இருக்கு. ட்ரம்ஸ்-ம் தபேலாவும் கலந்து ஒரு Beat அமைத்திருப்பார். அருமை. சித்ராவின் குரலில் அந்த காட்சி (மோகனை வெரட்டுற) அப்படியே கண்ணு முன்னாடி வருது. அழகா ட்ரம்ஸ்ல போய்கிட்டு இருக்கிற பாட்ட, பாதில ஒரு குலவை சத்தம் கொடுத்து குத்து குத்துன்னு தபேலாவுல குத்தி இருப்பார்...செம குத்து..கலக்கிட்டிங்க தல..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Koottamaa.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இந்த பாட்ட எப்போ கேட்டீங்களோ..இதுவும் போன பாட்டு மாதிரி தான். அதே சித்ரா..கிட்டத்தட்ட teasing தான். ஆனா பெற்ற தாயை பார்த்து மகள் பாடுவது மாதிரி வரும். 'கற்பூர முல்லை' படத்தில் இருந்து 'வாம்மா! வா! சண்டிராணி'. இதிலும் ட்ரம்ஸ் அழகு..சித்ராவின் குரல் அழகு..இரண்டாவது சரணத்தில், ட்ரம்ஸ்-ல இருந்து கொட்டு (மத்தளம்)-க்கு மாறும் பாடல். அந்த அடி, அருமையா நம்மை தாளம் போட வைக்கும். நல்லா இருக்கும்டே..கேட்டு பாருங்க..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/VaammaVaa.rm" width="160" height="40" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114561985586281773?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/04/blog-post_21.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114502248205489006</guid><pubDate>Fri, 14 Apr 2006 13:47:00 +0000</pubDate><atom:updated>2007-03-20T05:19:41.436-07:00</atom:updated><title>பாடாய் படுத்தும் காதல் (முதல் கட்டம்)</title><description>காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. சினிமா இல்லை. சினிமா பாட்டு இல்லை. இந்த காதலை வச்சித்தாங்க 99% பாடல்கள் வருது. (இல்லை வந்தது - எனக்கு இப்போ வருகிற குத்துப்பாடல்களின் எண்ணிக்கை தெரியாததால்). காதலில் தான் எத்தனை கட்டங்கள். அத்தனைக்கும் எத்தனை விதமான பாடல்கள். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம் என்று பதிவு எழுத ஆரம்பிச்சாச்சு. (எழுதறதுக்கு நல்ல தலைப்பு கெடைச்சிடுச்சுடே மக்கா). எத்தனை பகுதி போகும் என்று தெரியலையே. பொறுமை காத்தருளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதல் கட்டம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தாங்க முதல் கட்டம். 'காதல் வந்திச்சாம்..ஓஓஓஓ..ஒரு காதல் வந்திச்சாம்'. 'ஏலே மக்கா! அந்த புள்ள ஒன்னையே பாக்குதுல' அப்படின்னு ஏத்தி விட்டும் வரலாம், இல்லன்னா 'மாமி! செத்த காப்பி பொடி கொடுக்கறேளா! அம்மா வாங்கிட்டு வர சொன்னாள்' அப்படின்னு எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்த ஐயங்காரு வீட்டு அழகாகவும் இருக்கலாம், 'எக்ஸ்க்யூஸ் மீ! கொஞ்சம் பல்லாவரத்துக்கு டிக்கட் எடுத்து தரமுடியுமா' அப்படின்னு 18A-ல் கேட்கும் பிகராலும் வரலாம். இப்படி எப்படினாலும் மனசுக்குள்ளே காதல் வரலாம். அப்படியே கிறுக்கு புடிச்சிப்போய் பையன் கொஞ்ச நாளா சுத்திக்கிட்டு இருப்பான். 'ஏல! கிறுக்கு பயலே! என்னாத்துக்கு தனியா ஒக்காந்து சிரிச்சிக்கிட்டு இருக்க. முனி ஏதாவது புடிச்சுட்டா' அப்படின்னு அம்மா சொல்லும் போது தெரிஞ்சுக்கலாம், ரொம்ப முத்திப்போச்சு என்று. 'ஆத்தா! ஒம்புள்ள எதிர்வீட்டு கனி கூட சுத்தறானாம. கண்டிச்சி வையி ' அப்படின்னு ஊர் காரனுவ சொல்லும் போது தான் தெரியும், புடிச்சது முனி இல்ல. கனி என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வானத்த பார்த்துக்கிட்டே 'உன்னை பார்த்த பின்பு நான்! நானாக இல்லையே' அப்படின்னு பாடுறது. வீட்டு ஓட்டு மேல ஒக்காந்துக்கிட்டு 'என்னை தாலாட்ட வருவாளா' அப்படின்னு தேடுறது, பொட்ட புள்ளையா இருந்தா கைல துப்பட்டாவ புடிச்சிக்கிட்டு எதிர்காத்துல வடக்கையும் தெக்கையுமா 'நேற்று இல்லாத மாற்றம்..என்னது' அப்படின்னு ஓடுறது...இப்படி தாங்க கட்டம்-1 ஆரம்பிக்கும். இப்போ தாங்க தென்றல் தோழியாகும் (தோழி பகைவள் ஆவாள் :-), நிலவு கூட பேசும். மனசுக்கும் பட்டாம் பூச்சி பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் கெளம்பும் பாட்டுக்கள் எல்லாம் அழகான கவிதைகள். அப்படி சில கவிதைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த மாதிரி பாடல்களில் முக்கிய பங்கு பாடலாசிரியருக்கு. அப்புறம் அதை பாடும் பாடகர். பாடலின் ஓட்டம் ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும், பாடலின் வரிகள் காதலையும் அள்ளிக்கொண்டு வரும். இசையை கொஞ்சம் அமுக்கியே வாசித்து இருப்பார்கள். அப்போ தானே மக்கா பாடுற பீலிங் புரியும். இந்த பீலிங் விடுறதுல நம்ம பசங்கள மிஞ்சிறதுக்கு ஒலகத்துல ஆளே கெடையாது. கொடுத்து வச்ச புள்ளைங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலில் ஆண்கள்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி பொன் முட்டையிடும் வாத்தாக மாறுவதற்கு முன் வந்த பாடல். ரஜினியின் சினிமா பாடல்களில் இந்த பாடலுக்கு எப்பவுமே முதல் இடம் தான். 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்'. ரஜினி படத்துல எல்லாம் இப்படி பாட்டு என்று புலம்புவதா, இல்லை 'எப்படி இருந்த ரஜினி இப்படி ஆகிட்டாருன்னு' சொல்றதா. இப்போ எதுக்கு அது. சந்தோசமா பாட்ட கேளுங்கடே. 'மயக்கம் என்ன..காதல் வாழ்க' என்று முடிப்பாரே, அப்போ எஸ்.பி.பி பாடுறத பார்த்தா நமக்கே காதலிக்கணும் போல தோணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை.&lt;br /&gt;அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆயிரம் பாடலே&lt;br /&gt;ஒன்று தான் எண்ணம் என்றால்..உறவு தான் ராகமே..&lt;br /&gt;எண்ணம் யாவும் சொல்லவா..&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Kaathalin.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இரண்டாவது ரொம்ப அருமையான பாடல். ராஜாவின் 80S முத்திரை. என்ன ஒரு Orchestration. என்ன ஒரு குரல் (அதே SPB தான்). இந்த பாடல் அப்படியே நம்ம கட்டம்-1 ல் வராது என்றாலும், இதிலும் ஒரு ஆணின் காதல் உற்சாகம் அப்படியே வருகிறது. 'முதல் வசந்தம்' படத்தில் வரும் 'பொன்னி நதி வெள்ளம் என்று' . இந்த பாடல் ஏனோ முதல் வசந்தம் படத்தில் வரும் மற்ற பாடல்களை விட கொஞ்சம் (70S) பழைய பாடல் மாதிரியே இருக்கிறது. இதோ ஒரு ராஜகீதம். கேளுங்க.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/PonniNathi.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடைசியா, இந்த பாட்டு போடலைன்னா இந்த பதிவே நிறைவாகாது. அதாங்க 'என்னை தாலாட்ட வருவாளா' . இந்த பாட்டு நான் கல்லூரி படிக்கும் போது பட்டையை கிளப்பியது. ஹரிஹரன் பாடிய ராஜா பாடல்களில் இதற்கு எப்பவுமே முதல் இடம் தான். கவிஞர் பழனி பாரதி என்று நினைக்கிறேன். இந்த படத்தில் ரொம்ப அருமையான பாடல்களை எழுதி இருப்பார். ரொம்ப விஷேசமா இந்த பாடலில் கேட்டு கிறுக்கு புடிச்சது அந்த பேஸ் (கிடார்) தான். ரொம்ப ரிச்சா இருக்கும். கேசட்டில் ராஜா Version-ம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது இரவு அவள் கூந்தலில்&lt;br /&gt;எனது பகல்கள் அவள் பார்வையில்&lt;br /&gt;காலம் எல்லாம் அவள் காதலில்&lt;br /&gt;கனவு கலையவில்லை கண்களில்&lt;br /&gt;இதயம் துடிக்கவில்லை ஆசையில்&lt;br /&gt;வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்&lt;br /&gt;நான் கேட்கும் பதில் இன்று வாராதா?&lt;br /&gt;நான் தூங்க வழி ஒன்று தாராதா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- கலக்கிட்டாங்கடே..கலக்கிட்டாங்க. பாட்டு இதோ.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EnnaiThaa1.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போ புள்ளைங்க பாடுறதை கேட்கலாம். இந்த வகைக்கு பாட்டு தேடுவதற்குள் வெறுத்துப் போய் விட்டது. நதியா பாட்டுல இருந்து ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ! எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா'. இசையை கேளுங்க. அப்படியே நதியா கூட சேர்ந்து ஓடுது. 'உனக்காகவே வாழ்கிறேன்' படப்பாடல். ஜானகியின் அருமையான குரலில்,ராஜாவின் கலக்கல் பாடல் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செந்தாழம் பூவே கதைகள் பேசு&lt;br /&gt;சிங்கார காற்றே மெதுவாய் வீசு&lt;br /&gt;என் காதல் தேவன் அருகே வந்தான்&lt;br /&gt;எனக்காக தானே இதயம் என்றான்&lt;br /&gt;நான் அந்த நேரம் நானாக இல்லை&lt;br /&gt;நாணங்களாலே வாய் பேச வில்லை...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்படி போகுதுங்க பாட்டு..இதோ.. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/OhEnthan.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போ சித்ரா! 'சந்தோசம்! இன்று சந்தோசம்' . மனிதனின் மறுபக்கம் படப்பாடல். போன பாடலுக்கும் இந்த பாடலுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. இதற்கும் தலைவர் தான் இசை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உன்னை கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்&lt;br /&gt;நீயோ என்னிடம் கேட்டாய் ஒரு காதல் யாசகம்&lt;br /&gt;அதை தாளாமல் மனமோ துள்ளுது.&lt;br /&gt;இந்த போராட்டம் சுகமாய் உள்ளது..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- சித்ராவின் இனிய குரலில் பாடல் இதோ..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/SanthosamIntru.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;போன ரெண்டு பாட்டும் ஆள் யாருன்னு தெரிஞ்சி பாடினாங்க. இப்போ ஆளே இன்னும் முடிவாகல..அதுக்குள்ள இவங்க புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'செந்தூரப்பூவே..செந்தூரப்பூவே..ஜில்லென்ற காற்றே..&lt;br /&gt;என் மன்னன் எங்கே..என் மன்னன் எங்கே..நீ கொஞ்சம் சொல்லாயோ'&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ராஜாவின் ஆரம்ப கால கலக்கல் பாடல். பதினாறு வயதிலே படப்பாடல். பாடியவர் ஜானகி. பாடல் இதோ..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/SenthoorappOve.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முடிக்கும் போது, கொஞ்சம் வித்தியாசமா ஒரு பாடலோடு முடிக்கலாம்னு தான் இந்த பாடல். ஒரே ஜானகி, சித்ரா. கொஞ்சம் புதுசா பவதாரணி பாடிய பாட்டொன்னு கேட்கலாமா.&lt;br /&gt;களஞ்சியம் என்று ஒரு இயக்குனர் இருந்தார். தேவயாணியின் ஆஸ்தான இயக்குனர். 'பூமணி' 'பூந்தோட்டம்' 'கிழக்கும் மேற்கும்' என்று ராஜாவின் இசையில் தேவயாணியை கதாநாயகியாக போட்டு வரிசையாக படம் எடுத்தார். நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலம் அது. எனக்கு 80S ராஜாவும் ஒன்று தான் 2000-ல் ராஜாவும் ஒன்று தான். அதனால் இந்த பாடல் எனது விருப்பமாக போடுகிறேன். 'பூங்காற்றே..நீ என்னை தொடலாமா' பாடல். 'கிழக்கும் மேற்கும்' படத்தில் இருந்து. கேளுங்க.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Poongatre.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா...ஒரு கட்டம் ஒன்றை தாண்டுவதற்கே போதும் போதும் என்று ஆகி விட்டது. அடுத்த கட்டம் தானே முக்கியமானது..அதாங்க காதலை அந்த புள்ளைக்கிட்ட சொல்றது..I Love You சொல்றதுக்குள்ள பயலுவ ஒரு வழி ஆகிடுவானுங்க. அது சம்மந்தமான பாடல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;சிவா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114502248205489006?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/04/blog-post_114502248205489006.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>34</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114342631093855287</guid><pubDate>Mon, 27 Mar 2006 02:14:00 +0000</pubDate><atom:updated>2006-05-16T21:30:03.233-07:00</atom:updated><title>நீயா? நானா? யார் தான் இங்கே பெரியவன்!!</title><description>தேர்தல் நேரம். எங்க பார்த்தாலும் ஒரே போட்டிங்க. நடிகர் செந்தில் எல்லாம் கலைஞருக்கு சவால் விடும் நேரம் (நேரத்த பாத்தியலா), இங்கே பாட்டிலேயே சில பேர் போட்டி போடுறங்க. யாரு ஜெயிச்சான்னு பார்க்கலாமா?. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடித்த சில பாட்டுப் போட்டிகள், முதலில் எம்.ஜி.ஆர்-யிடம் நம்ம கலைவாணர் (சரியா தெரியலீங்க) ஒரு பழைய படத்தில் (விக்கிரமாதித்தன்??) தப்பையை வச்சிக்கிட்டு கேள்வி மேலே கேள்வியா கேட்டு பாடுவார். ரொம்ப நல்லா இருக்கும். (பாட்டு இப்படி போகும் 'உலகினிலேயே பயங்கரமான ஆயுதம் என்று?' இவர் கேட்க, கலைவாணர் 'கத்தி' 'அருவா' என்று அடுக்குவார். அப்புறம் இவர் ' உலகினிலே பயங்கரமான ஆயுதம் நாக்கு' என்று சொல்வார் (குஷ்புகிட்ட கேட்டா 'ஆமாங்க..ஆமாம்' அப்படின்னு மூனு தரம் சத்தியம் பண்ணுவார் :-). அப்புறம் இன்னொரு போட்டி பாக்கியராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் வரும். ஷோபனா சங்கீதத்தில் பட்டையை கிளப்ப, இவர் 'லல்லல்லா' வச்சே சமாளிப்பார். செம காமெடி பாட்டு. கடைசில நொந்து நூலா போய் ஷோபனா 'சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்' அப்படின்னு பரிசை இவருக்கு கொடுத்திருவார். டக்குன்னு நினைவுக்கு வர்ற இன்னொரு பாடல் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்'ல ஒரு பாட்டு. பாட்டு என்னன்னு மறந்து போச்சே :-(&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவுல எடுத்துக்கிட்டீங்கன்னா பொதுவா போட்டிப் பாட்டுல ஹீரோதாங்க ஜெயிப்பார். அவருக்கு பாட தெரியுதோ, ஆட தெரியுதோ அதெல்லாம் தெரியாது. கடைசில கதாநாயகிய கால் தடுக்கி தள்ளிவிட்டாவது ஹீரோவ ஜெயிக்க வச்சிடுவாங்க. நம்ம சூப்பர் ஸ்டார் ஆட்டத்துக்கு பிரபுதேவா, லாரன்ஸ் எல்லோரும் பிச்சை எடுக்கணும். பின்ன!! ஆடி தோத்தவங்க எத்தனை பேரு.ம்ம்ம்ம்..அப்படி பட்ட சில உலகதரம் வாய்ந்த சில போட்டிகளையும், உண்மையிலேயே சில உருப்படியான போட்டிகளையும் இந்த பதிவில் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி! முதல் பாடல். நம்ம சூப்பர் ஸ்டாரிடம் இருந்தே ஆரம்பிக்கிறேன். 'தங்க மகன்' படத்தில் இருந்து 'பூமாலை! ஒரு பாவை ஆனது'. எஸ்.பி.பியை விட்டா போட்டிப் பாடல்களுக்கு பாட முடியுமா?. எதிர் பாட்டு எஸ்.ஜானகி. அடடா! என்னமா ஒரு இசை. இப்படி பாட்டு எல்லாம் ராஜாவுக்கு அல்வா மாதிரி. ட்ரம்ஸ், ட்ரம்பட் என்று ஒரே வெஸ்டர்ன் கலக்கல். இங்கே ரஜினியோடு போட்டிப் போட்டு தோற்ற அம்மணி பூர்ணிமா. எப்படி தோப்பாங்க. ஐயகோ..இந்த கொடுமையை எல்லாம் கேட்க ஆளே இல்லீங்களா. சூப்பரு ஆடி ஆடி பாப்பாரு (ட்ரை பண்ணுவாரு)..அம்மணியும் சளைக்காமல் ஆடி பட்டைய கிளப்புவாங்க. அப்புறம் தலைவர் 'இது வேலைக்கு ஆறதுல்ல (பாட்டு முடிய போதுல்லா)' அப்படின்னு போட்டுக்கிட்டு இருக்குற சட்டைய கலட்டி எறிவாரு. பூர்ணிமா 'லே! என்னா இது! சின்னப்புள்ள தனமா இருக்கு!' அப்படின்னு திரு திருன்னு முழிப்பாங்க. 'சரி! போய் தொல' அப்படின்னு துப்பட்டாவ எடுத்து வீசுவாங்க. அப்புறம் தலைவர் போட்டுருக்கிற பனியனையும் வீச, 'நான் இந்த வெளாட்டுக்கு வரல' அப்படின்னு அம்மணி முழிச்சிக்கிட்டு ஒரு 20 செகண்ட் நிப்பாங்க. அவ்வளவு தாங்க. 'ஹே..ஹே..ஹே' அப்படின்னு எஸ்.பி.பி உச்சஸ்தாயில் பாட, தலைவர் ஜெயிச்சிடுவார். ரசிக கண்மணிங்க, விசிலடிச்சான் குஞ்சுங்க எல்லாம் 'தலைவா' அப்படின்னு கீழ கெடந்த பழைய லாட்டரி டிக்கட்ட எல்லாம் பொறுக்கி கிழிச்சி பூ மாதிரி வீசுவாங்க. சுபம். 'பாட்ட போடாம, இது என்ன வழ வழன்னு' யாரோ திட்டுறது கேக்குது. சரி! இந்தாங்க பாட்டு.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Poomalaioru.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;போன பாடலுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத பாடல் இரண்டாவது. 'வருசஷம் 16' படத்தில் இருந்து 'கரையாத மனமும் உண்டோ'. இந்த படம் கார்த்திக், பாஸில், குஷ்பு எல்லோருடைய திரை வாழ்வில் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு படம். பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம். படம் பற்றி சொல்லத் தேவை இல்லை. தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டீங்க.இந்த பாடல் முதலில் எனக்கு ரொம்ப கர்னாடிக் மாதிரி தெரிந்தது. ஆனால் கேட்க கேட்க ரொம்ப புடிச்சு போயிற்று. அதிலும் இரண்டாவது சரணத்தில் ராஜா செம கலக்கு கலக்கி இருப்பார். "மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும் காவல் தெய்வமும் நீயே' என்று ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு வரிக்கும், வரி முடியும் போதும் ஒவ்வொரு தாளத்தில் வரும். அதிலும் தபேலாவும், மிருதங்கமும் மாற்றி மாற்றி ஆவர்த்தன்ம் செய்யும். இப்படி பாடலுக்கு யேசுதாஸை விட்டா வேற ஆள். மனுசன் குரலில் தான் என்ன ஒரு உருக்கம். சித்ரா மட்டும் என்ன சும்மாவா. ரசித்துக்கொண்டே இருக்கலாம். இதோ ஒரு இசை கச்சேரி.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Karaiyaatha.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;போன பாடல் ரொம்ப கர்னாடிக். இப்போ அதே போல உருப்படியான ஒரு போட்டி. ஆனா வெஸ்டர்னில். 'பாடு நிலாவே'யில் எல்லாமே ரொம்ப நல்ல பாடல்கள். ஆனால் ஏனோ 'மலையோரம் வீசும் காற்று தான் நிறைய பேருக்கு தெரிகிறது. இந்த போட்டி பாடல் 'வா வெளியே! இளம் பூங்குயிலே'. மறுபடியும் எஸ்.பி.பி. எதிர் பாட்டு சித்ரா. எனக்கு புடிச்ச ராஜாவின் ட்ரம்ஸ் பாடல்களில் இதுவும் ஒன்று. பல்லவி என்னா ஒரு பீட். ஏஸ்.பி.பி பாடலை தொடங்கும் போது லேசா மனோவோ என்று ஒர சந்தேகம் வந்து போகும். அப்புறம் ஒரு வரி பாடியதுமே தெரிஞ்சிடும். இது ஒரு க்ளைமாக்ஸ் பாடல். மோகனுக்கு க்ளைமாக்ஸ் கட்ட நதியாவின் அப்பா துப்பாக்கியோடு ரெடியா இருப்பார். போலிஸ் நதியாவை 'மேடம்! நீங்க கண்டிப்பா பாடணும். இல்லன்னா அவர் உயிருக்கு ஆபத்து' (என்ன லாஜிக்கோ..மறந்து போச்சுங்க :-) அப்படின்னு சொல்லி நதியாவை எதிர் பாட்டு பாட அனுப்புவாங்க. இது தெரியாம மோகன் அலம்பி பாடிகிட்டு இருப்பார். நதியா அழுதுகிட்டே, அதை காட்டிக்காம, எதிர்ப் பாட்டு பாடுவாங்க. மோகனின் அலம்பலை அப்படியே பாடும் விதத்தில் கொண்டு வந்திருப்பார் எஸ்.பி.பி. நதியாவின் சோகம் கலந்த பாடலை அழகாக பாடி இருப்பாங்க (அலம்பல் இல்லாம) சித்ரா. ரெண்டு தலை சிறந்த பாடகர்களை ரசிக்க இந்த பாடல் போதும். ட்ரம்ஸ்லயே போகும் பாடல், முதல் சரணம் முடிந்தவுடன் 'நான் அறிவேன் இளம் பூங்குயிலே' என்று சித்ரா பாடும் போது சட்டென்று தபேலாவுக்கு தாவி, பின் எஸ்.பி.பி 'நீ வா வெளியே இளம் பூங்குயிலே' என்று தொடரும் போது ஜிவ்வென்று ட்ரம்ஸ்க்கு தாவுவது கலக்கலாக இருக்கும். இப்படி ரசிக்க நிறைய இருக்கு இந்த பாடலில். இதோ உங்களுக்காக.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/VaaVeliye.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போ நாலாவதா ஒரு பாடல். 'காதல் பரிசு' 'விக்ரம்' 'காக்கி சட்டை' போன்ற கமல் படங்களுக்கு ராஜாவின் இசை ரொம்பவே விஷேசமா இருக்கும். ராஜா-கமல்-எஸ்.பி.பி-ஜானகி என்று சும்மா பட்டையை கிளப்பிய காம்பினேஷன் இந்த படப் பாடல்கள். இதில் 'காதல் பரிசு'ல இருந்து 'ஏய்! உன்னை தானே'. டக்குன்னு உடனே ஒன்று சொல்லணும்னா, ஆண் குரல் இரண்டுக்கும் எஸ்.பி.பியே பாடி இருப்பார். மனுசன் என்ன வேணும்னாலும் பண்ணுவார். யப்பா! கமலுக்கு குரலும் பாலு தான். எதிர் ஆட்டம் போடும் சைனா (மாதிரி) காரனுக்கும் பாலு தான். சைனா காரனுக்ககு கொஞ்சம் தொண்டை கட்டின மாதிரி பாடுவார். சைடுல ராதா ஒரு கும்பலோடு அந்த சைனா காரனை கலாஞ்சிக்கிட்டு இருப்பாங்க. அந்த கால டிஸ்கோ பாட்டு. இங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/YaeUnnai.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இறுதியாக, சூப்பர் ஸ்டார்ல தொடங்கி சூப்பர்லயே முடிக்கிறேன். இந்த பாடலை நல்ல ஸ்பீக்கர்ல/ஹெட் போன்ல கேட்டீங்கன்னா அதோட அருமை தெரியுங்க. ராஜாவோட டாப் டென் (100 அல்ல :-)ல இந்த பாடல் கண்டிப்பா இருக்கணும். இநத ராஜாவை அடிக்கடி பார்க்க முடியாதது என் துரதிஷ்டமே. சும்மா ஒரு வில்லன் கிட்ட 'என்னம்மா! கண்ணு! சௌக்யமா' என்று ஹீரோ பாடுற மாதிரி ஒரு சாதாரண பாடல் தாங்க. ஆனா இந்த பாடலுக்கு இபபடி ஒரு இசை வடிவம் கொடுக்க முடியும் என்ற ராஜாவின் பரிணாமம் என்னை வியக்க வைத்த ஒன்று. இன்னைக்கு புது பாட்டு எல்லாம் பீட் பீட் என்று Woofer-அ அலற வைக்க புர் புர்னு ஒரு பேஸ் கிட்டரும், Synth ட்ரம்ஸுமா ஆகி போயிட்டு. ஆனா இந்த பாடலை கேட்டா எவ்வளவு ரிச்சா இருக்கு. சொல்ல வார்த்தைகள் வரலைங்க. பாட்ட கேளுங்க. ஐயோ! முக்கியமான ஒன்ன விட்டுட்டேனே! எஸ்.பி.பி-க்கு இணையாக சூப்பரா பாடி இருப்பார் மலேசியா வாசுதேவன். அவரோட பாடல்களில் சொல்லிக்கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று. சூப்பர் ஸ்டாரும், சத்யராஜும் இந்த பாடலில் ரொம்பவே நல்லா பண்ணி இருப்பாங்க. சரி! பாட்ட கேளுங்க.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Ennamma.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே இன்றைய பாடலை தினமும் கேட்க மறந்துடாதீங்க. மீண்டும் அடுத்த வாரம் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம் &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;சிவா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114342631093855287?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/blog-post_26.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>38</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114308529255646411</guid><pubDate>Thu, 23 Mar 2006 03:30:00 +0000</pubDate><atom:updated>2006-03-26T10:25:57.546-08:00</atom:updated><title>இன்றைய பாடல் (சின்ன அறிவிப்பு)</title><description>நண்பர்களே! வாரம் ஒரு பதிவு என்று சொல்லிவிட்டேன். ஏண்டா சொன்னோம்னு இருக்கு. பாட்டு போடாம தூக்கம் வரமாட்டேங்குது :-) . இருந்தாலும் தினமும் பதிவு போட நேரம் கிடைப்பதில்லை. சரி! என்ன பண்ணலாம்னு யோசித்ததில் ஒரு ஐடியா வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஒரு பாடல் போடலாம். வெறும் பாடல் மட்டுமே. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து கேளுங்கள். நேரம் இருந்தால், அந்த பாடலை பற்றி ஏதாவது கேட்க/சொல்ல நினைத்தால் சொல்லலாம். எப்படி?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://geethamsangeetham.blogspot.com/" target="_blank"&gt;&lt;strong&gt;இங்கே &lt;/strong&gt;&lt;/a&gt;க்ளிக் செய்யுங்கள். இப்போ எனது ப்ளாக் வரும் (தனி பதிவு லிங்க் அல்ல).என்னுடைய ப்ளாக்கில் (மேலே வலது பக்கம்) எனது புகைப்படத்துக்கு கீழே &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Links&lt;/span&gt;&lt;/strong&gt; என்று தெரிகிறதா. அதில் &lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;'இன்றைய பாடல்'&lt;/strong&gt;&lt;/span&gt; -க்கு கீழே ஒரு பாடல் தெரியும் (ரியல் ப்ளேயர்). அதில் தினமும் ஒரு பாடல் கேட்கலாம். உங்கள் கணிணியில் ரியல் ப்ளேயர் இருக்குதான்னு பாத்துக்கோங்க். தினமும் புடிசச பாட்டு ஒன்றை கொடுக்கிறேன். கேட்டு மகிழுங்கள். பாடல் எதுவாகவும் இருக்கலாம். படம் பெயர், பாடல், பாடியவர் எதுவும் கொடுக்கப் போவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டு விட்டு அன்றைய பாடல் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லணும் என்றால் 'இன்றைய பாடல்' தொடுப்பிற்கு கீழே '&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இன்றைய பாடல் - உங்கள் கருத்து இங்கே'&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற தொடுப்பை க்ளிக் செய்து பின்னோட்டம் இடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் இருக்கும் போது வாங்க. பாட்ட கேளுங்க. வழக்கம் போல திங்கள் கிழமை ஒரு பதிவோடு கண்டிப்பாக வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யோசனையை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்க. இன்றைய பாடல் கேட்டீங்களா..கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;சிவா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114308529255646411?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/blog-post_22.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114282567621505384</guid><pubDate>Mon, 20 Mar 2006 03:24:00 +0000</pubDate><atom:updated>2006-05-31T13:48:50.780-07:00</atom:updated><title>அழகாக சிரித்தது அந்த நிலவு (ஜெயசந்திரன்)</title><description>ஒரு வாரத்திற்கு அப்புறம் மீண்டும் இந்த வார பதிவில் சந்திக்கிறோம். நான் தமிழ்மணத்தில் கவனித்துப் பார்த்ததில் ஒரு பாடகருக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. என்னைய மாதிரி, சுந்தர் மாதிரி, நிலா மாதிரி எஸ்.பி.பி என்று சொல்லாம 'என்னவே பாட்டு கேக்குறீர்! ஜெயசந்திரன் பாட்டு கேட்டுப் பாரும்வே. அது பாட்டு. நீரும் பாட்டு போடறீறே' அப்படின்னு அடிக்கடி நம்ம ராகவன் என்னை வம்புக்கு இழுக்கிறார். இவர் கூட ராமசந்திரன் உஷா, மரவண்டு கணேஷ் என்று ஜெயசந்திரன் அணிக்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. சரி! இவங்களையும் புடிச்சி கீதம்ல போடணும்னா அவங்க புடிச்ச பாட்டு போடணும்ல. அதுக்குத் தான் இந்த பதிவு. ஜெயசந்திரன் சிறப்புப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒங்க ராஜா (ஹி! ஹி!) வந்தப்புறம் தான் ஜெயசந்திரனுக்கு அவ்வளவா பாட்டு இல்லை. அவரு கொடுத்த (ஒரு 70 பாட்டு இருக்கும்) அத்தனையும் முத்துக்கள். ஆனா ராஜா வருவதற்கு முன்னாடி வரைக்கும் ஜெயசந்திரன் நெறைய பாடி இருக்கிறார்" - இப்படி நம்ம ராகவன் என்னிய வம்புக்கு இழுக்கிறார். அந்த சண்டைய நாங்க தனி மடலில் வச்சிக்கிட்டோம். இங்கே கீதத்தில் குடுமி புடி சண்டை எல்லாம் வேணாங்க :-). எப்படியோ அவரே ராஜா இசையில் ஜெயசந்திரன் பாடிய பாடல்கள் அனைத்தும் முத்துக்கள் என்று சொல்லிட்டார். அந்த முத்துக்களில் சில முத்துக்கள் இந்த பதிவில் கேட்கலாம். தேர்வு பண்ணி போடலாம்னா அத்தனையும் போடணும் போல. அது வேலைக்கு ஆகாதுன்னு, எனக்கு டக்குன்னு தோன்றிய ஒரு 5 பாடல்களை இந்த பதிவில் கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயசந்திரனை பற்றி சொல்லனும்னா, ஒரே நேர் கோட்டில் பாடும் (அங்கன இங்கன ஏத்தம் எறக்கம் இல்லாம) சில பாடகர்களில் ஒருவர். அதனால் இவர் பாடல் பொதுவாக மெலோடி பாடல்களாக இருக்கும். அதனால் மெலோடி பிரியர்களுக்கு ஜெயசந்திரன் பாடல்கள் அனைத்தும் சர்க்கரைப் பொங்கல் தான். இப்போ பாடலுக்கு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஜிவ்வுன்னு ஒரு பாட்டு. இளையராஜா இசையில் 'டிசம்பர் பூக்கள்' படத்தில் இருந்து 'அழகாக சிரித்தது அந்த நிலவு'. ஜெயசந்திரன் பாடல்களில் இதை கொஞ்சம் வேகமான பாடல் என்று சொல்லலாம். ஜானகியின் கொஞ்சல்ஸ் அருமை. நல்ல ஒரு ட்ரம்ஸ்-ல் போகும் பாடல். இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Alagaaga.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா ஜெயசந்திரனை நிறைய விஜயகாந்த் படங்களுக்கு தான் பயன் படுத்தி இருக்கிறார். வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோவில் கிழக்காலே,என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் இன்னும் சில. அந்த காலகட்ட நடிகர்களில் ஜெயசந்திரன் குரல் நன்றாக ஒத்துப்போன ஒரு நடிகர் விஜயகாந்த் தான். இந்த பாடல் எனக்கு ரொம்ப நாளா புடிக்காத பட்டியலில் இருந்து வந்தது. காரணம், இந்த பாடல் வெளிவந்து பட்டைய கெளப்பிக்கிட்டு இருந்த காலத்தில் நான் ரொம்ப சின்னப் பையன். இவ்வளவு உருக்கமா பாடினா அப்போ புடிக்குமா. அப்படியே கெடப்புல போட்டுட்டேன். கல்லூரி சேர்ந்தபின்பு தான் மறுபடி கேட்டுப் பார்த்தேன். அன்னைக்கு கேட்ட மாதிரியே இன்னிக்கும் அதே மாதிரி மெய் மறந்து கேட்டுக்கிட்டு இருக்கிறேன். 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் இருந்து 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி'. ஐயோ..என்னா பாட்டுங்க இது. 'நீரு நெலம் நாலு பக்கம் நான் திரும்பி பார்த்தாலும்' அப்படிங்கிற ரெண்டாவது சரணம் என்னோட Favorite. இப்போ பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Kathirunthu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த பாடலை பார்க்கும் போது எனக்கு ஒன்று மட்டும் தான் தோன்றும். எப்படி பாண்டியராஜனுக்கு ஜெயசந்திரனை தேர்வு செய்தார்கள். அதுவும் இப்படி ஒரு பாடல் பாண்டியராஜனுக்கு எப்படி. ஹாஹாஹா. நான் சொல்ற பாட்டு இது தாங்க. 'உள்ளம் கவர்ந்த கள்வன்' படத்தில் இருந்து 'எம் மனச பறி கொடுத்து, உம் மனசில் எடம் புடிச்சேன்'. பாண்டியராஜன்-ரேகா நடிப்பில் வெளி வந்த படம். பாணடியராஜனின் வழக்கமான காமெடி இல்லாமல் ரொம்ப சீரியஸ்-ஆன ஒரு காதல் படம் இது. நான் சின்ன புள்ளையில தியேட்டர்ல போய் பார்த்து முழிச்சிக்கிட்டு இருந்த ஒரு படம் :-). ஜெயசந்திரனுக்கு அல்வா மாதிரி ஒரு பாடல் இது. கேட்டுப் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EnManasaiParigodutha.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெயில்ல எல்லோரும் போயிருப்பீங்க. அந்த தடக் தடக் சத்தமும், அந்த விசில் சந்தமும் ஒரு அழகான மெட்டு கொடுக்கும். விசில்னா அந்த பழைய கரி எஞ்சின் தாங்க நச்சின்னு இருக்கும். இப்படி ஒரு மெட்டு எடுத்துக்கொடுக்கும் போது, அந்த சத்தத்தை வைத்து ராஜா ஒரு முழுப்பாடலை அழகாக கொடுத்திருப்பார். அது 'பாட்டுக்கு நான் அடிமை' படத்தில் இருந்து மனோ பாடிய 'தாலாட்டு கேட்காத' (ஏற்கனவே பதிவில் போட்டாச்சு). இந்த பாடலின் பல்லவியும் அது போல தான். 'முதல் இரவு' படத்தில் இருந்து 'மஞ்சள் நிலாவுக்கு இன்று' பாடல். நம்மை அறியாமல் முனுமுனுக்க வைக்கும் பாடல் இது. ஜோடி குரல் சுசிலா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/ManjalNilavukku.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக மறுபடியும் விஜயகாந்த் படத்தில் இருந்து தான். விஜயகாந்த் படங்களில் இந்த படத்திற்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு. வெறும் பாட்டுக்காவும், சண்டைக்காகவும் பட்டித்தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய ஒரு படம். நல்ல பாடலும், சண்டையும் இருந்தா தெளிவான ஒரு திரைக்கதையால் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கலாம் என்று சொல்லிச் சென்ற படம்.(அப்போல்லாம் ஊருல 'சண்டை காட்சிகள் நிறைந்த' அப்படின்னு தான் போடுவாங்க. லே! 6 சண்டை இருக்குல என்று தான் படத்துக்கு மதிப்பெண் போடுவோம். சண்டையே இல்லாத படத்துக்கு தெரியாம போய் சிண்டை புடிச்சிக்கிட்டு ஒக்காந்துட்டு எவனாவது 'நல்ல கதை' அப்படின்னு சொன்னான் என்றால் நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு வருவோம். அது ஒரு காலம்). இதில் 'பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே' பாடலை தான் இங்கே கொடுக்கிறேன். நம்ம கேப்டன் ஆர்மோனிய பொட்டில கைய வச்சி, மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு உருக்கமா சங்கீத ஞானத்தோட பாடுற மாதிரி பாடி கிச்சி கிச்சி மூட்டினாலும், நான் படத்திலும் ரொம்பவே ரசிக்கும் ஒரு பாடல். சேர்ந்து பாடுவது ஜானகி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/PoovaEduthu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114282567621505384?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/blog-post_19.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>28</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114230597457215575</guid><pubDate>Tue, 14 Mar 2006 02:45:00 +0000</pubDate><atom:updated>2006-05-03T23:59:59.560-07:00</atom:updated><title>இளையராஜா - எஸ்.பி.பி</title><description>இதுல என்ன விசேஷம் இருக்கு. இளையராஜா இசையில எஸ்.பி.பி பாடுவது வழக்கம் தானே என்று கேக்கறீங்களா. இது ராஜாவும் பாலுவும் சேர்ந்து பாடிய பாடல்களை பற்றிய பதிவு. நம்ம சினிமாவுல இரு பெண்குரல் பாடல்கள் நிறைய இருக்கிறது. கதாநாயகியுடன் தோழியும் சேர்ந்து பாடுவது போல நிறைய பாடல் இருக்கிறது. ஆனால் இரு ஆண்குரல் பாடல்கள் கொஞ்சம் கம்மி தான். காரணம் இரு கதாநாயகர்கள் படங்கள் குறைவு. அதிலும் ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா பெரும்பாலும் எழுச்சி பாடல்களாக, போட்டி பாடல்களாக தான் இருக்கும் (என்னம்மா கண்ணு, ஏ ராஜா ஒன்றானோம் இன்று).&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாவும் பாலுவும் சேர்ந்து மிஞ்சி போனால் ஒரு ஐந்து பாடல் பாடி இருப்பார்கள். அதில் சிலவற்றை (அஞ்சில என்ன சிலது என்றீங்களா :-) இந்த பதிவுல பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். இந்த படத்தை பற்றி ஏற்கனவே நிறைய சொல்லி விட்டேன். 'ஒரு படப் பாடல்' என்று இந்த படத்தில் உள்ள மொத்தமாக எல்லா பாடலையும் போட ஆசை தான். எஸ்.பி.பி கதாநாயகனாக நடித்த 'பாட்டுப் பாடவா' வில் இருந்து 'வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்'. B.R.விஜயலட்சுமியின் இயக்கத்தில் வந்த படம் என்று நினைக்கிறேன். இவர் ஒரு பெண் கேமிரா(உ)மேன். அப்புறம் இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோயின் லாவண்யாவை எஸ்.பி.பியும் ரகுமானும் நினைத்துப் பாடுவதாக வரும் பாடல். ஒரு சரணம் இளையராஜா. இரண்டாவது சரணம் எஸ்.பி.பி. இசையை பொருத்தவரை ரொம்ப கலவையான ஒரு பாடல். மொத்த பாடலும் தபேலாவில் சென்றாலும், அங்கங்கே வித்தியாசமாக போகும் ('பூம்பாவையின் சேவைகள்' தொடங்கும் போதில் இருந்து). கலக்க பாடல்..உங்களுக்காக இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/VazhividuVazhividu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இரண்டாவது. இந்த படத்தில் முத்துப்போல இரண்டு எஸ்.பி.பி பாடல் இருந்ததால், இந்த பாடல் அவ்வளவாக ஹிட் ஆகவில்லை. 'புது புது அர்த்தங்கள்' படத்தில் இருந்து 'எடுத்து நான் விடவா என் பாட்டை'. ஒருவகையில் ஜனகராஜ் ரொம்ப கொடுத்து வச்ச நடிகர். ராஜா அழகாக ஜனகராஜ் மாதிரி பாடக் கூடியவர். ஜனகராஜுக்கு ராஜாவின் குரலில் நிறைய பாடல்கள் இருக்கிறது. அதில் இந்த பாடல் ரொம்பவே ரசிக்கும் படி இருக்கும். காரணம், இதில் ஜனகராஜ் திக்குவாய் காரராக நடித்திருப்பார். எனவே பாடலிலும் நிறைய இடத்தில் இவர் திக்குவதும், எஸ்.பி.பி (ரகுமான்) 'வரலன்னா வுட்டுட்டு' அப்படின்னு கலாய்ப்பார். பாடல் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EduthuNaan.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இறுதியாக, நிறைய பேர் கேட்டிருக்காத ஒரு அரிய அருமையான பாடல். 'உடன் பிறப்பு' படத்தில் இருந்து 'சோழர்குழ குந்தவை போல்'. சத்தியராஜ்-ரகுமான் நடித்த படம். இப்படி ஒரு சத்தியராஜ் படத்துக்கு இப்படி ஒரு பாடலா?. அதுவும் சத்தியராஜும் ரகுமானும் வேட்டிய காட்டிக்கிட்டு ரொம்ப இலக்கியத்தனாமா பாடிக்கிட்டு இருப்பாங்க. ஏனோ படத்திலும் ஒட்டவில்லை..பாடலும் காணாமல் போய் விட்டது. இரண்டு உயிர் நண்பர்கள். உனக்கு நான் இப்படி பெண் பார்க்கிறேன் என்று சொல்ல, அவர் பதிலுக்கு உனக்கு நான் இப்படி பெண் பார்க்கிறேன் என்று சொல்ல, ரொம்ப கவித்துவமான பாடல். பாடலின் வரிகளையும், ராஜாவும் பாலாவும் பாடும் விதத்தையும் கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். இது என்னோட விருப்பப் பாடல். கேட்டுப்பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Solarkuzha.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த மூன்று பாடல்களிலும் ரகுமான் இருக்கிறார். கடைசில ரகுமான் படப்பாடல்கள் மாதிரி ஆகி போச்சி :-).&lt;br /&gt;&lt;br /&gt;இனி இரண்டு நேயர் விருப்பங்களை பார்க்கலாம். (தனி பதிவாக போடுவதை விட, இப்படி எல்லா பதிவிலும் சேர்த்து போடலாம் என்று நினைத்திருக்கிறேன். எல்லா பதிவிலும் நேயர் விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டது போல இருக்கும் அல்லவா).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உஷா அக்கா விரும்பி கேட்ட 'போட்டேனே பூவிலங்கு'. 'பூவிலங்கு' படத்தில் இருந்து. முரளியின் ஆரம்ப கால படங்களில் ராஜாவின் இசை அபாரமாக இருக்கும். அதில் ராஜா பாடினா சூப்பர் ஹிட் என்று ஒரு சென்டிமென்டும் உண்டு. இந்த பாடல் ஜானகி பாடியது. இது எல்லா பெண்களுக்கும் (எங்க வீட்டுலயும :-) செண்டிமெண்டாக புடிக்குது. அது ஏன் என்று உஷா அக்கா சொல்வாங்க என்று நினைக்கிறேன். என் மனைவியின் பேவரைட் பாடலும் கூட. இங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/poddenePoovilangu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அப்புறம் பரணி விரும்பி கேட்ட பாடல் ஒன்றையும் பார்க்கலாம். 'மீரா' படத்தில் இருந்து 'ஓ! பட்டர்ஃப்ளை'. ராஜா ஏன் இப்படி இப்போது கொடுப்பதில்லை என்று கேட்க வைக்கும் ஒரு கிளாசிகல் பாடல். விக்ரமோட முதல் படம் இதுவா. சரியா தெரியலை. ரொம்ப எதிர்ப்பார்ப்போட வந்து ஊத்தும் படங்களில் இதுவும் ஒன்று. மற்றபடி பாடல்கள் கலக்கலோ கலக்கல். 'புது ரோட்டுல தான்' யேசுதாஸ் மெலோடியும், 'லவ்வுன்னா லவ்வு..மண்ணெண்ண ஸ்டவ்வு' என்ற தத்துவபாடலும் இதில் தான். பாடல் இங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/OhButterfly.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( நண்பர்களே! வேலை கொஞ்சம் அதிகமாகி விட்டதால் இனி வாரம் ஒரு பதிவாக போடலாம் என்று இருக்கிறேன். வாரம் திங்கள் கிழமை தோறும் ஒரு பதிவாக கொடுக்கிறேன். உங்களுக்கும் தினமும் வந்து பார்க்க வேண்டியதில்லை அல்லவா - அன்புடன் 'சிவா')&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114230597457215575?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/blog-post_114230597457215575.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114205045790193985</guid><pubDate>Sat, 11 Mar 2006 04:08:00 +0000</pubDate><atom:updated>2006-04-20T03:09:43.690-07:00</atom:updated><title>சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே</title><description>சின்னதா ஒரு பதிவு. ராஜாவின் தபேலாக்கள் பொதுவாக மென்மையான மெலோடிகளையே கொடுத்திருக்கிறது. தாளம் போட வைக்கும் தபேலாக்கள் சிலதே. அதில் எனக்கு பிடித்த ஒரு பாடல். 'காவல் கீதம்' படத்தில் இருந்து 'சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே'. கிட்டத்தட்ட இதுவும் 'கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச' பாடலும் ஒரே மாதிரி தான் (ஒரே ராகமா?). தபேலாவும் மிருதங்கமும் கலந்த ஒரு எளிமையான ஒரு தாள மெட்டு. மயக்கும் எஸ்.பி.பி-ஜானகி குரல். பாடலை கேட்டுக்கிட்டு இருங்க, நேயர் விருப்பத்தில் சந்திப்போம்&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/sokkanukkuvaachcha.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114205045790193985?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/blog-post_10.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114181784817743708</guid><pubDate>Wed, 08 Mar 2006 11:37:00 +0000</pubDate><atom:updated>2006-05-06T04:21:34.776-07:00</atom:updated><title>நினைக்க தெரிந்த மனமே (யேசுதாஸ் - 2)</title><description>'நினைக்க தெரிந்த மனமே'. மோகன்-ரூபிணி நடிப்பில் வெளிவந்த படம். மோகன் படங்களுக்கு தன் வழக்கமான வகையறாக்களை தவிர்த்து, இந்த படத்தில் ராஜா ரொம்ப வித்தியாசமான இசையை கொடுத்திருப்பார். நிறைய பேருக்கு இது மோகன் பாட்டு என்றால் நம்ப முடியாது. அதனால் தானோ என்னவோ, படமும் சரியாக ஓடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலாக ஒரு மோகன் படத்துக்கு முழுவதும் யேசுதாஸை பயன்படுத்திய படம் என்று நினைக்கிறேன். மொத்தம் 5 பாடல்களில் 4 யேசுதாஸ். ஒன்று சித்ராவின் தனி பாடல். எஸ்.பி.பி குரலிலேயே மோகன் பாடலை கேட்டுவிட்டு, யேசுதாஸ் குரல் மோகனுக்கு (எஸ்.என்.சுரேந்தருக்கு :-)). இரவல் குரல் தானே). அவ்வளவாக ஒட்ட வில்லை என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி பாடல்கள் என்று பார்த்தால், ராஜா வழக்கத்துக்கும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருப்பார். அத்தனை பாடலையும் ஒரு மெல்லிய ட்ரம்ஸ் இசையில் ஓட விட்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரண்டு பாடல்களை பார்க்கலாம். முதலில் 'கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்'. யேசுதாஸின் குரலில். இந்த பாடல் நம்ம &lt;a href="http://blog.baranee.net/" target="_blank"&gt;பரணீ&lt;/a&gt;, சென்ற நேயர்விருப்பத்தில் தன் விருப்பமாக கேட்டிருந்தார். அவர் விருப்பமாகவும் இந்த பாடலை போடுகிறேன். இந்த பட பாடல்களுக்கு கவிஞர் யாரென்று தெரியவில்லை (இசை அமைப்பாளர், பாடகர் பெயர் போடும் 'Oriental Records', ஏனோ கவிஞர் பெயரை விட்டு விடுகிறார்கள்). தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எல்லா பாடல்களிலுமே பாடல் வரிகள் அழகா இருக்கும். ரொம்பவே ஒரு மென்மையான பாடல். யேசுதாஸின் குரலின் இன்னும் கொஞ்சம் பாடல் வழுக்கி ஓடுவது உண்மை.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Kannukkum.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இரண்டாவது. 'எங்கெங்கு நீ சென்ற போதும்'. தொடக்க கிடார் (prelude) ரொம்ப அழகு. சித்ராவின் குரலிலும் யேசுதாஸின் குரலிலும் தான் என்ன குழைவு. First interlude-ல் ட்ரம்ஸ் ரொம்பவே கலக்கலாக இருக்க்ம். சட்டென்று சரணத்தில் கஜல் டைப் தபேலா இசைக்கு பாடல் தாவுவதும், அப்புறம் பல்லவில் பேஸ் ட்ரம்ஸ் மாதிரி ஒரு இசைக்கு தாவுவதும் ரொம்பவே அழகு. கேட்டுப்பாருங்களேன்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Engengu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114181784817743708?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/2_08.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>15</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114161418754131476</guid><pubDate>Mon, 06 Mar 2006 02:55:00 +0000</pubDate><atom:updated>2006-05-07T19:52:38.613-07:00</atom:updated><title>உமா ரமணன்</title><description>சில பேரை நமக்கு ஏன் புடிக்குது? எதுக்கு புடிக்குது என்றேல்லாம் சொல்ல முடியாது. ஆனால் எல்லோரையும் விட அவரை ரொம்ப புடிக்கும். அப்படி எனக்கு புடித்த பாடகி என்று யாராவது கேட்டால் உமா ரமணன் என்று சொல்வேன். ஏன் புடிக்கும்?. தெரியாது. ஏன். அதை விட ஜானகி, சித்ரா எல்லாம் திறமையான பாடகிகள். அப்படி இருக்க உமா ரமணன் புடிக்க காரணம். தெரியாது?. ஏனோ புடிச்சி போச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் என் அண்ணன் டெல்லியில் இருக்கும் போது ஒரே ஹிந்தி கேசட்டா கொண்டு வருவான். சுத்தமா புரியலைன்னாலும், கேட்பதுண்டு. அப்படி கேட்டு கேட்டு Alka Yagnik-ம் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சு. ரெண்டு மூனு வருசமா Alka Yagnik பாட்டு எங்க கெடைச்சாலும் தேடி கேட்பேன். அப்புறம் அப்படியே விட்டாச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் நம் மனசுக்கு புடிக்க ஒருவர் No.1 இடத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை. அப்படி எனக்கு புடிச்ச உமா ரமணன் பாடல்கள் சில இந்த பதிவில். &lt;br /&gt;&lt;br /&gt;உமா ரமணன் என்றவுடன் 'பூங்கதவே' பாடல் எல்லாருக்குமே நினைவுக்கு வரும். ஒரு காவிய பாடல் இது. ராஜாவின் இசை ராஜாங்கம். அந்த prelude..அப்பப்பா..அப்புறம் தீபன் மற்றும் உமாவின் தெளிந்த நீரோடை போல குரல். சரணத்தில் ஒருவர் பாட, மாற்றவர் 'ம்ம்ம்ம்' என்று பாடிக்கொண்டே வருவது ரொம்பவே அழகாக இருக்கும். பாடல் இங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/poongathave.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இரண்டாவது பாடல். சேர்ந்து பாடுவது உன்னி மேனன். 'ஒரு கைதியின் டைரி'யில் இருந்து 'பொன்மானே..கோபம் ஏனோ'. அலுக்காத ஒரு பாடல். பாடலின் முடிவில் (பல்லவி) யேசுதாஸின் குரலுக்கு ('பொன்மானே' என்று ஆரம்பிக்கும் போது) ஒரு சிணுங்கல் குரல் கொடுப்பார். சூப்பரா இருக்கும். இப்போ பாட்டு.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/ponmaane.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இறுதியாக, 80S-ல இருந்து அப்படியே 90S-க்கு வறேன். கிட்டத்தட்ட 'மாசிமாசம்' (தர்மதுரை) பாடல் போல ஒரு பாடல். 'எங்க தம்பி' படத்தில் இருந்து அருண்மொழியோட கலக்கல் குரலோடு 'இது மானோடு மயிலாடும் காடு'. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/IthuMaanodu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா எனக்கு ரொம்ப புடிச்ச உமா பாடல் ஒன்று. மலேசியா வாசுதேவனுடன் செம ஸ்பீடா ஒரு பாட்டு. 'மல்லு வேட்டி மைனர்' படத்தில் இருந்து 'ஒன்ன பார்த்த நேரத்துல ஒலகம் மறந்து போனதடி'..ஐயோ..பாட்டு என்ன ஒரு ஓட்டம்..உமா இரண்டாவது சரணத்தில் 'நீராடும் நேரம் பார்த்து' அப்படின்னு தொடங்கும் போது சும்மா ஜிவ்வுன்னு போகும் பாட்டு.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/UnnaiPaartha.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனந்த ராகம்' 'செவ்வந்தி பூக்களில்' 'நில் நில் நில்' 'பூபாளம் இசைக்கும்' என்று இன்னும் நிறைய பாடல்களை சொல்லலாம். மெதுவா இந்த பாடல்களை போடுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114161418754131476?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/blog-post_05.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>42</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114138422082489239</guid><pubDate>Fri, 03 Mar 2006 11:10:00 +0000</pubDate><atom:updated>2006-03-04T06:33:42.326-08:00</atom:updated><title>நச்சுன்னு நாலு பாட்டு</title><description>ஆமாங்க. நச்சுன்னு நாலு பாட்டு கேக்கலாம். வழ வழன்னு நான் எதுவும் சொல்ல போறதுல்ல (அப்பாடான்னு நீங்க சொல்றது கேக்குது :-). நேரே பாட்டு தான். என்ன பாட்டுன்னு கூட சொல்ல போறதில்லை (சும்மா..கேக்கும் போது உங்களுக்கு ஒரு surprise-ஆ இருக்கட்டுமேன்னு தான்). &lt;br /&gt;&lt;br /&gt;பாட்ட கேட்டுட்டு உங்களுக்கு என்ன தோணுதோ அதை பின்னூட்டத்துல எழுதுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு ஒன்னு. இது மோகன் பாட்டு...என்னவா இருக்கும்..கேட்டுப்பாருங்க.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Paadavanthathor.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ரெண்டாவது பாட்டு. இந்த பாட்ட கேட்டா கிராமத்து நெனைவெல்லாம் வருதுங்க :-) ..ராமராஜன் பாட்டு...நீங்க நெனைச்சப்பாட்டு தானா..கேட்டுப்பாருங்க..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Vaasalile.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நச்சுன்னு நாலுன்னா..அதுல தலைவர் பாட்டு இல்லாமலா...இதோ..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/AaththaadiPaavaada.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஏம்பா தம்பி..பொண்ணு மட்டும் பாடுற மாதிரி தனிப்பாட்டு ஒன்னு போடுன்னு நம்ம ப்ளாக் ஆக்காவெல்லாம் கேக்குறது தெரியுது...சித்ரா பாட்டு போடுறேங்க..உங்களுக்கு புடிக்கும் கண்டிப்பா :-).&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Devaninkoil.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114138422082489239?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/blog-post_03.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114121243039242773</guid><pubDate>Wed, 01 Mar 2006 11:27:00 +0000</pubDate><atom:updated>2006-03-03T14:23:37.626-08:00</atom:updated><title>உன் எண்ணம் எங்கே எங்கே</title><description>'தம்பி பொண்டாட்டி' . இப்படி ஒரு படம் 1992-ல வந்தது. ரகுமான், ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்கள். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்க்க காத்துக்கிடந்த காலத்தில் நான் ரொம்ப ரசித்த பாடல் இது. ரொம்ப நாளா இந்த பாடலை போடலாம்னா, நிறைய பேருக்கு தெரியாத, அவ்வளவாக ஹிட் ஆகாத பாட்டு. அதான் அப்படியே கிடப்பில் போட்டுட்டேன். சரி இன்னைக்கு ரிலீஸ் பண்ணுறேன். அருமையான, சொல்லப்போனால் சூப்பரான பாடல். எனக்கு ராஜாவின் இந்த பாடலும், காதல் ஓவியம் பாடலும் ஒன்றே. இரண்டையும் ஒரே ரசனையுடன் ரசிப்பேன். என்னைப் பொருத்த வரையில் ராஜா இந்த மாதிரி பாடல்களில் காட்டியிருக்கும் திறமை அதிகம். அதை ரசிக்க எனக்கு ஒரு ரசனையை கொடுத்த கடவுளுக்கு நன்றி. ஏனோ வெறும் காதல் ஓவியம், இதயக் கோவில், உதய கீதம் என்று ராஜா பாடல்களை ஒரு 50 படங்களுக்குள் அடக்கிக்கொண்டது வெகுஜனம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் 'உன் எண்ணம் எங்கே எங்கே'. சுனந்தா பாடியது. படத்தில் ரம்யா கிருஷ்ணன் மாடலிங் செய்ய இந்த பாடல் ஒலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எனக்கு பிடித்தது தபேலாவையும் ட்ரம்ஸையும் கலந்து ராஜா அமைத்திருக்கும் பீட்(Beat). என் மனதை அப்படியே அள்ளிக்கொண்டு போகும். அப்புறம் மொத்த பாடலே ஒரு அருமையான இசை கலவை (Fusion). சீரான மெட்டில் பாடல் ஓடிக்கொண்டிருக்க, வயலின், வீணை, புல்லாங்குழல் என்று கலந்து ஓடும் பாடல் முழுக்க. ( Listen all ludes). மூன்றாவதா, சுனந்தாவின் (Sunantha) குரல். ரொம்ப சில பாடல்களே பாடினாலும், அத்தனையும் ராஜாவின் இசையில் ரொம்ப நல்லா இருக்கும். அதிலும் இந்த பாடல் ரொம்பவே அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;முதலிலேயே சொல்லிட்டேன். இந்த பாடலுக்கு இவ்வளவு பில்ட்-அப் பா என்று சொல்லாதீங்க. இது என் ரசனை அவ்வளவே :-)). (எப்பவாவது என்னுடைய விருப்பமும் போடலாம்லா :-)).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://media.putfile.com/UnEnnamEngeEnge" target="_blank"&gt;பாடலுக்கு இங்கே. &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114121243039242773?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/03/blog-post.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114095447340473376</guid><pubDate>Sun, 26 Feb 2006 11:18:00 +0000</pubDate><atom:updated>2006-09-02T11:29:15.223-07:00</atom:updated><title>நேயர் விருப்பம் - 5</title><description>நேயர் விருப்பம் போட்டு கிட்டத்தட்ட 2 மாதம் ஆகி போச்சு. இன்று சில அருமையான பாடல்களை நேயர் விருப்பத்தில் கேட்கலாம். எல்லாமே ராஜா பாட்டுத்தான் (வேற பாட்டு தான் நம்ம கிட்ட கெடையாதுல்லா).&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உஷா அக்கா ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்த பாடலை கேட்டிருந்தார்கள். 'நான் உந்தன் தாயாக வேண்டும்' ஜானகியின் குரலில் 'உல்லாச பறவைகள்' படத்தில் இருந்து. ஜானகியின் குரல், பாடும் விதம் இந்த பாடலில் ரொம்ப அருமை. உல்லாச பறவைகளில் மற்ற பாடல்கள் அளவுக்கு பாடல் ஏனோ பிரபலமாகவில்லை என்று நினைக்கிறேன். பாடலை பற்றி உஷா அக்கா நிறைய சொல்வார்கள் :-)&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/NaanUnthan.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கீதா எங்கே இருந்து தான் பாட்ட புடிப்பாங்கன்னு தெரியலை. முன்பு 'அம்மா' என்று ஒரு படம் சொன்னாங்க..இப்போ 'சிவப்பு மல்லி' என்று ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலை கேட்டிருக்காங்க. நீங்க சொல்லி தான் இப்படி படமெல்லாம் நான் கேள்வி படறேன். எங்கே இருந்து புடிக்கிறீங்க. நான் உங்க ஆளவுக்கு பாட்டு கேட்டதில்லை கீதா :-). 'ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்..தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்' ரொம்ப நல்லா கேட்ட பாட்டு. ஆனால் என்னிடம் இல்லையே கீதா :-(.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் நீங்க ரொம்ப நாளைக்கு முன்பு கேட்ட 'இளையநிலா பொழிகிறது' கொடுக்கிறேன். சுந்தர் வநது 'பாடும் நிலா பாலு' வில் போடாம இங்கே போட்டு ஏன்யா ராஜா பாட்டா மாத்துறீங்க. அது எஸ்.பி.பி பாட்டுய்யா என்று சொல்ல போகிறார். இந்த பாடலை பற்றி எல்லோருக்கும் நிறைய தெரிந்திருக்கும். இந்த பாடலில் இரண்டாவது prelude-ல் வரும் தனி கிடார் இளையராஜாவே வாசித்தது என்று கேள்வி பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இப்போ பாட்டு.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/ilaiyanila.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நம்ம தங்க்ஸ் (Thangs) எல்லா நேயர் விருப்பத்திலும் அழகாக ஒரு பாடலை கேட்பார். 'யேசுதாஸ்' பதிவை பார்த்துவிட்டு அவர் கேட்டப் பாடல் 'என் ஜீவன் பாடுது..உன்னைத் தான் தேடுது' பாடலை கேட்டிருந்தார். 'நீ தானா அந்த குயில்' படத்தில் இருந்து ராஜாவில் இசையில். யேசுதாஸின் தொடக்க ஹம்மிங் அருமை. எனக்கும் பிடித்த ஒரு யேசுதாஸ் பாடல் இது.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EnJeevanPaaduthu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இறுதியாக, வினதா அக்காவின் விருப்பத்தில் மீண்டும் ஒரு ஜானகி பாட்டு ( அது என்ன உஷா அக்காவும், வினதா அக்காவும் ஒரே மாதிரி ஜானகி பாட்டா கேட்டிருக்கீங்க). 'தந்துவிட்டேன் என்னை' படத்தில் இருந்து 'கண்களுக்குள் உன்னை எழுது'. டைரக்டர் மகேந்திரன் இயக்கத்தில் வந்த படம். இந்த பாட்டில் நிறைய இசை விசயம் இருக்கு என்று நினைக்கிறேன். வினதா அக்கா சொல்வார்கள். மற்ற படி ஒரு ரிப்பீட் பீட்டில் ராஜா ஒவ்வொரு இசையாக சேர்ப்பது ரொம்ப அழகாக இருக்கும் (interlude). ஜானகி ரொம்பவே அனுபவித்து பாடி இருப்பார். இதே போல இன்னொரு பாட்டு சொல்லனுமா 'உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' படத்தில் இருந்து 'காலை குயில்களே' பாடலை சொல்லலாம். இப்போ விருப்பப் பாடல்,&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Kankalukkul.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114095447340473376?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/02/5.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>28</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114066487768044070</guid><pubDate>Thu, 23 Feb 2006 03:19:00 +0000</pubDate><atom:updated>2006-05-10T16:19:33.806-07:00</atom:updated><title>உயிரே! உயிரே! உருகாதே! ( யேசுதாஸ்- 1)</title><description>யேசுதாஸ். கர்னாடக சங்கீதத்திலும், அதே சமயத்தில் திரை இசையிலும் கோலோச்சிய ஒரு ஜாம்பவான். அவரோட குரலுக்கு உருகாதவர் இருக்க மாட்டார்கள். என்னோட புடிச்ச பாடகர் பட்டியலில் ஏனோ எஸ்.பி.பி, அருண்மொழி, ஜெயசந்திரனுக்கு அப்புறம் தான் யேசுதாஸ் வருகிறார். அதற்கு ஒரே காரணம், எனக்கு கொஞ்சம் கர்னாடிக்கா இருந்தாலே என்னோட அறிவுக்கு அப்பாற்பட்டது போல் ஆகி விடுகிறது. நம்ம அறிவு அவ்வளவு தான். என்ன பண்ணுறது :-)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யேசுதாஸையே குத்தாட்டம் போட வைத்த ராஜா வாழ்க :-) ( 'தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நானு' - சிந்து பைரவி). செம பாட்டு. சிரிச்சிக்கிட்டே கேட்க ஒரு பாட்டு. யேசுதாஸும் கலக்கி இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்னாடக சங்கீதம் அலர்ஜியான என்னை போல பாமரனும் ரசிக்கும் வகையில் கர்னாடக சங்கீதம் கொடுக்க ராஜாவை விட்டா யார் உண்டு?. இந்த பதிவில் ஒரே படத்தில் இருந்து அப்படி ரெண்டு கிளாசிகல் பாட்டு..கேட்கலாமா..&lt;br /&gt;&lt;br /&gt;'ஒருவர் வாழும் ஆலயம்'. சிவகுமார்-ரகுமான் - பிரபு நடித்து நல்ல கதையோடு வந்த படம். இதில் சிவகுமார் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியார். பாட்டு வாத்தியார் என்றாலே ஒரு அழகான பொண்ணு இருக்கணுமேன்னு கேக்கறீங்களா...அதே..கை கொடுங்க..தமிழ் சினிமா என்ன மாதிரியே நெறைய பாப்பீங்க போல...அப்புறம் நம்ம ஹீரோவுக்கு என்ன வேலை..அதே..பாட்டு கத்துக்கொடுங்க மாஸ்டர் (மாமா :-) அப்படின்னு போய் நிற்க வேண்டியது..அப்புறம்..எல்லாம் தெரியும் தானே..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பட்ட படங்களில் ஒரே புண்ணியம்..நல்ல பாட்டுக்கு உத்திரவாதம் கொடுத்திருவாங்க. இந்த படத்தில் சிவகுமார் பாட்டு வாத்தியார். பாட்டு கத்துக்க போகும் மாணவன் ரகுமான். பொண்ணு பேரு தெரியலைங்க. பாட்டு அத்தனையும் அருமையோ அருமை..இங்கே கொடுக்க போகும் யேசுதாஸ் பாட்டு ரெண்டு..மனோவின் 'சிங்கார பெண் ஒருத்தி' மலேசியா- சித்ரா குரலில் 'மலையோரம்..விளையாடும் ' (கீதா ஏற்கனவே இதை போட்டுட்டாங்க), எஸ்.பி.பி-யின் 'பல்லவியே சரணம்' 'வானின் தேவி வருக'..இப்படி ஒரே படத்தில் எல்லோருக்கும் தீனி..நமக்கும் சேர்த்து தான்..&lt;br /&gt;&lt;br /&gt;அதில் இருந்து இரண்டு தான் இந்த பதிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாடல். 'நீ பௌர்ணமி..என்றும் என் நெஞ்சிலே'. இறந்து போன மனைவியை நினைத்து சிவகுமார் பாடும் பாட்டு. கண்ண மூடிக்கிட்டே கேட்டு பாருங்க. உங்களை எங்கோ எடுத்துச் செல்லும் இந்த பாட்டு. அருமையான வீணை, தபேலா இசை. யேசுதாஸ் குரலில் பாடல் கம்பீரமாக ஒலிக்கும். ராகதேவனின் இன்னொரு ராஜகீதம். இங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/NeePournami.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போ தலைப்பு பாடல். 'உயிரே! உயிரே! உருகாதே'. எனக்கு பிடித்த யேசுதாஸ் பாடலில் முதல் இடம் இந்த பாட்டுக்கு தான். உயிரை உருக்கும் ஒரு பாடல். இந்த பாடலை ரொம்ப உருக்கமாக படத்தில் படமாக்கி இருப்பார்கள். சிவகுமார் சாவின் விளிம்பில் இருந்து பாடும் பாடல். எதிர்பாட்டு அவரது மகளாக வருபவர் பாடுவது போல வரும். யேசுதாஸ் ரொம்பவே அழகாக குரலில் சோகத்தை, இயலாமையை கொண்டுவந்திருப்பார். ஜானகியை சொல்லவும் வேண்டுமா..ராஜாவின் டாப் 100ல் இந்த பாடலையும் வைக்கிறேன். உயிரே! உயிரே உருகாதே..உருகாமல் இருக்க முடியுமா..முயற்சி பண்ணுங்க..இங்கே..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/UyireUyireUrugaathe.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் இப்படி சங்கீத படங்கள் வருவதில்லை..ம்ம்ம்ம்ம்ம். :-(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114066487768044070?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/02/1_22.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>30</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114052440896198608</guid><pubDate>Tue, 21 Feb 2006 12:20:00 +0000</pubDate><atom:updated>2006-05-27T23:51:29.910-07:00</atom:updated><title>காதல் ஓவியம்</title><description>இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா. நம்மை ஏங்க வைக்கும் ஒரு கூட்டணி. அதில் ஒரு மகுடம் இந்த காதல் ஓவியம். 1982-ல் வந்த படம். இன்று வரை எனக்கு பார்க்க கொடுத்து வைக்கவில்லை. வியாபார ரீதியாக வெற்றியடையாதது ஏன்?. என்ன கதை?. எங்கே இவர்கள் தோற்றார்கள்?. விவரம் அறிந்தவர்கள் கூறுங்கள். வைரமுத்து இந்த படத்தை பற்றி 'நாங்கள் படத்தில் தோற்றிருக்கலாம். ஆனால் பாடலில் ஜெயித்தோம்' என்று கூறியிருப்பார். உண்மை தான். அந்த வெற்றிக்கு இந்த மூவரை தவிர இன்னொருவருக்கும் பங்கு உண்டு. அது பாடகர் எஸ்.பி.பி. இந்த நான்கு பேரில் யார் பங்கு அதிகம் இருந்ததென்று கேட்டால், அனைவருமே அவர்களுடைய முழுத்திறமையையும் காட்டி இருப்பார்கள் என்றே கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் மொத்தம் 8 பாடல்கள். இப்படி ஒரு படத்தை இயக்கி, ராஜாவிடம் பாடல் வாங்கிய பாரதிராஜா, அத்தனை பாடல்களையும் கவிதையாக்கிய வைரமுத்து, பாடலின் வரிக்கு வரி உயிர் கொடுத்து பாடிய எஸ்.பி.பி. இசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ?.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகுமரன் ரொம்ப நாளாக இந்த பதிவை கேட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் அவரிடம் இருந்து இந்த படத்தை, பாடல்களை பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 8 பாடல்களில் 6 பாடல்கள் எஸ்.பி.பி. ஒன்று ஜானகியின் தனிப்பாடல் (நாதம் என் ஜீவனே). 'பூஜைக்காக' மட்டும் தீபன் சக்கரவர்த்தி. அத்தனை பாடல்களையும் கொடுக்கிறேன் (முதன் முதலாக. என்னால் சில பாடல் என்று தேர்வு செய்ய முடியவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் கவிதை நன்றாக இருக்கிறது. இந்த இடத்தில் எஸ்.பி.பி நன்றாக பாடி இருக்கிறார். இந்த இடத்தில் இசை நன்றாக இருக்கிறது என்று பிரிக்க முடியாத காவியம் இது. அதனால் பாடலை அப்படியே போடுகிறேன். உங்களுக்கு தெரிந்ததை, தோன்றுவதை சொல்லி விட்டுச் செல்லுங்கள் (முக்கியமா முத்துகுமரன் :-)&lt;br /&gt;&lt;br /&gt;1. வெள்ளிச சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/VelliSalangaigal.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;2. ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது..&lt;br /&gt;    என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது&lt;br /&gt;   (அம்மா அழகே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/AmmaAzhage.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;3.நாதம் ஒன்று போதும்..எந்தன் ஆயுள் கோடி மாதம்..&lt;br /&gt;  தீயில் நின்ற போதும்..அந்த தீயே வெந்து போகும்.&lt;br /&gt; ( பூவில் வண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/PoovilVandu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;4. விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்&lt;br /&gt; விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்&lt;br /&gt; ( சங்கீத ஜாதி முல்லை)&lt;br /&gt;( இந்த பாடலை பற்றி பேச நிறைய இருக்கும். இல்லையா?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/SangeethaJaathi.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;5. நாதம் என் ஜீவனே..வா வா என் தேவனே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/NathamEnJeevane.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;6. குயிலே..குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/KuyileKuyile.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;7. சலங்கை ஓசை போதுமே..எந்தன் பசியும் தீர்ந்து போகுமே&lt;br /&gt;   (நதியில் ஆடும் பூவனம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/NathiyilAadum.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;8. பூஜைக்காக வாழும் பூவை ( இது தீபன் சக்கரவர்த்தி பாடியது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Poojaikkaka.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" controller="true" loop="False" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114052440896198608?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/02/blog-post_21.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>33</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-114014611496991452</guid><pubDate>Fri, 17 Feb 2006 03:15:00 +0000</pubDate><atom:updated>2006-02-16T23:06:43.246-08:00</atom:updated><title>ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - 1</title><description>தபேலா - ராஜாவுக்கு மிகவும் பிடித்தமான வாத்திய கருவி போல. அவரது 70% (குறைந்தது) பாடல்கள் தபேலாவை ஒட்டி தான் வரும். அதிலும் அவரது மெலோடி பாடல்கள் ('முத்து மணி மாலை' 'நிலவே முகம் காட்டு') எல்லாம் ஒரே மாதிரியான தபேலா மெட்டில் தான் இருக்கும். தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே அடி தான். டக்க..டக்க..டக்க அப்படின்னு ரிப்பீட்டு தான் (தலேபா வாசிப்பவர் கொடுத்து வச்சவர்). அதற்கு அவர் அந்த பாடல்களில் மெலோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இசை வித்தைகளை அடக்கி வாசித்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாவின் மொத்த பரிமாணங்களையும் வெளிக் கொண்டுவரும் பாடல்கள் மேடைப் பாடல்கள் தான். அதாவது மேடையில் ஆடி பாடி ஆடுவது போல வரும் பாடல்கள் தான். கலர் கலராக விளக்குகள் வெட்டி வெட்டி எரிய, குழுவினர் ஆட, கதாநாயகியோ, கதாநாயகனோ பாடுவது போல வரும் பாடல்களில் ராஜா நம் செவிக்கு நல்ல தீனி போட்டிருப்பார். அதில் சில பாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த மாதிரி பாடல்கள் இப்போ வரும் படங்களில் காண முடிவதில்லை. அப்படி ஒன்னொன்னு வந்தாலும், காது தான் கிழியுது :-).&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற பாடல்களில் ராஜா தபேலாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, டிரம்ஸ், ட்ரம்பட், எலக்ட்ரிக் கிடார் என்று கலக்கு கலக்கு என்று கலக்கி இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாடல், 'வா வா பக்கம் வா'. 'தங்க மகன்' படத்தில் இருந்து. வாணி ஜெயராம் பாடிய வெகு சில ராஜா பாடல்களில் அவருக்கு ஒரு வித்தியாசமான பாடல். ரஜினிக்கு எஸ்.பி.பி-ய விட்டா வேறு ஆள் உண்டா?. ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாடல். பாடலின் தொடக்கமே தூக்கலாம இருக்கும். போங்கோ (pongo) மாதிரி இரு வாத்தியத்தில் ஆரம்பிக்கும். அதோடு ட்ரம்பட் (Trumpet/Sax) சேர்ந்து அப்படியே ஒன்னொன்னா சேர்ந்துக்கிட்டே இருக்கும். கலக்கல் ஆரம்பம். பல்லவியில் ஒவ்வொரு வரி முடிந்தவுடன் குட்டியா ஒரு எலக்ரிக் கிடார் பிட் ஒண்ணு வரும். அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. இவ்வளவு சின்ன விசயத்தை ராஜா எவ்வளவு கலக்கலாக கொடுத்திருக்கிறார். கவனித்துப் பாருங்கள் ( 'வா வா பக்கம் வா' என்று முடிந்தவுடன்...'பக்கம் வர வெக்கமா' முடிந்தவுடன்). பாடலே ஒரு டிஸ்கோ பாட்டு. ஆனால் அதிலும் ஒரு மெலோடி பாடல் முழுவதும் நம்மை ஆட்டத்தோடு தாலாட்டவும் செய்யும். கேட்டுப் பாருங்க.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Vaapakkamva.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, ஒரு அரிய பாடல். 'கடல் மீன்கள்' படத்தில் இருந்து 'என்றென்றும் ஆனந்தமே'. இதை நான் ஏன் அரிய பாடல் என்று சொல்கிறேன் என்றால், 'கடல் மீன்கள்' படத்தில் 'தாலாட்டுதே வானம்' அளவுக்கு இந்த பாடல் மக்களை தொடவில்லை. கமல் படமாக இருந்தும், கமல் பாட்டாக இல்லாதது காரணமாக இருந்திருக்கலாம் (படத்தில் சுமன் மேடையில் ஆடிப்பாட, அம்பிகா கூட சேர்ந்து ஆடுவார்). மலேசியா வாசுதேவனின் டாப் 10-ல் இந்த பாடலை தாராளமாக வைக்கலாம். அவ்வளவு அருமையாக பாடி இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாடல் ஒரு தனி வயலின் ஆவர்த்தனம். இப்படி ஒரு டான்ஸ் பாட்டில் தனி வயலின் சேர்ப்பதே ஆச்சர்யம் தான். அதை கிட்டத்தட்ட ஒரு இணை குரல் அளவுக்கு இந்த பாடலில் பயன் படுத்தி இருப்பார். தனி வயலினுக்காக ரொம்ப ரசிக்கும் பாடல் இந்த பாடல் தான். அதுவும் சரணத்தில் ஆண் குரலோடு பின்னி பிணைந்து வயலினை விட்டிருப்பார். அதைக் கேட்டால், ஒரு பெண் அப்படியே ஆண் குரலோடு பின்னி பிணைந்து ஆடுவது போலவே கலக்கலாக இருக்கும் (மஞ்சள் நிற பூவெடுத்து...மங்கை உடல் சீர் கொடுத்து..கொஞ்சி வரும் பாட்டெடுத்து..வந்த சுகமே- பாடும் போது). கேட்டுப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EntrentrumAananthame.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது. வரும் பதிவுகளில் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-114014611496991452?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/02/1.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-113885481458446392</guid><pubDate>Thu, 02 Feb 2006 03:59:00 +0000</pubDate><atom:updated>2006-04-21T09:35:07.323-07:00</atom:updated><title>உச்சி வகுந்தெடுத்து ( S.P.B தனி ஆவர்த்தனம் - 3)</title><description>நண்பர்களே! S.P.B தனி ஆவர்த்தனம் மூன்றாவது பதிவை ஆரம்பிக்கிறேன். போன பதிவில் ராஜாவின் இசையில் S.P.B பாடிய சில பழைய பாடல்களை பார்த்தோம். இன்று அதே காலகட்டத்தில் ( 70S இறுதியில்) வந்த மற்ற இசை அமைப்பாளர்களின் சில அழியா வரம் பெற்ற பாடல்களை கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாடல்களை கேட்கும் போது எனக்கு இரண்டு விஷயங்கள் பிரமிப்பை உண்டு பண்ணும். ஒன்று, இவ்வளவு எளிமையான இசையிலும் எத்தனை தடவை கேட்டாலும் அலுப்பே தட்டாத கம்போசிங். இரண்டாவது எஸ்.பி.பி. மனுசன் ஒவ்வொரு வரியையும், வார்த்தையையும் பாடும் போது கொடுக்கும் உணர்வு என்ன, அழகு என்ன!. வெறுமனே எஸ்.பி.பி எப்படி பாடுகிறார் அப்படின்னு மட்டும் கவனித்து ஒவ்வொரு பாட்டையும் கேளுங்கள். இப்படி ஒரு பாடகர் கிடைக்க நாமெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ பாட்டுக்கு போகலாம். நமக்கு பழைய பாட்டு எல்லாம் கேட்பதோடு சரி, இசை அமைப்பாளர், இசை பற்றி சுத்தமாக அறிவு கிடையாது. எனவே நேரே பாட்டு தான். அடிக்கடி கேட்டு பாருங்க. மிஸ் பண்ணிடாதீங்க :-).&lt;br /&gt;&lt;br /&gt;1. முதலில் ராஜா இசையிலேயே தொடங்குகிறேன். 'உச்சி வகுந்தெடுத்து.. பிச்சிப்பூ வச்ச கிளி'. &lt;strong&gt;'ரோசாப்பூ ரவிக்கைக் காரி'&lt;/strong&gt; படத்தில் இருந்து.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/UchiVagideduthu.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;2. 'எதிர்ப் பார்த்தேன்..இளங்கிளியே காணலியே&lt;br /&gt;இளங்காத்தே...ஏன் வரல தெரியலையே...&lt;br /&gt;வா..ரா..ளோ என் மாது..பூங்காற்றே போ தூது"&lt;br /&gt;- &lt;strong&gt;அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/EdhirPaarthaen.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;3. 'அவள் ஒரு மேனகை..என் அபிமான தாரகை&lt;br /&gt;கலையெனும் வானிடை மின்னும் தேவதை..&lt;br /&gt;காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்..'&lt;br /&gt;- &lt;strong&gt;நட்சத்திரம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/AvalOruMenagai.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;4. ' வாடாத ரோசாப்பூ..நா ஒன்னு பார்த்தேன்..&lt;br /&gt;பாடாத சோகத்தோட..பாட்டும் பாட கேட்டேன்'&lt;br /&gt;- &lt;strong&gt;கிராமத்து அத்தியாயம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/VaadaathaRosapoo.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;5. 'பொன்னை நான் பாத்ததில்லை..பெண்ணை தான் பார்த்ததுண்டு&lt;br /&gt;பூவை நான் கண்டதில்லை...பூவையை கண்டதுண்டு..&lt;br /&gt;இந்த பூமியின் இன்ப தேவதை..அன்பு ராகம் நீயே தான்&lt;br /&gt;எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்..காதல் தீபம் நீயே தான்'&lt;br /&gt;- &lt;strong&gt;கண்ணாம்பூச்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/PonnaiNaanPaarthathillai.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-113885481458446392?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/02/spb-3.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>32</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-18159005.post-113867824636369155</guid><pubDate>Tue, 31 Jan 2006 03:20:00 +0000</pubDate><atom:updated>2006-02-12T20:35:11.363-08:00</atom:updated><title>இசைக் கதம்பம் - 3</title><description>இசைக்கதம்பம் போட்டு ரொம்ப நாளாச்சி. சரி இன்னைக்கு மறுபடி ஆரம்பிக்கிறேன். கேட்டு மகிழுங்கள் நண்பர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#009900;"&gt;ஹிட்டு பாட்டு:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கன்னி ராசி'. சூப்பர் காமெடி படம். கவுண்டமணிக்காகவே இந்த படத்தை பார்க்கலாங்க. அதுவும் சோத்துக்குள்ள இருந்து முட்டையை தோண்டி எடுப்பாரே, அந்த ஒரு காட்சி போதும் படம் பார்க்க. அதில் ஒரு எஸ்.பி.பி-வாணி ஜெயராம் பாட்டு 'ஆள அசத்தும் மல்லியே மல்லியே' . ராஜாவின் ரெகுலர் 80ஸ் கலக்கல். படத்தில் ரேவதி சின்ன பொண்ணா இருப்பாங்க. அவங்க குதித்து குதித்து இந்த பாட்டுக்கு ஆடும் அழகே தனிங்க. அருமையான டிரம்ஸ் இசை. கேட்டு ரசிங்க.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/AalaAsaththum.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#009900;"&gt;அடுத்தாத்து ஆல்பட்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஆதித்யன் வரும் போது எனக்கு ரொம்ப எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. 'அமரன்' படத்தில் 'வசந்தமே அருகில் வா' ரொம்ப அருமையான பாட்டு. அவரது சீவலப்பேரி பாண்டி பாட்டு எல்லாம் நல்லா ஹிட்டாச்சி. அவர் இசையமைத்த 'உதவும் கரங்கள்' 'தொட்டில் குழந்தை' எல்லாம் என்னோட விருப்ப பாடல்களில் இருந்தது. சுட்டு போட்டாரா, இல்லை சொந்த சரக்கா என்றெல்லாம் தெரியவில்லை. திடிரென்று சடை வளத்துக்கிட்டு ஜெயா டி.வில சட்டி கிண்ட போய்ட்டார். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அவர் இசையில் 'ரோஜா மலரே' படத்தில் இருந்து எனக்கு பிடித்த 'அழகோவியம் உயிரானது' . இது எஸ்.பி.பி பாட்டு. வேறேன்ன சொல்ல :-). எஸ்.பி.பி குரல் கலக்கலோ கலக்கல். பாட்டு இங்கே.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/Azhagoviyam.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;span style="color:#009900;"&gt;அக்கம் பக்கம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இன்று ராஜாவின் கன்னட பாட்டு ஒன்று கேட்கலாம். என்னிடம் சில கன்னட சி.டிக்கள் இருக்கிறது. ராஜாவின் மலையாள பாடல்கள் அனைத்தும் கேட்டிருக்கிறேன். எனக்கென்னமோ கன்னட பாடல்கள் ரொம்பவே நல்லா இருக்கு. மலையாளத்தில் ராஜாவுக்கு அந்த அளவு சுதந்திரம் இல்லையோ என்று தோன்றும். முதலில் பாடகர் தெரிவிலேயே யேசுதாஸை விட்டா யாரும் பாடினா மலையாளிகளுக்கு புடிக்காது போல. இல்லை ஸ்ரீகுமார் மாதிரி கொஞ்சம் மலையாள் வாடை உள்ள ஆட்கள் தான் பாட வேண்டும். எஸ்.பி.பியே சுத்தமாக ஆகாது. அவரே ராஜா இசையில் ஒன்றோ இரண்டோ தான் மலையாளத்தில் பாடி இருக்கிறார். மனோ, அருண்மொழி - வெட்டு தான். :-). பெண் குரலிலும் அப்படி தான். சித்ரா வரும் வரை வேறு வழியில்லாமல் ஜானகியை கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரே மாதிரி குரலால் எனக்கு எல்லா பாடல்களும் ஒரே மாதிரி ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இசை அமைப்பிலும் ராஜாவின் முத்திரை அவ்வளவாக எனக்கு தெரியவில்லை (குரு, சிறைசாலை தவிர) கன்னடத்தில் நிறைய வித்தியாசமான பாடல்களை பார்க்க முடிகிறது. இது என் அபிப்பிராயம் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று 'குலாபி' படத்தில் இருந்து ஒரு பாட்டு. 'கேளிசதே ப்ரேம வேதா'. ராஜா-எஸ்.பி.பி-சித்ரா குரலில். ஒரு தடவை கேட்டு தான் பாருங்களேன். ராஜாவின் தொடக்க குரல் அறுவடை நாள் பாடலை நினைவு படுத்தும். அருமையான மெலோடி பாட்டு.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/KelisadePrema.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#009900;"&gt;காணவில்லை:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;'பாரு பாரு பட்டணம் பாரு' இப்படி ஒரு படம் வந்ததாங்க. தெரிந்தவர்கள் சொல்லுங்க. கல்லூரி படிக்கும் போது ஊரில் உள்ள கடையில் கேசட் பதிந்து அடுக்கி வைத்திருப்பேன். ஒவ்வொரு கேசட்டுக்கும் கலெக்சனுக்கு ஏத்த மாதிரி தலைப்பு எழுதி வைத்திருப்பேன். அப்படி ஒரு கலெக்சனுக்கு 'யார் தூரிகை தந்த ஓவியம் - இளையராஜா' அப்படின்னு இந்த பாடலின் தொடக்கத்தை எழுதி வைத்திருப்பேன். ராஜாவின் தூரிகை தந்த ஓவியங்கள் தானே எல்லா பாடல்களும். அதிலும் இந்த பாடல் ரொம்ப அருமையான ஓவியம். என்னோட Favorite உமா ரமணன்-ம் எஸ்.பி.பியும் சேர்ந்து பாடும் ஒரு அருமையான பாட்டு. உமா ரமணன் குரலில் எப்போதும் எனக்கு ஒரு கிறக்கம் உண்டு :-) ரொம்ப வித்தியானமான கம்போசிங். வித்தியாசமான கிடார் இசை. சின்ன வயசில் இருந்தே என்னோட Favorite இந்த பாட்டு. உங்களுக்கு எப்படி?&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed align="center" src="http://www.geocities.com/iirpithan/Geetham/YaarThoorigai.rm" width="230" height="50" type="audio/x-pn-realaudio" autostart="false" loop="False" controller="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18159005-113867824636369155?l=geethamsangeetham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://geethamsangeetham.blogspot.com/2006/01/3.html</link><author>noreply@blogger.com (சிவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>16</thr:total></item></channel></rss>